சென்னை: ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களால் விஜய் டென்ஷனில் உள்ளாராம்.ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தை ரிலீஸ் செய்ய படாதபாடு பட்டார்கள். இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள கத்தி படத்திற்கு தயாரிப்பாளர் உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்க ஜெயா டிவி முன் வந்தது. ஆளுங்கட்சி டிவியிடம் படம் செல்வதால் பிரச்சனை இன்றி ரிலீஸாகும் என்று நிம்மதியாக இருந்தார்கள். இந்நிலையில் தான் அவர்களின் நிம்மதி கெடும் வகையில் அந்த தகவல் வெளியானது.
கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டு வைத்துள்ளது ஜெயா டிவி என்று செய்திகள் வெளியாகின.
இத்தனை பிரச்சனை இருக்கையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு கொடுத்தும், பட்டாசுகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் தயாரித்த கத்தி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை கொண்டாடியுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை தனது ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.
பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு மட்டும் அல்லாமல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டது போன்று யாரோ ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனால் விஜய் செம டென்ஷனில் உள்ளாராம்.
‘லிங்கா’வில் ஒரு பாடலில் த்ரிஷா….?!
ஆனால், திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் த்ரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது. கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் கூட அவர் ஜோடி சேர்ந்து விட்டார். ஆனால், என்னமோ ரஜினிகாந்துடன் மட்டும் அவரால் ஜோடி சேரவே முடியவில்லை.
இதனிடையே ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாட உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பாடலுக்கு நடனமாட த்ரிஷாவை அழைத்தார்களாம்.
ஆனால், ரஜினியுடன் ஜோடியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரும் த்ரிஷா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா அப்படி நடிப்பதில் தவறில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.
ஏனென்றால் ரஜினியுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா கூட அதன் பின் ‘குசேலன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்கிறார்கள்.
சிறிய படங்களில் அப்படி ஒரு பாடலுக்கு நடமாடினால்தான் கௌரவக் குறைச்சலாக இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படங்களில் நடிப்பது சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு கௌரவத்தைத்தான் கொடுக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
இப்போது முன்னணி நடிகைகள் பலரும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை ஒரு ஃபேஷனாகவே மாற்றிவிட்ட நிலையில், அதெல்லாம் தற்போது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுவதில்லை என்கிறார்கள். அதனால், த்ரிஷா விரைவில் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தலைப்பை பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம், அதைச் சொன்னதும் கூட ஒரு அழகான ஹீரோயின்தான், ஆனால் இன்றைய ஹீரோயின் அல்ல 70, 80களின் ஹீரோயின்.
கமல்ஹாசனுக்கு நாயகனாக ஒரு நல்ல உயர்வைக் கொடுத்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கமல்ஹாசன் அப்பாவையே காதலித்த இளம் பெண்ணாக நடித்தாரே ஜெயசுதா அவர்தான் அப்படி சொல்லியிருக்கிறாராம்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்குப் பின் பல தமிழ்ப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் ஹீரோயினாகவும், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தவர் ஜெயசுதா. தற்போது தெலுங்குப் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அவர் நாயகியாக நடித்த காலங்களில் மிகவும் குறைவான சம்பளமே வாங்கியதாக தெரிவித்துள்ளார். “அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கினோம். ஆனால், இன்றைய ஹீரோயின்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.
நான் சில படங்களில் 1 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் கூட வாங்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் நாங்கள் பயணம் செய்தது கூட இரண்டாம் வகுப்பு ரயில் பயணங்கள்தான்.
ஆனால், இன்று அவர்களுக்கெல்லாம் விமானப் பயணம் மட்டுமே. இன்று ஹீரோயின்களுக்கென பேன்சியான கேரவன்கள் உட்பட பல வசதிகள் கிடைக்கின்றன. எங்களுக்கு ஒரு சேரும், பேட்டரி பேன்கள் மட்டும்தான் தரப்படுகின்றன.
இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடித்தாலே போதும், இன்றைய ஹீரோயின்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்,” என்கிறார்.
அந்தக் காலத்துல…என இப்போது யார் பேசினாலும் யாருமே அதைக் காது கொடுத்துக் கேட்பதில்லையே….!