Site icon ilakkiyainfo

தமிழற்ற பிரச்சினைக்குத் தீர்வு என்ன? – வடபுலத்தான்

 

உருத்திரகுமார் கொம்பனி தனிநாடுதான் எண்டு சொல்லி, அதுக்கெண்டு தனியTNA in electionாக நாடு கடந்த அரசாங்கத்தையே உருவாக்கி வைச்சிருக்கினம். அந்த அரசாங்கத்துக்கெண்டு அமைச்சரவையே இருக்கு. அதுக்கு உருத்திரகுமாரன்தான் பிரதமராகவும் இருக்கிறார்.

ஆனால், இந்த நாடு கடந்த அரசாங்கமும் அதின்ரை அமைச்சர்களும் இந்தப் பிரதமரும் என்னத்தைத்தான் செய்து கொண்டிருக்கினம் எண்டு எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது.

இந்த அரசாங்கத்துக்கு முன்னுக்கும் பின்னுக்கும் உள்ளயும் வெளியிலயும் எண்டு ஆயிரம் படிச்ச மனிசர் எல்லாம் இருக்கினம்.

ஆனால், எல்லாருக்கும் ஒரே மாதிரித்தான் இதயம் வேலை செய்யும். தமிழ்த்தேசியத்தை புத்திஜீவித்தனமாக பாதுகாக்க வேணும். அதைப்பற்றி இங்கிலிஷ்சில நல்லாய்ப் பேசவேணும். மறந்தும் சனங்களைப்பற்றி, பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி இவையின்ரை இதயம் சிந்திக்காது. ஒரு துளி ஈரம் கூடப் பிறக்காது.

மற்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறூப்.

பிரிந்து போகக் கூடிய சுயாட்சியை அல்லது தனித்தமிழீழத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கு இந்த அணி.

இலங்கை அரசாங்கத்தை அதாவது மகிந்த ராஜபக்சவைக் கவிழ்த்தே தீருவேன் எண்டு சொல்லி போர்க்குற்ற விசாரணையை நடத்த வேணும் எண்டு முழு மூச்சாக இயங்கிக் கொண்டிருக்கு.

உள்ளுரில இந்தக் குறூப்புக்கு பெரிய செல்வாக்கில்லை எண்டாலும் ஒண்டிரண்டு தலைகள் ஆடிக்கொண்டுதானிருக்கு.
மற்றும்படி இவையும் உருப்படியாக ஒரு மசிரையும் புடுங்கிறேல்ல. சும்மா இடைக்கிடை அங்கினை, இங்கினை எண்டு ஒண்டிரண்டு கூட்டங்கள் நடத்துவினை. இருந்தாற்போல ஊர்வலம், போராட்டம் எண்டு ஒரு பத்துப் பதினைஞ்சு சனங்களோட தாங்களும் ஒரு பத்துப்பேர் நிண்டு ஸ்பீக்கரில கத்துவினம். நாலு படத்தைப் பிடிச்சு இணையத்திலயும் தமிழ்ப்பேப்பர்களிலயும் போடுவினம்.

இந்த லட்சணத்திலதான் இவையின்ரை போராட்டமும் புரட்சியும் அரசியலும் போய்க்கொண்டிருக்கு.

அடுத்தது இணையத்தில புரட்சி செய்யிற புடுங்கிகளும் இணையத் தேசியவாதிகளும்.

இப்ப இவையின்ரை தோளிலதான் தமிழ்த்தேசியத்தின்ரை முழுப்பாரமும் இறங்கியிருக்கு.

அதால இரவுபகலாக நிண்டு கொண்டு அரும்பாடெல்லாம் பட்டு, அதை – அதுதான் தமிழ்த்தேசியத்தைப் பாதுகாத்துக்கொண்டிருக்கினம்.

பெரிய ஒரு கோட்டைக் கிழிச்சு வைச்சுக்கொண்டு தம்பி நீ அந்தப்பக்கமா இந்தப்பக்கமா? எண்டு கேட்கினம். அந்தப் பக்கம் எண்டால் துரோகி. இந்தப்பக்கம் எண்டால் தியாகி. அண்ணை நீங்கள் எந்தப்பக்கம் எண்டு எல்லாரையும் கேட்டுக்கேட்டு – ஆட்களை மணந்து பார்த்து ஒவ்வொருத்தருக்கும் குறி சுட்டுக்கொண்டிருக்கினம்.

இவையை நினைக்க, எனக்கு சின்ன வயசில நாங்கள் கூட்டாளிப் பெடியளுக்குப் பகிடியாகப் பட்டப்பெயரை வைச்சுக்கொண்டு கேலியாகத் திரிஞ்சதுதான் ஞாபகத்துக்கு வருது.

இவையின்ரை வேலையே இந்தக் குறி சுடுகிறதுதான்.

இப்பிடித் துரோகப்பட்டியலைத் தயார்ப்படுத்திறதுதான் இவையின்ரை தேசியப்பணி.

இவையைத்தான் இணையப்போராளிகள் எண்டும் சிலபேர் சொல்லுகினம்.

இவை எல்லாருக்கும் மேல இருக்கு இன்னொரு எம்டன் குறூப். அதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

பச்சைப் புலுடா விட்டுக்கொண்டு, ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாகக் கதைச்சுக்கொண்டு, ஒற்றுமையைப் பற்றிப் பேசிக்கொண்டு தனித்தனி றூட்டில ஓடிக்கொண்டு, தேர்தலுக்கும் லாபத்துக்கும் ஒண்டாச் சேர்ந்து கொண்டு இந்தக் கூட்டமைப்பு இருக்கடா சாமி இருக்கடா…..

இது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும். இந்தியாவை ஏமாற்றும். கொழும்பை ஏமாற்றும். தனக்கு வாக்குப்போட்ட சனங்களை ஏமாற்றும்.

எண்டாலும் என்னதான் கெட்டித்தனம் இருந்தாலும் இதால வரலாற்றை ஏமாற்ற முடியுமோ….!

இப்ப மெல்ல மெல்ல இந்தக் கூட்டமைப்பின்ரை சாயமும் வெளுக்கத் தொடங்கீட்டுது.

எண்டாலும் இந்தக் கிழிஞ்ச தமிழ்த்தேசியப் பழஞ்சீலைக்கு இன்னும் ஒட்டுப்போட்டுக்கொண்டிருக்குதுகள் கொஞ்ச ஊடகங்கள்.

இந்த ஊடகங்கள் வாய்கிளிய ஜனநாயகத்தைப்பற்றிப் பறையிறது. ஆனால், நடக்கிறதோ கறுப்பு வெள்ளைத்தனமாக.

இந்தச்சீரிலையும் சிறப்பிலையுந்தான் தமிழ்த்தேசியமும் தமிழற்றை பிரச்சினையும் தீர்வும் தமிழீழமும் இருக்கு.

சோக்காத்தான் இருக்கு எல்லாம்.

ஒ… அடுத்த தேர்தலுக்கு எப்படி வாக்குப்போடப்போறியள்….?

Exit mobile version