யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை தெற்கு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவா் காயமடைந்துள்ளனா்.
இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த இருவரில் கடும்காயங்களுக்குள்ளான இளைஞன் தனது பள்சா் ரக மோட்டாா் சைக்கிளில் அதி வேகமாக வந்து கட்டுப்பாட்டையிழந்து மற்றைய மோட்டாா் சைக்கிளுடன் மோதியதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்துள்ளா்.
குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சுயநினைவற்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வர்ணபுத்திரன் ரூபன் (23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு படுகாயமடைந்தவராவாா். அவ்வழியால் வாகனங்களில் உயரதிகாரிகளோடு வந்த படையினரே உடனடியாகச் செயற்பட்டு இருவரையும் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளன
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரெழுவில் மின்சாரம் தாக்கி கருகி இறந்தா் இளைஞன்
04-10-2014
மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வர்தகர் ஒருவரின் வீடொன்றில் நேற்றிரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் அச்சுதன் (வயது 21) என்ற உயர்தரம் கற்று வரும் இளைஞனே உயிரிழந்தவராவார்.
பிரஸ்தாப இளைஞன் வீட்டில் தனித்திருந்த நிலையில் மோட்டார் நீர்ப்பம்பி அறையினுள் மின்சார தாக்குதலுக்குள்ளாகி உடல் கருகி உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வர்தகர் ஒருவரின் வீடொன்றில் நேற்றிரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் அச்சுதன் (வயது 21) என்ற உயர்தரம் கற்று வரும் இளைஞனே உயிரிழந்தவராவார்.
பிரஸ்தாப இளைஞன் வீட்டில் தனித்திருந்த நிலையில் மோட்டார் நீர்ப்பம்பி அறையினுள் மின்சார தாக்குதலுக்குள்ளாகி உடல் கருகி உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
– See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=34135&cat=nnews&sel=current&subcat=14#sthash.vWLX8S19.dpuf