கோபனி: சிரியாவின் எல்லை நகரமான கோபனி நகரை கைப்பற்றுவதற்காக உக்கிர யுத்தத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் வான்படை தாக்குதல்களையும் மீறி கோபனி நகரின் முக்கிய பகுதிகள் இன்று தீவிரவாதிகள் வசமாகி இருக்கிறது.
சிரியா-துருக்கி எல்லையில் உள்ளது கோபனி நகரம். இங்கு குர்து இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த நகரைக் கைப்பற்றுவதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கினர்.
குர்து போராளிகள்
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக குர்து ஆயுதம் தாங்கிய படையினர் யுத்தம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் வான்படைகளும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கோபனி நகரின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி முன்னேறிச் செல்கின்றனர். அதே நேரத்தில் குர்து போராளிகளுக்கு துருக்கி பகுதியில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் தடுக்கப்படுவதால் அவர்களால் நிலைமையை சமாளிக்க இயலவில்லை.
கொபானி : சிரியாவில் “குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்” – (கட்டுரை)