ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»ஜெயலலிதா சிறையில்: 14 நாளில் 154 பேர் உயிரிழப்பு
    இந்தியா

    ஜெயலலிதா சிறையில்: 14 நாளில் 154 பேர் உயிரிழப்பு

    AdminBy AdminOctober 10, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்று இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன.

    ஜெயலலிதா திடீரென சிறையில் அடைக்கப்பட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சி தாங்க முடியாதபடி இருந்ததால் பலர் உயிரிழக்க நேரிட்டது.

    இதற்கிடையே ஜெயலலிதா மீது பற்றும், பாசமும் கொண்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி தீ குளித்தனர். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் பல அ.தி.மு.க.வினர் உயிரிழக்க நேரிட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா கடந்த மாதம் 27–ம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 154 பேர் அவருக்காக உயிரிழந்து இருப்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த 154 பேர் பெயர் விபரத்தை மாவட்ட வாரியாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    154 பேரும் ஜெயலலிதாவுக்காக எப்படி மரணம் அடைந்தனர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் 113 பேர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிய வந்துள்ளது.

    மேலும் 14 அ.தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். 15 பேர் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர்.

    அது போல ஜெயலலிதா விடுவிக்கப்படவில்லை என்பதை அறிந்ததும் 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஒரு அ.தி.மு.க. பிரமுகர் பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.

    இரண்டு பேர் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிர் விட்டதாக அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் அம்மாவுக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட முதல் ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். உண்ணாவிரதம், கடையடைப்பு போன்றவை நடத்தப்பட்டன.

    இத்தகைய போராட்டங்களால் தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டன. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவதை தற்போது அ.தி.மு.க.வினர் கைவிட்டுள்ளனர்.

    இதையடுத்து ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டி கோவில்களில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதா பெயருக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இது தவிர ஜெயலலிதா ராசி மற்றும் நட்சத்திரப்படி பழமையான கோவில்களில் பரிகார பூஜைகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா உத்தரவைத் தொடர்ந்து பெங்களூர் சிறைப் பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், அதற்கு பதில் கோவில்களில் பூஜைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

    ஜெ.வுக்காக 100 பேர் இறந்ததில் உண்மை என்ன?: இது திமுக பிரமுகரின் ‘திடுக்’ தகவல்

    Post Views: 27

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    6-மாத குழந்தையை 50 இடங்களில் எலிகள் குதறிய பயங்கரம்: பெற்றோரை கைது செய்த காவல்துறை

    September 23, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2014
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version