ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒரு விளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.
அப்படியென்ன விளம்பரம் என நினைப்பவர்கள் மேலே உள்ள படத்தை பார்க்கவும். இப்படி ஒரு விளம்பரத்தை வேனில் வைத்தால் எப்படி விபத்துக்கள் நடக்காமல் இருக்கும்?
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் Sarafan Advertising Agency, என்ற விளம்பர நிறுவனம் வித்தியாசமான விளம்பர யுக்தி ஒன்றை செய்துள்ளது. பெண்ணின் மார்பை மிகப்பெரிய அளவில் வரைந்து அந்த படத்தை 15 வேன்களின் பக்கவாட்டு பகுதியில் வைத்தது.
வேனின் பக்கவாட்டு பகுதியில் இதுபோன்று உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தால் அதிக மக்களை சென்றடையும் என்ற கருத்தை சொல்வதற்காகத்தான் இந்த விளம்பரம் என்று கூறுவதற்காக இந்த ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது.
இந்த விளம்பர நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே 24 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த விளம்பரத்தை பார்த்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் டிரைவிங் செய்துகொண்டே இந்த விளம்பரத்தை பார்த்ததால், விபத்தில் சிக்கியுள்ளனர்.
ஒரே நாளில் இந்த விளம்பரத்தால் 514 விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்துள்ள Sarafan Advertising Agency, எங்கள் விளம்பர யுக்தி மக்களை சென்றடைந்துள்ளது என்பது இந்த விபத்துக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெண்ணின் மூக்கில் சொகுசாக வாழ்ந்த அட்டை (அதிர்ச்சியூட்டும் படங்கள்)
பிரித்தானியாவில் பெண் ஒருவரின் மூக்கில் இருந்து மூன்று அங்குலம் உடைய அட்டையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். பிரித்தானியாவின் இடின்பெர்க் நகரை சேர்ந்தவர் டேனியலா லிவரேனி என்ற பெண்ணே இந்த விசித்திரமான பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேனியலாவுக்கு நீண்ட நாட்களாகவே மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது.பின்னர் வீடு திரும்பிய டேனியலாவுக்கு இரத்தம் வரவில்லை என்றாலும் மூக்கில் ஏதோ குத்துவது போல இருந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது தான் மூக்கில் அட்டை இருந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக மருத்துவர்கள் மிகுந்த சிரமத்துடன் அட்டையை நீக்கியுள்ளனர்.
சிறியதாக இருந்த போது சென்றிருக்கலாம் என்றும், இரத்தத்தை குடித்து இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வியட்நாமில் உள்ள குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் போது வாய் வழியாக சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நடுவானில் பறந்த பயணிகள் விமானத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டதால் பரபரப்பு (வீடியோ)
நடுவானில் பறந்த அமெரிக்கன் எயார் லைன்ஸ் விமானமொன்றின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அது மோசமாக குலுங்க ஆரம்பித்ததையடுத்து அந்த விமானம் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து டலஸை நோக்கிப்புறப்பட்ட போயிங் 757 விமானத்தில் திடீரென பாரிய சத்தம் ஏற்பட்டு அதுகுலுங்க ஆரம்பித்ததுடன் விமான உட்சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டுள்ளனர். எனினும் அந்த விமானம் அவசர கால நிலையின் கீழ் சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் பாதுகாப்பாக தலையிறக்கப்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட விமானத்தின் சுவர்கள் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியல்ல எனவும் அதனால் விமானத்தின் உட்புறத்திலான அமுக்கத்தில் மாறுபாடு எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தின் அமுக்கம் மாறுபடுவது விமானம் வெடித்துச்சிதறக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.