ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும்
    உள்நாட்டு செய்திகள்

    வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும்

    adminBy adminOctober 16, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் வடக்கிற்கு செல்லவே வேண்டுமானால் பயணத்தின் நோக்கம், செல்லுமிடங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி ஏற்கனவே அமுலிலிருந்த இந்த நடைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

    வெளிநாட்டு கடவுச்சீட்டுள்ளவர்கள் நாட்டின் வட மாகாணத்திற்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர் வடக்கிற்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டே இத்தடைகள் கொண்டு வரப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் அனைத்தையும் நிராகரித்த பிரிகேடியர், இச்செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை எனவும் தெரி வித்தார்.

    பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில்;

    பல வருட பயங்கரவாத செயற்பாடுகளினால்  பாதிக்கப்பட்டிருந்த வடபகுதியை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்த பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    அரசாங்கம், அரச நிறுவனங்கள், வெளிநாடுகள், ஐ.நா. அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த அபிவிருத்தி பணிகளுக்காக உதவி, ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

    இவ்வாறு வடக்கிற்கு செல்பவர்களில் 99 வீதமானவர்கள் நல்ல நோக்கங்களுடன் சென்று வருகின்ற போதிலும், ஒரு சிலர் உதவி என்ற போர்வையில் சென்று இனங்களுக்கு  இடையில் பிரிவினையை  ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

    இது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத் தல்களை ஏற்படுத்தும் ஒன்றாகும். எனவே, பிரிவினை வாதத் தையும் பிரச்சினைகளையும் மீண்டும் ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனாலேயே ஏற்கனவே இருந்த நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்ப ட்டுள்ளது.

    இதன் அர்த்தம், வெளிநாட்டு கடவுச் சீட்டுள்ளவர்கள் எவரும் வடக்கிற்கு போக வேண்டாம். அல்லது போகத்தடை என்பதல்ல. மாறாக ஏதாவது ஒரு தேவைக்காக, நோக்கத்திற்காக வடக்கிற்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சுக்கு அறியத்தந்து முன் அனுமதி பெற்றுச் செல்ல முடியும்.

    அவ்வாறு செல்ல விரும்புபவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, 152, பாலதக்ஷன மாவத்தை, கொழும்பு – 03 (Ministry of Defence and Urban Development, 152, Baladakshana Mawatta, Colombo – 03) என்ற முகவரிக்கோ அல்லது 0112328109 என்ற பக்ஸ் இலக்கத்திற்கோ கடிதம் மூலம் அறியத் தருமாறு கேட்டுக்கொள்வதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

    Post Views: 423

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    கொழும்பில் பயங்கரம் – கர்ப்பிணியை கத்தியால் குத்தி வயிற்றிலிருந்த குழந்தையை கொன்ற கணவர்

    May 21, 2022

    ரயிலுடன் வேன் மோதி விபத்து: நால்வர் காயம்

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    October 2014
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022

    சுறாக்களின் யுத்தத்தில் சிறுமீன்களின் தத்தளிப்பு

    May 22, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    • இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version