யாழில் கடந்த இரு வார காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 397 பேரை கைது செய்துள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவிற்குட்பட்ட ஒன்பது பொலிஸ் நிலையங்களினாலும் 251 பேரும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட எட்டு பொலிஸ் நிலையங்களில் 146 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் அடித்துக் காயப்படுத்தியமை தொடர்பாக 102 பேரும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட 06 பேரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பாக தலா ஒருவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சந்தேகத்தின்பேரில் 31 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 33 பேரும்……….
வீதி விபத்துக்கள் தொடர்பாக 5 பேரும் மோசடிகளில் ஈடுபட்ட 6 பேரும் களவில் ஈடுபட்ட 11 பேரும் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரையும் குடிபோதையில் களகம் விளைவித்த இருவரையும் குடிபோதையில் வாகனம் செலுத்தியது 7 பேரையும்..
மோசடி சம்பந்தமாக ஒருவரையும், சட்டவிரோதமாக வீட்டுக்குள் நுழைந்த இருவரையும் கடற்சட்டத்தை மீறியமை தொடர்பாக நால்வரையும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒருவரையும் வீட்டு உடைமைகள் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பாக 6 பேருமாக 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 10 பேரும் சட்டவிரோத மது விற்பனை செய்தமை தொடர்பில் 16 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 21 பேரும் சந்தேகத்தின்பேரில் 21 பேரும் மது போதையில் வாகனம் செலுத்திய 4 பேரும் ஏனையகுற்றங்கள் தொடர்பில் 74 பேருமாக 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.