ஈராக் மற்றும் சிரியாவில் தங்கள் ஆதிக்கத்தை முழு அளவில் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் முஸ்லீம் நாடுகளை இணைத்து தனி நாடாக மாற்ற முயற்சி செய்த் வருகின்றனர்.
தங்களிடம் சிக்கிய பணயக்கைதிகளின் தலையை துண்டித்தும், ஈராக் மற்றும் சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வரும் இந்த தீவிரவாதிகளை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் அவ்வப்போது தாக்கி வருகின்றன.
இந்நிலையில் சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அல்–பாப் என்ற நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை அலுவலகத்தை வீடியோ எடுத்த ஒருவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று அவரது பிணத்தை சிலுவையில் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
மேலும் அவர் செய்த குற்றங்களை ஒரு பெரிய அட்டையில் எழுதி அவருடைய பிணத்தில் ஒட்டியுள்ளனர். அதில் கொல்லப்பட்டவர் பெயர் மற்றும் செய்த குற்றம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.
‘ஐ.எஸ்.’ அமைப்பை உளவு பார்ப்பவர்கள் மற்றும் தங்களது மதத்தில் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு இது போன்ற தண்டனையை தீவிரவாதிகள் வழங்குகின்றனர். கொல்லப்பட்டவர்களை 3 நாட்கள் சிலுவையில் கட்டி தொங்க விடுகின்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய சன்னிப் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் பாக்தாதில் உள்ள ஷியா பிரிவினர் தொழுகை நடத்தும் அபாஸ் அல் அத்லி மசூதியை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்-யை சேர்ந்த சில தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
தொழுகை முடிந்து அனைவரும் புறப்படும் வேளையில் தாங்கள் நிரப்பி வந்த வெடிப் பொருட்களை அவர்களை வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்த பயங்கர தாக்குதலில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதே பகுதியில் கடந்த சனிக்கிழமை அடுத்தடுத்து நடந்த மூன்று மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 26 பேர் கொல்லப்பட்டதும் 96 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.