ஜெனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் இன்னும் தேர்தல் களத்திற்கு வரவில்லை. ஆனால்… கூட்டமைப்பினர் வெள்ளை வேட்டியணிந்து, வெள்ளை சட்டையணிந்து… வீரம்மிகு வசனங்கள் பேசிக்கொண்டு.. “மைக்கை” தூக்கிக்கொண்டு வாக்கு சேகரிப்பதற்காக மேடையேறி விட்டார்கள்.
யாரை ஜெனாதிபதியாக தெரிவுசெய்வதற்கு வாக்கு கேட்கின்றார்கள் என்பது இன்னும் சரியா தெரியவில்லை. போரை மிகவும் மோசமாக நடத்தி முடித்த சரத்பொன் சேகாவை திரும்பவும் தெரிவு செய்துள்ளார்களோ தெரியவில்லை??
மக்களுக்கு என்னென்ன தேவைகளோ? (அடிப்படை தேவைகள், அபிவிருத்தி) போன்றவற்றை செய்வது அரசாங்கத்தின் கடமையாம் (கூட்டமைபினர்களுக்கு மக்களுக்கு செய்யவேண்டிய எந்தொவொரு கடமையும் கிடையாது என்பது இங்கு முக்கியமானது).
கூட்டமைப்பினரின் கடமை யாதெனில்… அவர்களின பிள்ளைகள், குடும்பங்களுக்கு என்னென்ன தேவைகளோ அவற்றை மட்டும் நிறைவேற்றி கொள்வது, வெளிநாட்டுக்கு சுற்றுலா வந்து தங்களின் குடும்பங்களை பார்த்து அளவளாவி, சுகம் விசாரித்து விட்டு, முடிந்தவரை எதையாவது சொல்லி புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை வாங்கிகொண்டு போவது..
இதைக் கருத்தில் கொண்டு… தங்களுக்கு 60வருடமாக தொடர்ந்து வாக்களித்தது போன்று தமிழ் மக்கள் கடமை தவறாமல் தங்களுக்கு வாக்கு போடவேண்டுமாம்… இதுதானுங்கு தமிழ் மக்களாகிய நீங்கள் செய்யவேண்டியது..
வீடியோவை பாருங்கள்.. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரபவணபவன் என்ன சொல்கிறார் என்பதை..