வட கிழக்கு இந்தியாவில் உள்ள காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாசின்ராம் என்ற இந்தக் கிராமம்தான் உலகிலேயே மிக அதிக சராசரி மழை பொழியும் இடம்.
ஒரு முறை இந்தப் பகுதியில் ஒரே ஆண்டில் 2,540 செண்டிமீட்டர் மழை பொழிந்தது. இது ஒரு உலக சாதனை.
உலகில் மிக அதிக மழை பொழியும் மாசின்ராம் கிராமம்.
“இங்கே எப்போது மழைதான்; அதைப்பற்றி நினைத்தால் எங்கள் வேலையைப் பார்க்கமுடியது” என்கிறார் உள்ளூரில் உள்ள கசாப்புக்கடைக்காரர், வின்செஸ்டர் லின்கொய்.
வழமையாக மழைக்குப் பாதுகாப்பாக இருக்கும் குடைகளைத் தவிர, “நுப்” என்றழைக்கப்படும் இந்த ஒரு வித தலைக் கவசமும் இந்தப்பகுதி உழைக்கும் மக்களிடையே பிரபலம் என்கிறார் புகைப்படக்கலைஞர் சாப்பல்.
மூங்கில் மற்றும் வாழை இலைகளால் செய்யப்பட்ட இந்த நுப் தலை மேல் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வித படகு போலத் தோற்றமளிக்கிறது.
பெய்யெனப் பெய்யும் மழை
பருவமழைக்காலத்தில், இந்தியாவில் பெய்யும் மழையில் 80 சதவீதம் இந்தப் பகுதியில் பெய்கிறது.
இந்தியாவில் ஒரு வருடத்தில் பெய்யும் மொத்த மழையில் 75 சதவீதம் ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் பெய்துவிடுகிறது
மழை பொய்க்காது பெய்தால், விவசாயம் செழித்து, பொதுவாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு ஊக்கம் கிடைக்கிறது.
பருவ மழை பொய்த்தால் பொருளாதாரம் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறது.