சிரிய நாட்டு முதியவர் ஒருவர் விபசார குற்றச்சாட்டுக்கு உள்ளான தனது மகளை கல்லெறிந்து கொல்லும் திகதி குறிப்பிடாத வீடியோ ஒன்றை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ மத்திய ஹமா மாகாணத்தில் எடுக்கப்பட்டது என்று சிரிய உள்நாட்டு யுத்தம் குறித்து கண்காணித்து வரும் பிரிட்டனை மையமாகக் கொண்ட கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
(Sickening: The woman is seen pleading for her life before being stoned to death by men – including her father)
ஐ.எஸ். தனது ஆளுகைக்கு உட்பட்ட சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் சிறுபான்மையினரை படுகொலை செய்வது உட்பட கொடூரமான நடைமுறையை கையாள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
கடுமையான இஸ்லாமிய சட்டத்தை கடைப்பிடிப்பதாக கூறும் ஐ.எஸ். பொதுமக்களை படுகொலை செய்வது போன்ற வீடியோக்களை இணையதளங்களில் போட்டு வருகிறது. இதில் ஐ.எஸ். இடம் சிக்கிய எதிரணி படையினர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சிரச்சேதம் செய்யும் வீடியோக்களும் அடங்கும்.
ஐ.எஸ். கட்டுப்பாட்டு சிரியாவில் பெண் கொலை செய்யப்படும் மூன்றாவது சம்பவம் இதுவென்று மேற்படி கண்காணிப்பு குழு குறிப்பிட்டுள்ளது.
(Terror: The bearded ISIS militant orders the woman to be ‘content and happy’ that she is about to be stoned to death because, he says, her death has been ordered by God. Her father (left) stands next to the extremist)
இதனைத் தொடர்ந்து அந்த தண்டனையை நடைமுறைப்படுத்த ஒரு வயது முதிர்ந்தவருக்கு உத்தரவிடுகிறார். அவர் குறித்த பெண்ணின் தந்தையென நம்பப்படுகிறது.
தன்னை மன்னிக்கும்படி அந்த பெண் கோரியபோதும் அந்த நபர் அதனை நிராகரிக்கிறார். இதன்போது முதியவரை அணுகும் இரு ஐ.எஸ். போராளிகள், தனது மகளை மன்னிக்கும்படியும் ஏனென்றால் அவள் மறுவாழ்வுக்கு சென்று இறைவனை சந்திக்கப்போவ தாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் வயது முதிர்ந்த நபர் அந்த பெண்ணின் கை மற்றும் இடுப்பு பகுதியை சுற்றி கையிறால் கட்டி அவரை சிறிய குழியொன்றுக்குள் இறக்குகிறார். தொடர்ந்து அவளது தந்தை உட்பட சூழ்ந்துகொள்ளும் ஆண்கள் அந்த பெண்ணின் மீது கற்களை எறிகின்றனர்.
சோமாலியாவில் 18 வயது இளைஞனுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை!!
23-10-2014
தென் சோமாலியாவில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞன் ஒருவனுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹஸன் அஹ்மட் அலி என்ற இளைஞனுக்கே 28 வயதான பதுமோ ஹஸன் மொஹமட் என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கை விசாரித்த மத நீதிமன்றத்தின் நீதிபதி மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு முன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கன்றுக்குட்டியொன்றை நஷ்ட ஈடாக வழங்க அஹமட் அலிக்கு உத்தரவிட்டுள்ளார். அஹமட் அலி தன் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.
சோமாலியாவின் லோவர் ஷபெலி பிராந்தியத்திலுள்ள தறுரோ கிராமத்தில் பதுமோவை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அஹமட் அலி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தான் அந்தப் பெண்ணின் ஒப்புதலினுடனேயே அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் சோமாலியாவின் துறைமுக நகரான பராவியில் பெண்ணொருவருக்கு ஒரே சமயத்தில் 4 கணவர்மாரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.