ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»செய்திகள்»மலையக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு: முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பேரழிவு (Special Report)
    செய்திகள்

    மலையக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு: முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பேரழிவு (Special Report)

    adminBy adminOctober 29, 2014Updated:October 31, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பதுளை கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டம் இன்று மீளா சோகத்தில் மூழ்கியுள்ளது.

    எத்தனையோ கனவுகள், ஆசைகளுடன் வழமை போல இன்றும் வாழ்க்கை ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையில் கண்விழித்த மீரியபெத்த தோட்ட மக்களின் வாழ்க்கை ஒரு சில மணித்தியாலங்களில் அஸ்தமித்து போகும் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.

    காலை ஆறு முப்பது அளவில் சிறுதுளியாய் பிளவுபட்ட பூமி ஒட்டுமொத்த மீரிபெத்த தோட்ட மக்களையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டமை நினைத்துபார்க்க முடியாத ஒரு அனர்த்தமாக பதிவாகியுள்ளது.

    தமது அயலவர்கள் ஓடுவதை கண்டு உயிர்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களின் பின்னால் ஓடிச்சென்ற பலர், தங்கள் உறவுகளை விட்டுப் பிரிந்து சென்றுள்ளமை மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

    என்ன செய்வதென புரியாத மக்கள் தமக்கு நேர்ந்த கொடூரத்தை தம்மால் முடிந்தளவிற்கு வெளியாருக்கும் ஊடகங்களுக்கும் அறிவித்தனர். காலை பத்து மணி வரை சம்பவ இடத்திற்கு இடர்முகாமைத்துவ பிரிவினர் சமூகமளிக்கத்திருக்கவில்லை.

    இதனை தொடர்ந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.

    எண்ணிப் பார்க்க முடியாத பேரிடியாக விழுந்த மண்சரிவால் கொஸ்லாந்தை தோட்டம் மற்றுமன்றி முழு இலங்கையும் இன்று சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை எவராலும் மறுதளிக்க முடியாது.

    ஆறு உயிரிழப்புக்கள்

    கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் தோட்டக் குடியிருப்புகள் சிலவற்றின் மீது இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

    300 பேரைக் காணவில்லை
    மண்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பீரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

    அழிவு
    ஆறு தோட்டக் குடியிருப்புகள், மூன்று அரசாங்க கட்டங்கள், இரண்டு பால் சேகரிப்பு நிலையங்கள், இரண்டு கடைகள் மற்றும் ஒரு கோயில் ஆகியன சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

    பாடசாலைகளுக்கு விடுமுறை
    மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட 10 பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

    ஊவா மாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சீரற்ற வானிலை நிலவும் நாகெட்டிய மற்றும் பூனாகலை பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஜி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை முன்னெடுப்பதற்காக மாகாணத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை முன்வருமாறு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

    மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக கொஸ்லாந்தை மற்றும் பிட்டிகந்த தோட்டம் ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    இடம்பெயர்ந்த மக்களுக்கான சுகாதார, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

    இந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐந்து இலட்சம் ரூபா ரொக்கமாகவும், 20 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையும் மாவட்ட செயலாளருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் குறிப்பிட்டார்.

    பார்வையிடுவதை தவிர்க்கவும்
    தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதை அடுத்து ஏற்பட்டுள்ள அவதான நிலைமையின் கீழ், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண மக்களிடம் கேட்டுள்ளார்.

    உயிர் பிழைத்தது யார்?
    இதேவேளை, இன்று காலை பாடசாலை சென்றிருந்த பிள்ளைகள் மற்றும் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காக சென்றிருந்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.

    ஜனாதிபதி கவலை
    கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

    Post Views: 457

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    தமிழ் மக்களுடன் நிற்க வேண்டும் : லண்டனில் ஒலித்த ஆதரவுக்குரல்

    May 22, 2022

    Leave A Reply Cancel Reply

    October 2014
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022

    சுறாக்களின் யுத்தத்தில் சிறுமீன்களின் தத்தளிப்பு

    May 22, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    • இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version