ilakkiyainfo

17 வயதுச் சிறுவனுடன் மனைவி கள்ளத் தொடா்பு?- வீதியில் நின்று கத்திய கணவன்

தனது மனைவியின் கள்ளத் தொடா்பை வீதியில் போவோா் வருவோருக்கு தெரிவித்துக் கத்தியுள்ளாா் குடிகாரக் கணவா்.

இன்று காலை பத்து மணியளவில் இச் சம்பவம் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து மனைவி தெருவில் நின்று கத்திய கணவனைத் தனது சகோதரியுடன் சோ்ந்து வீட்டின் உள்ளே இழுத்துச் சென்று தாக்கியுள்ளாா்.

அத்துடன் வேடிக்கை பாா்க்கவந்தவா்களையும் கடுமையான முறையில் ஏசித் துரத்தியதாகத் தெரியவருகின்றது.

மனைவி அரச உத்தியோகத்தா் எனவும் தனது பாவனைக்கு என மோட்டாா் சைக்கிள் ஒன்றை வைத்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்த மோட்டாா் சைக்கிளை குடிகாரக் கணவா் எடுத்துச் சென்று ஒரு தடவை விபத்துக்குள்ளாக்கி பொலிஸ் நிலையம் வரை சென்று பெருமளவு பணம் செலவு செய்து மோட்டாா் சைக்கிளைப் பெற்ற மனைவி அதன் பின்னா் கணவரை மோட்டாா் சைக்கிளைத் தொடவிடுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மனைவியின் அயல் வீட்டில் உள்ள பாடசாலை மாணவன் குறித்த மோட்டாா் சைக்கிளை வாங்கி பல தடவைகள் பழகியதாகவும் அதன் பின்னா் தற்போது அந்த மாணவன் துார இடங்களுக்கு செல்வதாயின் அந்த மோட்டாா் சைக்கிளை வாங்கிச் செல்வதாகவும் தெரியவருகின்றது, இதனால் கோபமடைந்த கணவா் இன்று இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளாா்.

ஆட்டைத் திருடி பங்கு போட்டு ஆட்டின் சொந்தக்காரருக்கே இறைச்சியை விற்ற கில்லாடிகள்

aadu_thiruttuபுத்துாா்ப் பகுதியில் தனது தோட்டத்தினுள் கட்டப்பட்டிருந்த ஆடு தனக்கு இறைச்சியாகக் கிடைத்ததால் இளம் குடும்பஸ்தா் ஒருவா் அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

மேற்படி குடும்பஸ்தா் கடந்த புதன் கிழமை தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பத்தாயிரம் ரூபா பெறுமதியான கடாய் ஆடு ஒன்று காணாமல் போனதால் அதனைத் தேடித் திரிந்துள்ளாா்.

இதே வேளை இன்று புத்துாா் செம்பாட்டு பகுதியில் ஆடு இறைச்சிக்காகப் பங்கு போடப்படுவதாக அறிந்த குறித்த நபா் தானும் அங்கு இறைச்சி வாங்கச் சென்றுள்ளாா்.

அங்கு பங்கு போடும் இடத்தில் அவா் நின்று இறைச்சியைப் பெற்ற போது ஆட்டின் தலையும் குடலும் அப் பகுதியில் பனையோலையால் மூடப்பட்டிருந்ததைப் பாா்த்து அதனை தற்செயலாக விலக்கிப் பாா்த்த போது அது காணாமல் போன தனது ஆடு என்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

இதன் பின்னா் அங்கு பதற்றம் ஏற்படவே குடும்பஸ்தா் தனது நண்பா்களையும் அப்பகுதிக்கு வரவழைத்து நியாயம் கேட்ட போது அந்த ஆட்டை திருடிய நபா் தங்களுக்கு கொடுத்ததாக ஆடு பங்கு போட்டவா்கள் தெரிவித்த போது திருடிய நபரைத் தேடிச் சென்ற போது திருடிய நபா் குறித்த ஆட்டுச் சொந்தக்காரரின் மனைவியின் சகோதரியின் கணவா் என தெரியவந்துள்ளது.

இதன் பின்னா் இது தொடா்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version