ilakkiyainfo

சகோதரியின் கால்களை துண்டித்த எடுத்துச் சென்ற சகோதரன்!

தனது சகோதரியின் இரு கால்களையும் வாளால் வெட்டி  ஒரு காலை எடுத்துச் சென்ற  கோர சம்பவமொன்று பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான பெண் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நீண்ட கால குடும்பத்தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

காலை வெட்டிய  சகோதரனும்  அவரது மகனும் தலைமறைவாகியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீறியபெத்த உறவுகளுக்கு மலையகத்தில் தொடர்ந்தும் அஞ்சலி
04-10-2014

அண்மையில் கொஸ்லந்தை – மீறியபெத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்து இன்று லிந்துலை சென்றகுராஸ், கிளனிக்கலஸ் மற்றும் தலாவக்கலை பெயாவல் போன்ற தோட்ட மக்களால் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதிகமான தோட்டத் தொழிளாலர்கள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்டவர்கள் கறுப்பு மற்றும் வெள்ளை கொடியுடன் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் பங்குகொண்டனர்.

788308833lindu

Exit mobile version