மலையகத்திற்கும் வடமாகாணத்திற்கும் ஒரு உறவுப் பாலமாக இந்த துக்க சம்பவம் மாறியுள்ளது என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொஸ்லாந்த மீரியபெத்த பகுதியில் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்திலும், பூனாகலை இல:01 மற்றும் இல:02 பாடசாலைகளிலும் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டனர்.