தம்புள்ள – குருநாகல் வீதியில் பொலிஸ் அதிகாரி போல் நடித்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் கைதானவரது கைப்பையில் அவரது காவியுடைகய் காணப்பட்டதுடன் அவர் காற்சட்டை,சேர்ட் அணிந்த நிலையில் வாகன சாரதிகள் சிலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தான் பானந்துறை குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பொறுப்பதிகாரி என்றும் தெரிவித்துள்ளார். மேற்படி சந்தேக நபரின் நடமாட்டம் தொடர்பாக கலேவல பொலிசாருக்குக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதாகி உள்ளார்.
இவர் பானந்துறைப் பிரதேசத்திலுள்ள பௌத்த மத குரு என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மீண்டும் ஒரு சர்ச்சையில் வாரியபொல யுவதி
09-10-2014
சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரைக் கையால் பலமாகத் தாக்கி மிகப் பிரசித்தமடைந்த ‘வாரியபொல யுவதி’ என்றழைக்கப் படும் திலினி இமல்கா மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
குறித்த யுவதி குருநாகல் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செய்துள்ள ஒரு முறைப்பாட்டில் தனது கையைப் பிடித்து ஒரு இளைஞன் இழுத்ததாக தெரிவித்துள்ளார்.
தான் குருநாகல் பஸ் நிலையத்தில் கோனகம விலிருந்து வந்த பஸ் வண்டி ஒன்றில் இருந்து இறங்கிய போது இச்சம்பவம் நடந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அதன்படி குருநாகல் பொல்லத்தாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவனை குருநாகல் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.