ilakkiyainfo

தனது புதிய துவிச்சக்கர வண்டியில் பாடசாலை சென்ற மாணவன் பலி (வீடியோ, படங்கள்)

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பரிதாபகரமாக ஸ்தலதிலயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பஸ் வண்டி வீதியால் பயணித்த இச் சிறுவன் மீது மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் (08) இல் கல்வி கற்கும் மாணவன்.இவர் இன்றுதான் தனது புதிய துவிச்சக்கரவண்டியில் பாடசாலை சென்றதும் குறிப்பிடத்தக்கது .

மட்டு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் அற்புதவடிவேல் என்பவரின் மகனான கேஷான் வயது (13) எனும் சிறுவனே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

maddu_accident_001

Exit mobile version