ilakkiyainfo

கிளிநொச்சி – முறிகண்டியில் லொறி சில்லில் சிக்கி பெண் பலி (படங்கள்)

கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10155183_301600756701451_6672040063236920210_n-600x450ஆடைத் தொழிற்சாலைக்கு செல்வதற்காக ஏ – 9 வீதியை கடக்க முற்பட்ட இவ்விரு பெண்களையும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துகொண்டிருந்த லொறியொன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குக் காரணமான லொறி சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லியடியில் ஆட்டோவுக்குள் அதி வேகமாகச் சென்று புகுந்தது மோட்டாா் சைக்கிள்

பருத்தித்துறை நெல்லியடியில் இ்ன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்தவரும் ஆட்டோச்சாரதியும் காயமடைந்துள்ளனா்.அதி வேகமாக வந்த மோட்டாா் சைக்கில் ஆட்டோவுக்குள் புகுந்து ஆட்டோவைக் கடும் சேதத்துக்குள்ளாக்கியது.

 

Exit mobile version