ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது மாகாணசபை
    உள்நாட்டு செய்திகள்

    வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது மாகாணசபை

    AdminBy AdminNovember 14, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.

    இதன்படி, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள், அரசாங்க காணிகள், பொதுகட்டங்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளிடம் மாகாணசபை கோரியிருக்கிறது.

    இதுபற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, மாநகர, நகரசபைகளின் முதல்வர்கள், பிரதேசசபைகளின் தலைவர்களிடம் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

    இதற்கமைய, அரசகாணிகள். தனியார் சொத்துகள். காணிகளின் எல்லை, காணிகளின் உரிமையாளர்கள், பற்றிய தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

    அத்துடன் எவ்வளவு காலமாக சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் காணிகள் உள்ளன என்ற விபரத்தை திரட்டவும் வடக்கு மாகாணசபை உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் இதுபற்றிய தரவுகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்தத் தரவுகள் சேகரிப்பு ஆரம்பமாகியுள்ளது.

    முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலை – மன்னார் ஆயர் கண்டனம்!
    14-11-2014

    naguleswaran-300x200மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

    “கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்த நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது.

    நீதிக்குப் புறம்பான செயல்கள் தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்.

    எனவே, சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

    தமிழருக்கு நீதியை – விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

    இரண்டு பிள்ளைகளின் தந்தையும், தமிழீழக் காவல்துறையில் பணியாற்றி, சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவருமான நகுலேஸ்வரன், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் கல் அரிந்து கொண்டிருந்த போது, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 365

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு

    June 29, 2022

    கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்

    June 29, 2022

    யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் !

    June 29, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு

    June 29, 2022

    கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்

    June 29, 2022

    யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் !

    June 29, 2022

    அக்குரஸ்ஸயில் கப்புறாளையின் தலை துண்டிப்பு; சந்தேகநபரின் பெற்றோர் கைது

    June 29, 2022

    தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ

    June 29, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு
    • கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்
    • யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் !
    • அக்குரஸ்ஸயில் கப்புறாளையின் தலை துண்டிப்பு; சந்தேகநபரின் பெற்றோர் கைது
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version