லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி. மேலும் ஆசிய அளவில் சம்பளமாக இவ்வளவு தொகை பெறும் முதல் நடிகரும் ரஜினிதான்.
படத்தை முனிரத்னா வழங்க ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதில் இன்னொரு தயாரிப்பாளராக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா உள்ளார். படத்தின் லாபத்தில் அவருக்கும் ஒரு பங்கு தரப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்தப்பட்ட பிறகு, காசோலை மூலம் இந்தத் தொகை தரப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் இந்த அளவு சம்பளம் பெறும் ஒரே நடிகர் ரஜினிதான். சந்திரமுகி படத்திலிருந்து இந்த சாதனையை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆசிய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிதான். ஜாக்கி சான் பெரும்பாலும் வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்பதால் அவரது வருவாய் சம்பளமாகக் கொள்ள முடியாது.
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும் – ரஜினிக்கு “அண்டப்புழுகன்″ வைரமுத்து எழுதிய வரிகள்
14-11-2014
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே
கலங்காதேகரையாதேராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய் – உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் – அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் – அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது
“அண்டப்புழுகன்″ வைரமுத்துவிக்கு ரஜனி பொன்னாடையும் போர்த்து, துட்டையும் அள்ளிவீசி இருக்கிறார் போல்தெரிகிறது…