பல நாள் பாடசாலைக்குச் செல்லும் நேரம் தாமதமாகி விட்டதாகக் கூறி அவளை அவன் பாடசாலைக்கு அழைத்து செல்லாமல் சீருடையை மாற்றி வேறு ஆடையை அணியச் செய்து உல்லாச விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது இச்சைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஒன்றும் அறியா பாவையைப் பயன்படுத்தி வந்துள்ளான்.
இளம் பெண்பிள்ளைகள் அன்றாடம் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதைக் கேள் வியுற்று அசந்துபோகிறோம். எப்படி எப்படியெல்லாமோ இந்த அநியாயம் அரங்கேறுவதாக எண்ணி ஆச்சரியம் அடைகின் றோம்.
அதுவே எமது வீட்டுவாசல் படியையும் நாளை வந்து தட்டுமானால் எம்மால் ஜீரணிக்க முடியாது என்பதே யதார்த்தம்.
யாரை நம்புவது…? பெற்ற தகப்பனையா? உடன் பிறந்த உறவுகளையா? இல்லை பாதுகாப்பாக அழைத்துச் செல் லும் உறவுகளையா? வேலியே பயிரை மேய்ந்தால் எங்கு சென்று தஞ்சம் கோருவது?
விதி விளையாடி விட்டது என்று ஆறுதல் கொள்வதா? இல்லை, அழுது புரண்டு ஆறுதல் தேடுவதா? எதுவுமே இதற்கு தீர்வாகாது என்பது தான் யதார்த் தம். அதற்காக மெளனமாக இருந்து விட்டால் இந்த அட்டூழியங்களைப் புரிவோரின் செயற்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே சென்று விடும்.
யாராக இருந்தாலும் குற்றவாளியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களின் முகத்திரையை கிழித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே இன்றைய தேவையாகும்.
எத்தனை பரபரப்பான சூழலிலும் புத்தகப் பைகளைச் சுமந்தவாறு பாடசாலை சீருடையில் செல்லும் மாணவர்களை கண் டால் அனைவர் மனதிலும் தோன்றுவது அவரவர் பள்ளிவாழ்வின் பசுமையான நாட்கள். மீண்டும் அந்நாட்கள் வாழ்வில் திரும்பாதா? என்ற ஏக்கம்.
அதுவும் பாடசாலை சீருடை என்றால் ஒரு தனித்துவம் உள்ளது நமது நாட்டில்…… ஆனால் இன்று பாடசாலை மாணவர்களுக்கு ஆங்காங்கே துஷ்பிரயோகங்களும், கடத்தல் சம்பவங்களும் நடைபெற்ற வண்ணமுள்ளன…… இச்சம்பவமும் ஒரு பள்ளி மாணவிக்கு நேர்ந்த அநீதியே.
அன்று அதிகாலைப் பொழுது சூரிய உதயத்துடன் வெள்ளவத்தை கடற்கரை தனது அழகினை இன்னும் மெருகூட்டிக்கொண்டிருந்த வேளை….சரியாக 8.10 மணியிருக்கும்.
நேர்த்தியாக அணிந்த பாடசாலை சீருடையும், தோளில் புத்தகப் பையினை சுமந்தவாறும் பள்ளி மாணவி அழைத்து செல்லப்படுவதும், பின் ஆடை மாற்றப்பட்டு முச்சக்கரவண்டி சாரதியுடன் மாணவி கடற்கரைப்பகுதிக்கு அழைத்து வரப்படுவதும் வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அதிகாரியின் அவதானத்துக்கு உட்பட்டது.
உடனடியாக இந்த விடயம் வெள்ளவத்தை பெண்கள், சிறுவர் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன் மேற்படி பாடசாலை மாணவியின் வாக்குமூலத்தை பெற்ற பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
நதிஷா ஜெயசூரிய (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொள்ளுப்பிட்டியை சேர்ந்த பிரபல மகளிர் பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் மாணவியாவாள். இவளின் சொந்த இடம் மட்டக்குளியாகும்.
நதிஷாவின் தந்தையின் தொழிலின் காரணமாகவும் நதிஷாவின் கல்வியின் நிமித்தமாகவும் நதிஷாவின் குடும்பம் கிருலப்பனைப் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு வாங்கி தங்கியிருந்தார்கள்.
இவளின் தாய் கடும் சுகவீனத்தினால் அவதியுறுவதால் நதிஷாவை அவளால் சரியாக கவனிக்க முடிவதில்லை. தந்தையும் தொழில் என்று ஓடிவிடுவார். எனவே நதிஷா பாடசாலைக்கு சென்று வருவதும், தனியார் வகுப்புகளுக்கு செல்வது, எல்லாமே தனது தாயின் உடன் பிறந்த சகோதரரான விமலரட்ணவுடன் தான். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விமலரட்ணவுக்கு வயது 38. இவனும் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளின் தந்தை.
தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்லும் போதே நதிஷாவையும் அழைத்து செல்வான். தன் தம்பியுடன் தானே செல்கின்றாள் என்று தாய் நிம்மதியடைவாள்.
எனினும் விமலரட்ண தன் அக்காவின் நிம்மதிப் பெரும் மூச்சை நீண்ட காலம் நீடிக்க விடவில்லை. மாறாக அவளின் மகளை பாடசாலைக்கு அழைத்து செல்வதை தனது பாலியல் தேவைகளுக்கு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டான்.
தனது பிள்ளைகள் பிறிதொரு பாடசாலையில் படிப்பதால் அவர்களை முதலில் கொண்டுபோய் விட்டு விட்டு நதிஷாவை பாடசாலையில் விடுவதாக அழைத்து செல்வான்.
ஆனால் பல நாள் பாடசாலைக்குச் செல்லும் நேரம் தாமதமாகி விட்டதாக கூறி அவளை அவன் பாடசாலைக்கு அழைத்து செல்லாமல் அவளது பாடசாலை சீருடையை மாற்றி வேறு ஆடையை அணியச் செய்து உல்லாச விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது இச்சைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஒன்றும் அறியாப் பாவையைப் பயன்படுத்தி வந்துள்ளான்.
தன் பெற்ற பிள்ளை களை பாதுகாப்பாக பாடசாலையில் சேர்க் கும் அவன், தன் அக்காவின் மகளும் மகள் தானே, அக்கா நம்பித் தானே தன்னோடு அனுப்புகின்றாள் என்பதை சிந்திக்கத் தவறினான்.
பாடசாலைக்கு மட்டுமின்றி சுகவீனமுற்று இருக்கும் தனது அக்காவை காரணம் காட்டி அவளுக்கு மருந்து எடுக்க வேண்டும். நீயும் என்னோடு வா என்று நதிஷாவை ஏமாற்றி அழைத்துச் சென்று பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
அன்றும் (2014.11.05) அவ்வாறே பாடசாலைக்கு நேரமாகி விட்டது. பாடசாலைக்கு இனிச் செல்ல முடியாது என்று வெள்ளவத்தை கடற்கரைக்கு அழைத்து சென்று ஆடையை மாற்றிக்கொண்டு உல்லாசமாக இருக்க எண்ணுகையிலேயே வெள்ளவத்தை பொலிஸ் கான்ஸ்டபிளின் கண்களுக்கு பட்டான் விமலரட்ண.
விமலரட்ண இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான். பாதிக்கப்பட்ட நதிஷா தன் தாயிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளாள். தண்டனை முடித்து விமலரட்ண வெளியில் வந்துவிடுவான்.
ஆனால் எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு விடயம் சிறு வயதிலேயே நடந்து விட்டது. இத்தகைய சம்பவங்கள் அந்தப் பெண்ணின் வாழ் நாள் முழுவதுமே ஆறாத வடுக்களாக இருக்கத் தான் போகின்றன.
அதை விட அவள் வாழ நினைத்தாலும் அவதூறான பார்வைகளாலும், வார்த்தைகளாலும் இந்த சமூகம் அவளை வாழ அருகதையற்றவளாக ஆக்கத்தான் போகின்றது. ஏனெனில் ஆண் கெட்டால் சம்பவம். பெண் கெட்டால் சரித்திரம்.
பெற்றோர் தமது பெண்பிள்ளைகளை வளர்க்கும் போது மிக அவதானத்துடன் இருக்க வேண்டும். சிறு வயது முதலே தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சிறிய அணுகு முறைகளை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பாடசாலைக்கு அனுப்பும் சாரதிகள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதை விடப் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவசியமாகும்.
அ.வசந்தா