நியூயார்க்: சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் 60 கோடி மக்கள் திறந்த வெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அவல நிலையை மாற்ற உயரிய அளவிலான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
உலக கழிவறை தினமான இன்று வெளியிடப்பட்ட இது தொடர்பான ஐ.நா ஆய்வறிக்கை, உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் பொது இடங்களையே கழிவறையாக பயன்படுத்தி வருவதாகவும், இவர்களில் 82 சதவீதத்தினர் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் மட்டும் வசித்து வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த 10 நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ள இந்தியாவில் நாள்தோறும் கிட்டதட்ட 60 கோடி பேர் திறந்தவெளிகளையே கழிவறையாக்கிக் கொள்கின்றனர் என இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலின் இரண்டாமிடத்தில் இந்தோனேசியா, மூன்றாமிடத்தில் பாகிஸ்தான், நான்காமிடத்தில் நேபாளம், ஐந்தாமிடத்தில் (1 கோடி மக்கள்) சீனா உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், நைஜர், மொஸாம்பிக் ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களை இந்த பட்டியலில் பிடித்துள்ளன.
செவ்வாய் கிரகத்துக்கு போய் குடியேறினாலும் நாம வெளியில் தான் பேவோம் !
இலங்கையில்… 87,248 பேர் மலசலகூடம் பயன்படுத்துவதில்லை
20-11-2014
நாட்டில் 5,188,047 வீட்டு உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்களில் 84,248 பேர் மலசலகூடத்தை பயன்படுத்துவதில்லை எனவும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
5,188,047 வீட்டு உரிமையாளர்களில் வீட்டு உரிமையாளர்கள் மாத்திரம் 1,698,474 மலசல கூடங்களை பயன்படுத்துவதாகவும் வேறு குடித்தனத்துடன் சேர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 113,362 ஆகும்.
உலக மலசலகூட தினம் நேற்று 19ஆம் திகதியாகும். இந்நிலையிலேயே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் 2012ஆம் ஆண்டுக்கான தரவுகளின் பிரகாரம்,
மேல் மாகாணத்தில், கொழும்பு மாவட்டத்தில் 574 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 775 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 746 பேருமாக மொத்தம் 2,095 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
மத்திய மாகாணத்தை பொறுத்தவரை கண்டி மாவட்டத்தில் 1,591 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 666 பேரும் நுவரெலியா மாவட்டத்தில 6,500 பேருமாக மொத்தம் 8757 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
தென் மாகாணத்தில், காலி மாவட்டத்தில் 1,008 பேரும் மாத்தறை மாவட்டத்தில 402 பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 600 பேருமாக மொத்தம் 2,010 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7,235 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2,397 பேரும் வவுனியா மாவட்டத்தில் 4,018 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4,967 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6,300 பேரும் மொத்தம் 24,917 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16,868 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 4,233 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 3,491 பேருமாக மொத்தம் 24,592 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் 4,331 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 6,426 பேருமாக மொத்தம் 10,757 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மாவட்டத்தில் 5,042 பேரும் பொலநறுவை மாவட்டத்தில் 2,082 பேருமாக மொத்தம் 7,124 பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 2,079 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 2,212 பேருமாக மொத்தம் 4, 291பேர் மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை.
சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,532 பேரும் கேகாலை மாவட்டத்தில். 1,173 பேருமாக 2,705 பேர் பயன்படுத்துவதில்லை.
வட மாகாணத்திலேயே அதிகளவானோர் (24,917) மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லை எனவும் கிழக்கு மாகாணம் இரண்டாவதாக (24,592) காணப்படுவதாகவும் இப்புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.