இலங்கையின் கடந்த முப்பது கால வரலாற்றில் போராட்டங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்த காலமாக ஆயுதப் போராட்டம் ஒன்றில் அரசியல் தங்கியிருந்த வேளையில் பிரிவினைவாத குழுவாகவும் இனவாத குழுவாகவுமே அரசியல் கட்சிகள் செயற்பட்டு வந்தன.
வடக்கில் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றபோது அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தியது. தமிழ், சிங்கள இன முரண்பாடாகவும் பிரிவினைக்கு வித்திடும் போராட்டமாகவும் ஆயுத போராட்டத்தினை சித்திரித்து அரசியல் நடத்தவே அப்போதைய அரசியல் தலைவர்கள் முயன்றனர்.
அதில் வெற்றியும் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. எனினும் 2005ஆம் ஆண்டின் பின்னர்ஆட்சியில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறலாம்.
அல்லது 2005ஆம் ஆண்டின் பின்னர் அரசாங்கத்தைப் பலப்படுத்த புதிய சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட்டன என்று கூறலாம். அதாவது சிங்கள, பெளத்தத்திற்கு முன்னுரிமை என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட கட்சிகளும், அமைப்புக்களும்அரசாங்கத்தின் ஆட்சியினை பலப்படுத்தும் முக்கிய தூண்களாக மாற்ற மடைந்தன.
அதில் குறிப்பிட்டு சொல்வதாயின் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக்கட்சியாக தன்னை இனங்காட்டிக்கொண்டு அரசாங்கத்திற்கு குரல் கொடுத்த ஜாதிகஹெல உறுமய 2004ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் 9 ஆசனங்களை கைப்பற்றி மிகவும் பலமான கட்சியெனவும் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள பெளத்த வாக்குகளுடன் இருந்த ஜாதிக ஹெல உறுமய இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் கைகோர்த்தது.
அதன்பின்னர் 2005ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைவதற்கும் அதற்கும் பின்னரான பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் அரசாங்கத்திற்கு மாபெரும் சேவையினை செய்தது என்றும் கூறலாம்.
ஹெல உறுமயவினர் அதை வார்த்தைக்குவார்த்தை தற்போதும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
எனினும் 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கையிலும், பேச்சுக்களிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அதாவது கடந்த 8 வருடங்களாகவும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியை பலப்படுத்த துணை நின்ற ஹெல உறுமய கட்சியினர் 2012இல் அரசாங்கத்தினால் கொண்டுவ ரப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தினையும் ஆதரித்தனர்.
அதுவரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை சரியென விவாதித்த இவர்கள் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்று முறைமையுடன் முரண்பட ஆரம்பித்தனர்.
முரண்பாடு ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தினை நீடிக்கவும் பலம் பொருந்திய ஆட்சிக் கான பாதை யினை உருவாக்கவும் கொண்டு வரப்பட்ட 18ஆவது திருத்தம் ஆட்சிக்கு முரணானதெனவும், சுயாதீனத்தினை அழிக்கின்றதெனவும் ஜாதிகஹெல உறுமய பிரசாரம் செய்ய ஆரம்பித் தது.
பொது மேடைகளிலும் ஊடகச் சந்திப்புக்களிலும்அரசாங்கத்தினை விமர்சிக்க ஆரம்பித்த ஹெல உறுமயவினர் ஒரு கட்டத்திற் குமேல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியினை வீழ்த்தியேனும் அரசியல் மாற்றத்தினைகொண்டு வரவேண்டும் என்ற இறுக்கமான முடிவுகளையும் எடுக்கத் தயங்கவில்லை.
கடந்த பத்து ஆண்டு காலமாக நிறைவேற்று அதிகாரம் இனித்த இவர்களுக்கு 2012ஆம் ஆண்டின் பின்னர் அது கசக்கத் தொடங்கியதற்கு. காரணம் என்ன?
ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அதுரலியே ரத்ன தேரர் ஒரு கட்டத்தில் இலங்கையில் பிரிவினைவாத ஆயுதப் போராட்டம் ஆரம்பமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையே காரணம். அதிகாரப் பகிர்வு இருந்திருந்தால் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடியிருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இன்று நாட்டிற்கு தேவைப்படுவது அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு. அதற்கமைய 35 யோசனைகள் அடங்கிய கொள்கைத் திட்டம் ஒன்றினை ஹெல உறுமய கட்சியினர் அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தனர்.
அதேபோல் நாட்டில் சகல மக்களுக்கும் தேவையான சகலரும் விரும்பும் வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். பெளத்த சாசனத்தின் மூலம் சகல இன மத மக்களுக்குமான பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்பதோடு தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பினையும் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசுடன் பேசியுள்ளனர்.
இவ் விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அரசாங்கமும் விட்டுக்கொடுப்பும் இணக்கப்பாடும் இல்லாது செயற்படுவதன் காரணத்தினால் தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயார் எனவும் கூறி விட்டு தமது அமைச்சுப் பதவிகளையும் ஏனைய சலுகைகளையும் இராஜினாமா செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமயவின் அதிரடி முடிவுகள் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாக கொள்ளலாம். ஆனால் இந்த நிகழ்வுகளின் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருக்கின்றன என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
ஆம் 2005ஆம் ஆண்டில் இருந்து 10 வருடங்களாக அரசுக்குள் தம்மை பெளத்த சிங்கள உரிமைக் கட்சியாக வெளிக்காட்டிக்கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமயவிற்கு தடையாக உருவாக்கப்பட்ட பெளத்த அமைப்பே பொதுபலசேனாவாகும்.
ஜாதிக ஹெலஉறுமய கட்சியினை தமது அண்ணண் எனவிமர்சித்து, அண்ணனின் கொள்கையினை நாம் பின்பற்றுகின்றோம் எனக் கூறிய ..
பொது பல சேனா பௌத்த அமைப்பினர் தற்போது ஜாதிக ஹெலஉறுமய கட்சியினை எச்சரிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டன. அண்ணனையே அடங்கி போகசொல்லும் அளவிற்கு தம்பி பொதுபல சேனாவின் பலம் ஓங்கி விட்டது.
அதே போல் ஜாதிக ஹெலஉறுமய கட்சியினை அரசின் கொள்கைகளுக்கு அமைய இணங்கிபோக கூறியும் இல்லையேல் அரசியலை விட்டு வெளியேறகூறியும் பொது பல சேனா பௌத்த அமைப்பினர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே தற்போது ஜாதிக ஹெலஉறுமயவின் பலமும் அரசாங் கத்தின் ஆதரவும் குறைவடைந்து விட்டது என்பதற்கு இது சிறிய உதாரணமாக குறிப்பிட முடியும்.
அதே போல் பொதுபல சேனஅமைப்பினர் இன்று, அவர்கள் பெளத்த சிங்கள கொள்கையில் விருட்சமாகமாறியுள்ளனர் என்று கூறினாலும் தவறேதும் இல்லை.
எனவே, பொதுபலசேனாவின் அரசியல் பிரசன்னமும் அரசாங்கத்துடன் பேணிவரும் உறவு முறையுமே ஜாதிக ஹெல உறுமயவின் அவசர முடிவுகளுக்கும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கும் முக் கியகாரணமாகும்.
2012ஆம் ஆண்டில் பெளத்த சாசனத்தினை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் பெளத்த சிங்கள உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற காரணங்களை காட்டி தம்மை பெளத்த சிங்கள அமைப்பாக உருவாக்கிக்கொண்ட பொதுபலசேனா அமைப்பினர் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் தம்மை வலு வாகப்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதுமட்டு மன்றி தமது ஆதரவினையும் செயற்பாடுகளையும் அரசாங்கத்திற்கு சாதகமான வகையில் மேற்கொண்டு வருவதன் காரணத்தினால் இவர்கள் அரசாங்கத்தின் உறுப்பினர்களா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்தது. இன்றும் பல சம்பவங்கள் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமையப்பெற்றுள்ளது.
குறிப்பாக சொல்வதாயின் ஜாதிகஹெல உறுமயவினர் மாதுலுவாவே சோபிததேரரின் மூலம் முன்வைக்கப்பட்ட கொள்கைத் திட்டத்திற்கு அமையநிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை எதிர்த்து பொது எதிரணியின்மேடையில் ஒன்று கூடியபோதும் பொதுபலசேனா அமைப்பினர் நிறைவேற்று முறைமை யினை பலப்படுத்த அரசாங்க மேடைகளில் ஏறினர்.
அரசாங்கத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய அணிதிரளும் போது அரசாங்கத்தை வீழ்த்த மக்களை அணி திரட்டுவோம் என குறிப்பிட்ட போதும் அதேநாளில் அரசாங்கத்தின் மேடையில் பொது பல சேனா பௌத்தஅமைப்பின் தலைவர் கிரமவிமல ஜோதிதேரர் இந்த அரசின் ஒவ்வொரு தூணாகவும் நாங்கள் இருப்போம் எனவும் இந்தநாட்டில் அனைத்து சிங்கள பௌத்த மக்களையும் அரசுக்கு ஆதரவாக அணி திரட்டுவோம் எனகுறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் மேலும் பலசந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவுக்குரல் கொடுத்து வருவதுடன் அனைத்து எதிரணிகளும் அரசியலமைப்பினை திருத்தக்கோரி போராடும் வேளையில் பொதுபலசேனா அமைப்பினர் அரசியல் அமைப்பினை திருத்த எந்த ஒரு அவசியமும் இல்லை என குறிப்பிட்டு வருகின்றனர்.
எனவே எல்லா வகையிலும் இவர்கள் அரசாங்கத்தின் பலத்தினை உறுதிப்படுத்தத்தயாராக உள்ளனர் என்பது தெளிவாக உள்ளது.
எனவே, அரசாங்கத்தின் பின்னணியில் பொது பலசேனாவினர் செயற்படுகின்றனர் என்பதும் சிங்கள பெளத்த வாக்குகளை அரசாங்கம் தக்கவைத்துக்கொள்வதில் இவர்களின் பங்கு அதிகமாகஉள்ளது என்பதுவும் தெளிவாகத் தெரிகின்றது.
எனவே, பெளத்த கட்சிக்கும், பெளத்த அமைப்பிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்தான் இன்று அரசாங்கத்திற்குள் இடம்பெறுகின்றது. ஆரம்பத்தில் பெளத்த தமிழ்போராட்டமாகவும் பெளத்த முஸ்லிம் போராட்டமாகவும் சூழ்நிலையினை உருவாக்கியபோது ஜாதிக ஹெல உறுமயவும், பொதுபலசேனாவும் ஒரேவிதமான கொள்கைத் திட்டத்தில் களமிறங்கினர்.
தற்போது அரசாங்கத்தின் முரண்பாடான செயற்பாடுகளும், ஜாதிக ஹெலஉறுமயவுடனான முரண்பாடுகளுமே அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஹெல உறுமய கண்துடைப்பு நாடகமா?
இது இவ்வாறு இருக்கையில் ஜாதிக ஹெலஉறுமயவின் கொள்கைத் திட்டம் என்ன என்பது தெளிவற்றதாகவே உள்ளது. காரணம் என்னவெனில் அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணத்தினால் தமது அமைச்சுப் பதவியினை பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இராஜினாமா செய்தனர்.
அதுரலியே ரத்ன தேரர் தனது திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்தி தலைவர் பதவியினையும் இராஜினாமா செய்தார் ஆனால், உண்மையிலேயே இவர்கள் அரசாங்கத்தை வீழ்த்தவும், ஜனநாயக ஆட்சியினை நாட்டில் ஏற்படுத்தவும் போராடுகின்றனர் என்பது உண்மையெனின் ஏன் இன்னமும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே தம்மை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவர்கள் தமது பதவிகளையும், சலுகைகளையும் துறந்து நின்றாலும் இன்னும் அரசின் ஒருபங்காளிக் கட்சியாகவே தம்மைகாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எனினும் தற்போது அரசாங்கமே ஜாதிகஹெல உறுமய கட்சியின் ஆதரவையும் உதவியையும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அரசாங்கமே அதை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இனிமேல் ஜாதிக ஹெலஉறுமய கட்சியினர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா? அல்லது மீண்டும் அரசுடன் கைகோர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆர்-யசி