ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, December 11
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»சிறப்பு செய்திகள்»கூட்­ட­மைப்பின் தெரிவு என்ன?? – என்.கண்ணன் (கட்டுரை)
    சிறப்பு செய்திகள்

    கூட்­ட­மைப்பின் தெரிவு என்ன?? – என்.கண்ணன் (கட்டுரை)

    AdminBy AdminNovember 24, 2014Updated:November 30, 2014No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எத்­த­கைய நிலைப்­பாட்டை எடுக்கப் போகி­றது? என்ற கேள்வி இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கி­றது. ஏனென்றால், இந்த தேர்­தலில் தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­ன­வை­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

    பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கு இடையே சிங்­கள பௌத்த வாக்­குகள் கிட்­டத்­தட்ட சரி­ச­ம­மா­கவே பிரியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற ஒரு சூழலில், சிறு­பான்மை­யி­ன­ரான தமி­ழர்கள், மற்றும் முஸ்­லிம்­களின் வாக்­கு­களே தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக மாறும் வாய்ப்­புக்கள் உள்­ளன.

    இத்­த­கைய கட்­டத்தில், தமிழர் தரப்பில் மலை­யகத் தமி­ழர்­களின் வாக்­கு­களைப் பெரு­ம­ளவில் கொண்­டுள்ள இ.தொ.கா., மலை­யக மக்கள் முன்­னணி உள்ளிட்ட கட்­சிகள், அர­ச­த­ரப்­புக்கு ஆத­ர­வ­ளித்­துள்­ளன.

    இந்­த­நி­லையில், வடக்கு, கிழக்­கி­லுள்ள தமி­ழர்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்­லிம்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும், ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் எடுக்கப் போகும் முடிவு குறித்து அதிக எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

    2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில், விடு­தலைப் புலி­களும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் எடுத்த புறக்­க­ணிப்பு முடிவு தான், அந்தத் தேர்தலின் தலை­வி­தியை  மட்­டு­மன்றி, பல­ரு­டைய தலை­வி­தி­க­ளையும் மாற்­றி­ய­மைத்­தது.

    அந்தத் தேர்­தலில் வடக்கு, கிழக்­கி­லுள்ள மக்கள் வாக்­க­ளிப்பைப் புறக்­க­ணித்­தி­ருக்­காத நிலை ஒன்று ஏற்­பட்­டி­ருந்தால், நிச்­ச­யம்­ அப்­போது ரணில் விக்கிரமசிங்­கவே ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருந்­தி­ருப்பார்.

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏதோ ஒரு தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்­கா­மலும், தேர்தல் முடிவைத் தீர்­மா­னிக்க முடியும் என்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் இது.

    அதா­வது வரப்­போகும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாரை ஆத­ரிக்கப் போகி­றது என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு முன்­பாக, அதன் முன்­னுள்ள தெரி­வுகள் குறித்து பார்க்க வேண்டும்.

    1.முத­லா­வது, அர­ச­த­ரப்பு வேட்­பா­ள­ரான மஹிந்த ராஜ­பக்­ ஷவை அல்­லது எதி­ரணி வேட்பா­ளரை ஆத­ரிக்­கலாம்.

    2. இரண்­டா­வது, தனித்து தேர்­தலில் போட்­டி­யி­டு­வது.

    3. மூன்­றா­வது, தேர்­தலைப் புறக்­க­ணிக்­கு­மாறு தமிழ்­மக்­களைக் கோரு­வது.

    4. நான்­கா­வது, எது­வுமே பேசாமல் – மனச்­சாட்­சிப்­படி வாக்­க­ளிக்­கு­மாறு கூறி­விட்டு, அமை­தி­யாக இருந்து விடு­வது. இந்த நான்கு தெரி­வு­க­ளையும் விட வேறு எதுவும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இல்லை. எனவே இந்த நான்கு வட்­டங்­களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து கொண்டு அதற்குள் தான் நின்­றாக வேண்டும்.

    இந்த நான்கு வாய்ப்­பு­க்களில், இரண்டு வாய்ப்­புக்கள் மிகவும் அரி­தா­னவை. தனித்து ஒரு வேட்­பா­ளரை நிறுத்தும் திட்­டமும், வாக்­க­ளிப்பைப் புறக்கணிக்குமாறு கோரு­வ­துமே அவை­யாகும்.

    இந்த இரண்டும் இப்­போ­தைய சூழலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கோ தமிழ் மக்­க­ளுக்கோ பய­ன­ளிக்­கத்­ தக்­க­வை­யல்ல.

    ஏற்­க­னவே, தனித்து வேட்­பா­ளரை நிறுத்தி, எந்த வேட்­பா­ள­ருக்கும் 50 சத வீத வாக்­கு­களைக் கிடைக்­காமல் செய்து, இரண்டாம் சுற்று வாக்கு எண்­ணிக்கை இடம்­பெற அழுத்தம் கொடுக்­கலாம் என்றொரு யோசனை முன்வைக்­கப்­பட்­டது.

    ஆனால், அது அவ்­வ­ளவாக எடுப­ட­வில்லை. அண்மையில் கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரப்போகும் ஜனா­தி­பதித் தேர்­தலை இனத்துவேஷ அடிப்ப­டையில் தமிழ்­மக்கள் அணுகக் கூடாது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

    அதா­வது, சிங்­கள வேட்­பா­ளர்­க­ளுக்கு ஏன் வாக்­க­ளிக்க வேண்டும் என்று ஒதுங்கி நிற்கக் கூடாது என்­பதே அதன் பொருள்.

    சிங்­கள வேட்­பா­ளரை ஆத­ரிக்கத் தயா­ராக இருக்க வேண்டும் என்று அவர் அதன் மூலம் மறை­மு­க­மாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

    தமது தரப்பில் தமிழ் வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்தும் எண்ணங் கொண்­டி­ருந் தால், நிச்­ச­ய­மாக இரா.சம்­பந்தன் அவ்­வாறு கூறி­யி­ருக்­க­மாட்டார்.

    அது­போ­லவே, தேர்­தலைப் புறக்­க­ணிக்கும் கோரிக்­கையை விடுப்­பதும் இப்­போ­தைய நிலையில் பய­னற்­றது.

    2005 ஆம் ஆண்டு தேர்­தலைப் புறக்­க­ணிக்க எடுக்­கப்­பட்ட முடிவு, விடு­தலைப் புலி­களைச் சார்ந்து எடுக்­கப்­பட்­டது.

    prabhakaranவிடு­தலைப் புலிகள் அப்­போது, அந்த முடிவின் ஊடாக, இரா­ணுவ ரீதி­யான மாற்­றங்கள் ஏற்­படும் என்று எதிர்­பார்த்­தனர். ஆனால், அது எதிர்­மா­றான விளை­வையே பெற்றுக் கொடுத்­த­துடன், புலி­களின் அழி­வுக்கும் கார­ண­மா­கி­யது.

    இப்­போ­தைய சூழலில், தேர்தல் புறக்­க­ணிப்பு முடிவின் ஊடாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாற்று அனு­கூ­லங்கள் எதையும் அடை­வது சாத்­தி­ய­மற்­றது.

    எனவே, ஏதா­வ­தொரு வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­வது அல்­லது மனச்­சாட்சிப்படி வாக்­க­ளி­யுங்கள் என்று கூறி­விட்டு, அமை­தி­யாக இருந்து விடு­வது இந்த இரண்டு வாய்ப்­பு­க்களில் ஒன்றைத் தான் தெரிவு செய்ய வேண்­டிய நிலை கூட்­ட­மைப்­புக்கு உள்­ளது.

    இந்தத் தேர்­தலில், தமி­ழர்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு, பிர­தான வேட்­பா­ளர்கள் இரு­வ­ருமே முயற்­சி­களை மேற்­கொள்வர் என்­பதில் சந்­தே­க­மில்லை.

    ஏற்­க­னவே அர­ச­த­ரப்பில் இருந்தும், கூட்­ட­மைப்பை நோக்கி கரங்கள் நீட்­டப்­பட்­டுள்­ளன. எதிர்த்­த­ரப்பில் இருந்தும் நேசக்­கரம் நீட்­டப்­ப­டு­கி­றது.

    தேர்தல் காலத்தில் இதெல்லாம் சாதா­ர­ண­மான விட­யங்கள் தான்.

    இரண்டு முக்­கிய தரப்­பு­களும், தம்மை ஆத­ரிக்­கு­மாறு கோரி­யுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாருக்கும் பிடி கொடுக்­காமல் நழுவி வருகிறது.

     

    அதற்குக் காரணம், இந்த தேர்­தலின் முக்­கி­யத்­து­வத்­தையும், இதனை வைத்து பேரம் பேசு­வ­தற்கு உள்ள வாய்ப்­பு­க­ளையும் கூட்­ட­மைப்பு தெளி­வாகப் புரிந்து கொண்­டி­ருப்­பது தான்.

    வடக்கு மாகா­ண­சபைத் தேர்­த­லிலும், கிழக்கு மாகா­ண­சபைத் தேர்­த­லிலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஐந்­தரை இலட்சம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தது.

    ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றில் அந்­த­ள­வுக்கு வாக்­க­ளிப்பை எதிர்­பார்க்க முடி­யா­வி­டினும், ஆகக் குறைந்­தது 4 இலட்சம் வாக்­கு­க­ளை­யா­வது, தீர்­மா­னிக்கும் சக்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இருப்­பதை எவ

    ரும் மறுக்க முடி­யாது.

    இந்த நான்கு இலட்சம் வாக்­கு­களை தமது பக்கம் சாய்ப்­ப­தற்கு இரு­த­ரப்­பு­க­ளுமே முயற்­சிக்கும்.

    அந்தச் சந்­தர்ப்­பத்தை தமிழர் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான சிறந்த வாய்ப்­பாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்று திட்­ட­மிட்­டுள்­ளது கூட்­ட­மைப்பு.

    எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும், தமி­ழர்­களை கால­டிக்குள் கிடக்க வேண்டும் என்று எதிர்­பார்க்கும் சிங்­களத் தலை­மைகள், தேர்தல் காலத்தில் மட்டும். அவர்­களைத் தோளில் தூக்கி வைக்க முற்­படும்.

    அத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பமே அமை­ய­வுள்­ளதால், பேரம் பேச எத்­த­னிக்­கி­றது கூட்­ட­மைப்பு.

    இன்­றைய சூழலில் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு வேறு வலு­வான பிடி­மா­னங்கள் ஏதும் இல்­லாத நிலையில், கிடைக்­கின்ற வாய்ப்பை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வதே புத்­தி­சா­து­ரி­ய­மா­னது.

    எனவே, இந்தச் சந்­தர்ப்­பத்தில், கூட்­ட­மைப்பு சில நிபந்­த­னை­களை முன்­வைத்து, பேரம் பேசு­வ­தற்­கான வாய்ப்­புகள் தெரி­கின்­றன.

    நாம் இரண்டு தரப்­பு­டனும் பேசுவோம், கடந்த காலங்­களில் ஏமாற்றி விட்­டார்கள் என்­ப­தற்­காக, அர­ச­த­ரப்பின் வேண்­டு­கோளை நிரா­க­ரிக்­க­மாட்டோம்.

    எதி­ர­ணியின் வேட்­பா­ள­ரு­டனும் பேசுவோம்.

    எமது கோரிக்­கை­களை நிறை­வேற்ற எவர் தயா­ராக இருக்­கி­றார்­களோ அவரை ஆத­ரிப்­பது குறித்து கூட்­ட­மைப்பு முடிவு செய்யும் என்று இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

    நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு எதி­ரான நிலைப்­பாடு, கடந்த காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீறி­யது, பொது­வா­கவே, தமிழ்­மக்கள் மத்­தியில் நிலவும் அரச எதிர்ப்பு அலை என்­பன, அர­ச­த­ரப்பு வேட்­பா­ளரை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வ­ள­வாக நகர்­வ­தற்கு வாய்ப்­புகள் இல்லை.

    ஆனாலும், கூட்­ட­மைப்பு முன்­வைக்கும் நிபந்­த­னை­க­ளுக்கு அர­ச­த­ரப்பு இணங்கும் ஒரு சூழ்­நிலை ஏற்­பட்டால், அதற்கு ஆத­ர­வ­ளிப்­பது குறித்துப் பரிசீலிக்கத் தயார் என்­ப­தையே இரா.சம்­பந்­தனின் கருத்து எடுத்துக் காட்­டு­கி­றது.

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அர­ச­த­ரப்பு வேட்­பா­ளரை ஆத­ரிக்கும் ஒரு முடிவை எடுக்கத் துணிந்தால், அது இரண்டு விதங்­களில் எதி­ரணி வேட்­பா­ள­ருக்கே சாத­க­மாக அமையும்.

    கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் சரத் பொன்­சே­கா­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்த போதிலும், தமிழ்­மக்­களின் பெரு­வா­ரி­யான வாக்­கு­களை அவரால் பெற­மு­டி­யாது போனது.

    அது­போ­லவே, கூட்­ட­மைப்­புடன் சேர்ந்து நின்­றதால், சிங்­களத் தேசி­ய­வாத வாக்­கு­க­ளையும் அவரால் பெற­மு­டி­யா­தி­ருந்­தது.

    அதா­வது இரண்டு பக்க நட்டம் ஏற்­பட்­டது.

    அது­போன்ற நிலை, இப்­போது கூட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெறும் அர­ச­த­ரப்பு வேட்­பா­ள­ருக்கும் ஏற்­ப­டலாம்.

    அதுவும், சிங்­கள மக்­களின் ஆத­ரவை அர­சாங்கம் இழந்து வரு­கின்­ற­தொரு சூழலில், இப்­ப­டி­யான சிக்­க­லா­ன­தொரு நிலைக்குள் செல்­வ­தற்கு அர­ச­த­ரப்பு தயா­ராக இருக்­காது.

    கூட்­ட­மைப்பின் ஆத­ரவை அர­ச­த­ரப்பு பெற்றுக் கொள்­வ­தா­னாலும் கூட அதனை வெளிப்­ப­டை­யாகப் பெறுமா என்­பதும் சந்­தேகம் தான்.

    அதே­வேளை, எதி­ர­ணியைப் பொறுத்­த­வ­ரையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெறு­வதால், இந்­த­ள­வுக்குச் சிக்­க­லான நிலையை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­காது.

    ஏனென்றால், தமிழர் தரப்­பிடம் அர­ச­எ­திர்ப்பு அலை ஒன்று உள்ள போது, எதி­ரணி வேட்­பா­ளரைக் கூட்­ட­மைப்பு ஆத­ரிக்க முனைந்தால், அதற்குச் சாதகமாகவே தமிழ்­மக்­களின் வாக்­குகள் கிடைக்கும்.

    அதே­வேளை முன்­னைய நிலையைப் போல, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான இன­வாதப் பிர­சா­ரங்­களும் அவ்­வ­ள­வாக சிங்­கள மக்­க­ளிடம் எடு­பட வாய்ப்­பில்லை.

    எனவே எதி­ரணி வேட்­பா­ளரைக் கூட்­ட­மைப்பு ஆத­ரிப்­பது ஒன்றும் சிக்­க­லான காரி­ய­மில்லை.

    அது எதி­ரணி வேட்­பா­ள­ருக்கு வெற்றி வாய்ப்­பையே அதி­க­ரிக்கச் செய்யும்.

    அதற்கு, எதி­ர­ணியின் வேட்­பாளர் கூட்­ட­மைப்பின் நிபந்­த­னை­க­ளுக்கு இணங்க வேண்டும்.

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில், அர­சியல் கைதி­களின் விடு­தலை, வடக்கு,கிழக்கில் குவிக்­கப்­பட்­டுள்ள படை­களை விலக்கல், சம்பூர், வலி.வடக்கில் மீளக்­கு­டி­ய­மர்வு, இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு – இந்த விட­யங்­களே அதன் பிர­தா­ன­மான கோரிக்­கை­யாக இருக்கும் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

    இவற்றை நிறை­வேற்றத் தயா­ராக இருந்தால், எந்த வேட்­பா­ள­ரையும் ஆத­ரிப்­பது குறித்துப் பேசத் தயார் என்­கி­றது கூட்­ட­மைப்பு.

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த விட­யங்­களில் சற்றுக் கடும் போக்­கையே வெளிப்­ப­டுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

    ஏனென்றால், தமக்குக் கிடைத்­துள்ள பேரம் பேசும் பலத்தை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவே கூட்­ட­மைப்பு மட்­டு­மன்றி எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் விரும்பும்.

    ஆனால், கூட்­ட­மைப்பு முன் வைக்கும் படை­வி­லக்கம் உள்­ளிட்ட சிக்­க­லான கோரிக்­கைகள் குறித்து எந்­த­வொரு பிர­தான வேட்­பா­ள­ருமே, அவ்­வ­ளவு இல­கு­வாக வாக்­கு­றுதி அளிக்­க­மாட்­டார்கள்.

    கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரிக்க எடுத்த முடிவு பலத்த சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த்து.

    அதற்கு கூட்­ட­மைப்பும் சரி­யான விளக்­கத்தைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை.

    gen_sarath_fonsekaஅண்­மையில், மட்­டக்­க­ளப்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய, நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அரி­ய­நேத்­திரன், சரத் பொன்­சேகா எழுத்து மூலம் அளித்த உடன்­பாடு ஒன்­றுக்கு அமை­யவே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்க முடிவு செய்­யப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்தார்.

    ஆனால் சரத் பொன்­செகா அதனை மறுக்­கிறார். அவ்­வாறு ஒரு ஆவணம் இருந்தால் அதனைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறும் சவால் விடுத்தார்.

    அதற்கு கூட்­ட­மைப்பின் தரப்பில் எவரும் பதில் பேச­வில்லை.

    சரத் பொன்­சே­காவும், கூட்­ட­மைப்பும் ஒரு ஆவ­ணத்தில் ஒப்­ப­மிட்­டி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

    அதனை வெளிப்­ப­டுத்­து­வது சரத் போன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும்.

    இதனால் கூட்டமைப்பு சற்று நாகரீகமாக ஒதுங்கியிருக்கலாம்.

    இதுபோலத் தான், இப்போதும், எதிரணி வேட்பாளர் கூட படைவிலக்கம் உள்ளிட்ட கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்கி வாக்குறுதிகளை எழுத்து மூலம் வழங்க முனையமாட்டார்.

    இணங்கினாலும் கூட அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் துணியமாட்டார்.

    இது ஒரு சிக்கலான நிலையும் கூட.

    அதாவது பேரம் பேசும் வாய்ப்பு இருந்தாலும், அது ஏற்படுத்தக் கூடிய எதிர்விளைவுகளையும் கணிக்க வேண்டிய – கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடியும் கூட்டமைப்புக்கு உள்ளது.

    இருதரப்புமே கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்க தயாராக இல்லாது போனால், அடுத்த என்ன முடிவெடுக்கலாம்?

    அதற்கும் இருக்கிறது ஒரு வாய்ப்பு.

    மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் ஒரு கோரும் முடிவும் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியிருந்தார்.

    அத்தகையதொரு நிலையில், தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களிப்பில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.

    ஆனால், இந்த முடிவு, தமிழர்களை தேசிய அரசியலில் இருந்து மேலும் அந்நியப்படுத்தவே உதவும்.

    இத்தகைய பல தெரவுகள், வாய்ப்புகள் உள்ள ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை நாடு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

    Post Views: 79

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    லண்டன் வாழ்க்கையை உதறிதள்ளிவிட்டு இலங்கை வந்து 60,000 ரூபாய்க்கு பணியுரியும் பிரிட்டிஸ் தம்பதியினர்

    December 5, 2023

    தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்

    December 5, 2023

    சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பில் கைகொடுத்த `எலித்துளை’ நிபுணர்கள்! – யார் இவர்கள்?

    November 29, 2023

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது

    December 10, 2023

    கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு

    December 10, 2023

    யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது

    December 10, 2023

    மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!

    December 10, 2023

    இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?

    December 10, 2023
    • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
    • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது
    • கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு
    • யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது
    • மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
      • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version