கால்பந்தாட்ட நடுவராக இத்தாலியின் பிரபல மொடல் அழகி கிளாடியா களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியின் 32 வயதான முன்னாள் மொடல் அழகி கிளாடியா ரொமானி, கால்பந்து களத்தில் நடுவராக களமிறங்க காத்திருக்கிறார்.
இதற்கான அனைத்து பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள இவர், விரைவில், இத்தாலியில் நடக்கும் ஏ, பி பிரிவு போட்டிகளில் முதன் முறையாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ஆடவர் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக பெண் நடுவராக களமிறங்கிய பெருமை, ஜேர்மனியின் 35 வயதான பிபியானா ஸ்டெயின்ஹாஸ் என்பவருக்கு உண்டு.