தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் ப(f)யில் தாங்கள் வசம் இருப்பதாகவும் ஆனால் அதனைக் கொண்டு பழிவாங்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க மேடையில் தெரிவித்தார்.
இன்றைய தினம் மைத்திரிபால சிறிசேன ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்றிருந்த வேளை சந்திரிக்காவும் அங்கிருந்தபோது ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க ´எங்களது ஆட்கள் வந்ததும் ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்´ என தெரிவித்து அவ்விடத்தைவிட்டு சென்றுள்ளார்.
பண்டாரநாயக்கவின் சமாதியில் மைத்திரிபால மலர் அஞ்சலி !!
ஹொரகொல்லையில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் சமாதிக்கு, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இன்று மலர் அஞ்சலி செய்தார்.
ஜனாதிபதி தேர்தல் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பநிலைத் தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெறும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பண்டாரநாயக்கவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– See more at: http://vannimedia.com/site/news_detail/40460#sthash.o0uUvqa2.dpuf
ஹொரகொல்லையில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் சமாதிக்கு, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இன்று மலர் அஞ்சலி செய்தார்.
ஜனாதிபதி தேர்தல் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பநிலைத் தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெறும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பண்டாரநாயக்கவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.