ஒவ்வொரு முறையும் இயக்கு நர் வசந்தபாலனின் படங்களுக்கான எதிர்பார்ப்பும் தீவிரமும் சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்கது.
சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் தென் தமிழகத்தில் இருந்த நாடகச் சூழல் பின்னணியை தழுவிய துதான் ‘காவியத்தலைவன்.’ அந்த வரலாற்றில் எந்த அம்சம் உங்களைக் கவர்ந்தது….?
‘அங்காடித் தெரு’ படப்பிடிப்பு சமயத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் பேசிக் கொண்டிருந்த போது, நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி சொன்னார். அந்த உரையாடல்தான் இதற்கான முதல் புள்ளி. உரையாடலின் சுவாரஸ்யங் கள் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக உலகத்துக்குள் அழைத்து போனது.
எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம் பாள் காதல் உட்பட அத்தனை அம்சங்கள் அதில் கொட்டி கிடந்தன. அரிதாரம் பூசிய அந்த கலைஞர்க ளின் வாழ்வில் நட்பு, துரோகம், மகிழ்ச்சி, போராட்டம், துன்பம் என அத்தனை உணர்வுகளும் சித றிக் கிடந்தன. அந்த எண்ணற்ற அம்சங்கள்தான் இந்த கதைக்குள் இழுத்து உட்கார வைத்தது.
அதை அப்போது இருந்த காலச் சூழலிலேயே எழுதி ‘காவியத்தலைவனை’ உருவாக்கி இருக்கி றேன்.
எதேச்சையாக கண்ணில் பட்ட ஒரு பத்திரிகையில் சித்தார்த்தை பார்த்தேன். அவரிடம் சின்ன வயது கிட்டப்பாவின் சாயல் இருந்தது. அவருக்கும் கதை பிடித்திருந்தது.
கே.பி.சுந்தராம்பாள் கதாபாத்திரத்தில் வேதிகா ஒன் றிப் போயிருக்கிறார். கதையில் வரும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்துக்கு பிருத் விராஜ் தேவைப்பட்டார். எந்தவித சமரசங்களுக்கும் இடமில்லாமல் “காவியத்தலைவன்’ உருவாகியிருக்கிறது.
வேறொரு புது தளம், நிறைய நடிகர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டீங்களா…?
கதையின் மேல் இருந்த காதல் கஷ்டத்தை உணர வைக்கவில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய காலக் கட்டம் என்பதால், நாடக உலகம் பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு சில புத்தகங்கள்தான் இந்த கதையை முன்னெடுத்து சென்றது. 1922-–40 வரையான கால கட்டங்களில் ஒரு நாடக கொட்டகை எப்படியிருக்கும் என்பதற்கு எந்த ஒரு புகை ப்படமும் இல்லை.
“தில்லானா மோகனாம் பாள்’ படத்தில் வந்த ஒரு சின்ன காட்சியை மட்டுமே ஆதாரமாக கொண்டு அதை வடிவமைத்தோம். காலையில் 5 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்தால், மதியம் 12 மணியைக் கடந்துதான் அந்த வேலை முடியும்.
அதன் பின்புதான் படப்பிடிப்பு. நாடகம் குறித்து ரசிகர்களுக்கு விநியோகிக்கும் நோட்டீஸ்களில் எந்த வித எழுத்து வடிவங்கள் இருந்தன என்பதில் தொடங்கி ஒவ்வொன்றிலும் அதீத உழைப்பு கொடுத்திருக்கிறோம்.
வசந்தபாலன் படங்களில் “அர வான்’ பெரிய ஏமாற்றம், இப்போதும் பல பரீட்சைக்குரிய கதையில் பயணம். எப்படி எடை போடுறீங்க…?
எந்த ஓர் இயக்குநரும் 100 சதவீதம் முழுமையான படம் எடு க்க முடியாது. அப்படி எடுத்து விட் டேன் என்று சொன்னால், அது பக்குவப்பட்ட இயக்குநரின் வார்த்தையாக இருக்க முடியாது. எந்த ஒரு வெற்றியாளனுக்கும் 100 சதவீதம் வெற்றியும் கிடைக்காது.
ஆனால், எந்த மாதிரியான தோல்விகளை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு உதாரணம்தான் என் “அரவான்.’ ஒவ்வொரு முயற்சியையும் ஈடுபாட்டோடு செய்தாலே போதும்.
தோல்விகளும் வெற்றிகளும் இரவு பகல் மாதிரி மாறி மாறி வரும். வெற்றி, தோல்வியை வியாபாரமாக யோசிக்க முடியாது. மேடை நாடகம், கூத்து என தங்கள் மொத்த ஆயுளையும் கலைக்காக அர்ப்பணித்த ஒரு பெரும் கூட்டத்தின் கதை இது.