இந்தியாவில் கடந்த பல வருடங்களில் பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுக்க மாட்டேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஆனால், அங்கு ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஆதரவான சமூகப் போக்கே பெண்களை பாதிக்கும் பல பிரச்சினைகளின் வேராக இருக்கின்றது.
பெண்குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுவதால், இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான விகிதம் சமநிலையை இழந்து, திருமணத்துக்கு பெண் கிடைக்காத நிலை சில இடங்களில் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த இடைவெளியை மணப்பெண்களை கடத்தி விற்பவர்களே நிவர்த்தி செய்கிறார்கள்.