ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, May 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»பிறந்ததும் அழாததால் சிசுவுக்கு 6 இடத்தில் சூடு வைத்த பாட்டி
    இந்தியா

    பிறந்ததும் அழாததால் சிசுவுக்கு 6 இடத்தில் சூடு வைத்த பாட்டி

    AdminBy AdminNovember 29, 2014Updated:November 30, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தர்மபுரி: தர்மபுரி அருகே பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை அழாததால் 6 இடங்களில் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போடூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35). கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி பச்சையம்மாள் (29). இவர் களுக்கு ஏற்கனவே துரை (7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பச்சையம்மாள் மீண்டும் கர்ப்பம் ஆனார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பிரசவவலி ஏற்பட்டது.

    பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி இல்லை. பிரசவவலியில் துடித்த பச்சையம்மாளுக்கு அவரது பாட்டி சின்னப்பொண்ணு (75) பிரசவம் பார்த்தார்.

    ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தை அழும் சத்தம் கேட்கவில்லை. அதிர்ச்சியடைந்த பாட்டி சின்னப்பொண்ணு கம்பியை காய்ச்சி பச்சிளம் குழந்தைக்கு அடிவயிறு, தொப்புள், வயிறு, கைகள் என 6 இடங்களில் சூடு வைத்தார்.

    இதனால், பச்சிளங்குழந்தையின் உடல்நிலை மோசமானது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந் தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளி க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டீன் நாராயண பாபு கூறியதாவது: சூடு வைத்தால் குழந் தை உடனே அழும் என்ற மூடநம்பிக்கையில் அவரது பாட்டி சூடு வைத்துள்ளார். பச்சையம்மாளுக்கு குழந் தை வளர்ப்பு குறித்து கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஓரினச் சேர்க்கை அழைப்பு: அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளியில் பயங்கரம் : வகுப்பறையில் மாணவன் குத்திக்கொலை
    29-11-2014
    Tamil_News_4467998743058அருப்புக்கோட்டை: வகுப்பறையில் 8ம் வகுப்பு மாணவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    32 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். விருதுநகர் மாவட்ட எல்லையான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த கோபாலின் மகன் பாஸ்கர் (13) 8ம் வகுப்பில் படித்தார்.

    இதே ஊரைச் சேர்ந்த மாரீஸ்வரன்(19) கடந்த ஆண்டு இதே பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால், படிப்பை நிறுத்தி விட்டு, தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார்.

    நேற்று காலை 8 மணிக்கு சீருடை அணிந்து மற்ற மாணவர்களுடன் பள்ளிக்கு சென்ற மாரீஸ்வரன், வகுப்பறையில் இருந்த பாஸ்கரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக்  கொண்டு  வெளியேறினர். மாரீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத் தில் கிடந்த பாஸ்கரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், வழியிலேயே பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த பந்தல்குடி போலீசார், அயன்கரிசல்குளத்தை சேர்ந்த 3 மாணவர்களை விசாரித்தனர்.

    விசாரணையில், கடந்த ஆண்டு செப். 3ல் பாஸ்கர் உள்ளிட்ட 4 மாணவர்களை மாரீஸ்வரன் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு மாரீஸ்வரன் வற்புறுத்தியுள்ளார்.

    அவர்கள் மறுக்கவே, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்துள்ளார். இதனால், மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். பின்னர், மாரீஸ்வரன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

    மயங¢கிக் கிடந்த மாணவர்கள் குறித்து விடுதி ஊழியர்கள் திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விடுதிக்கு வந்து, மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இதனிடையே, பெற்றோர்கள் மாணவர்களை காணவில்லை என மாசார்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர். மாணவர்களின் விபரம் குறித்து திருச்செந்தூர் போலீசார், மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்க, அங்கு சென்ற போலீசார் மாணவர்களை அழைத்து வந்துள்ளனர்.

    தலைமறைவான மாரீஸ்வரனை கைது செய்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் சமாதானமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஸ்கரை தகாத உறவுக்கு அழைத்து மாரீஸ்வரன் அடிக்கடி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்து, மாரீஸ்வரன், பாஸ்கரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பிரேத பரிசோதனை முடிந்து மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அருப்புக்கோட்டை தூத்துக்குடி சாலை மற்றும் தூத்துக்குடி பைபாஸ் சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர். கொலை நடந்த பள்ளியில் விருதுநகர் கலெக்டர் ஹரிஹரன், எஸ்பி மகேஸ்வரன், தூத்துக்குடி எஸ்பி துரை, விருதுநகர் டிஆர்ஓ முனுசாமி, முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமார், அருப்புக்கோட்டை ஆர்டிஓ சுபா நந்தினி ஆகியோர் விசாரணை செய்தனர்.

    தாயையும், மகனையும் இழந்தார்:

    பாஸ்கரனின் தந்தை கோபால் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் கோபாலின் தாயார் இறக்கவே, சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    இப்பொழுது மகனும் கொலை செய்யப்பட்டுள்ளதால், தாயையும், மகனையும் இழந்து தவிக்கிறார். குற்றவாளியை பிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர் கதறியழுதவாறே தெரிவித்தார்.

    Post Views: 447

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்

    May 27, 2022

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    May 27, 2022

    ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை- மீனவ பெண் எரித்து கொலை

    May 25, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

    May 27, 2022

    இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

    May 27, 2022

    பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்

    May 27, 2022

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    May 27, 2022

    No Deal Gama போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி

    May 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு
    • இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”
    • பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்
    • கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version