“விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம்தான். அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என சமீபத்தில் காங்கிரசில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் கூட்டத்தில் ஈ வி கே எஸ் இளங்கோவனுடன் குஷ்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைமையகமான சென்னை சத்யமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சமீபத்தில் காங்கிரசில் இணைந்த குஷ்பும் உடனிருந்தார். முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி ஆகியோரும் அங்கிருந்தனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது, தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று வாசன் நடத்திய பொதுக்கூட்டம் குறித்து, கருத்துத்தெரிவித்த அவர், காமராஜர் நாட்டுக்காக உழைத்திருக்கிறார். மூப்பனார் நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை அவரது மகன் வாசன் சொல்லட்டும் என்று தெரிவித்தார்.
அதற்குப் பிறகு, செய்தியாளர்கள் குஷ்புவிடம் கேள்விகளை எழுப்பினர். தான் காங்கிரசில் சேர்ந்தது குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குஷ்பு, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறினார்.
வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் துவங்கி பல திட்டங்களை ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி உண்மையில் தீவிரவாதத்திற்கு மட்டுமே எதிரான கட்சி என்று குஷ்பு தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர் ஒருவர், அப்படியானால் எல்டிடிஇ இயக்கம் பயங்கரவாத இயக்கமா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த குஷ்பு, “நிச்சயமாக. அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு முடிவுக்கு வந்தது.
முதலில்.. குஷ்பு எப்படி தமிழில் பேசுகிறார் என்பதை பார்த்து தமிழக அரசியல்வாதிகள், தமிழக சினிமாக்காரர்கள் படித்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு இவ்வளவு அழகாக குஷ்பு தமிழில் பேசுகிறார் என்றால். அதற்குகாரணம் கலைஞர் கருணாநிதியின பாசறையில்.. குஷ்பு பயின்று இருக்கிறார் என்பதுதான் உண்மை.
பாராட்டுக்கள் நமது குஷ்புவுக்கு..