சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதென்ற பிரேரணையை அந்நாட்டு மக்கள்கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது.
அந்நாட்டின் வருடாந்த நிகர குடிவரவை எண்பதாயிரத்திலிருந்து வெறும் பதினாறாயிரமாகக் குறைக்க முன்மொழியப்பட்ட பிரேரணையை வாக்களித்தவர்களில் 74 சதவீதம் பேர் நிராகரித்திருப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன.
சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடங்கள், வீட்டுவசதி, பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் காணப்படும் அழுத்தத்தை இந்த கொள்கையின் மூலமாக குறைக்கும் என இதனைக் கொண்டுவந்தவர்கள் வாதிட்டிருந்தனர்.
ஆனால் வேகமாக முன்னேற்றமடைந்துவரும் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை இந்த கொள்கை கடுமையாக பாதிக்கும் என அந்நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் கூறிவருகின்றன.
வேலைத்திறன் தேவைப்படும் தொழில்களில் ஐரோப்பியத் தொழிலாளர்களை சுவிட்சர்லாந்து பெரிதும் நம்பியுள்ளது.
ஆனால் அந்நாட்டின் எண்பது லட்சம் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.
குடிவரவை கட்டுப்படுத்துவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு சம்பந்தமாக சுவிட்சர்லாந்தின் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் குடிவரவு விவகார தெரிவுக் குழுவின் உறுப்பினரான லதன் சுந்தரலிங்கம் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு
30-11-2014
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு பனி மழை பெய்வதால் வீடுகள் மற்றும் தெருக்களில் பனிகொட்டி மலை போல் குவிகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹுட்சன் வால்லே பகுதியில் உள்ள நியூயார்க் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கொட்டி கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் மண் லாரி எந்திரத்தின் டிரைவர் ஈடுபட்டார்.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கொட்டி கிடக்கும் பனிக்கட்டிகளை ஓரமாக தள்ளி ஒதுக்கினார். அப்போது அங்கு எலிஜா மார்டினெஷ் (11), ஜாசன் ரிவேரா (9) என்ற 2 சிறுவர்கள் சுவற்றின் ஓரம் தூங்கிக் கொண்டிருந்ததை அறியவில்லை.
எனவே, அந்த பனிக்கட்டிகளை சுவற்றின் ஓரம் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது தள்ளி மூடி விட்டார். இதற்கிடையே இவர்கள் இருவரையும் காணாததால் பெற்றோர்கள் தேடினர்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரம் சிறுவர்கள் அணிந்திருந்த ‘ஷு’வின் லேஸ் (கயிறு) வெளியே தெரிந்தது.
இதனால் சந்தேகம் அடைந்து பனிக்கட்டியை அகற்றி பார்த்த போது அவர்கள் இருவரும் உள்ளே சிக்கி மூச்சு திணறி கிடந்தனர். அதை தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்டனர்.
பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் 7 மணி நேரமாக 5 அடிஉயர பனிக்கட்டி குவியலுக்குள் சிக்கியும் உயிர் பிழைத்தது அதிசயமாக கருதப்படுகிறது.