ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, May 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»பிரதான செய்திகள்»வெற்றி பெறுமா சந்திரிக்காவின் திட்டம்? – என்.கண்ணன் (கட்டுரை)
    பிரதான செய்திகள்

    வெற்றி பெறுமா சந்திரிக்காவின் திட்டம்? – என்.கண்ணன் (கட்டுரை)

    AdminBy AdminNovember 30, 2014Updated:December 4, 2014No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்­டணிக் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் விரக்­தியும் தற்­போ­தைய அரசாங்கத்தின் ஆணி­வே­ரையே ஆட்­டம்­காண வைத்­தி­ருக்­கி­றது.

    மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்ளிட்­ட­வர்­களின் வெளி­யேற்றம், அர­சாங்­கத்­துக்குப் பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை விட, மஹிந்த ராஜபக்ஷ குடும்­பத்தின் தலை­மைத்­து­வத்­துக்கும் பெரும் சவா­லாக மாறி­யி­ருக்­கி­றது என்­பதே உண்மை.

    மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அவ­ருடன் இணைந்து கொண்­டுள்­ள­வர்­களும், ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்­டி­ருந்தால், அது பெரிய தாக்­கத்தை ஏற்படுத்தக் கூடிய விட­ய­மன்று.

    மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளதும்- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியின் தலை­மையைக் கைப்பற்றும் அவ­ரது திட்­ட­மும்தான் அர­சாங்­கத்­துக்கு நெருக்க­டியை இன்னும் அதி­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

    சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க என்ற பெரும்­ப­லத்தை நம்பி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக போர்க்­குரல் எழுப்­பி­யி­ருக்­கிறார் மைத்­தி­ரி­பால சிறிசேன.

    ranil-wickramasinghe-1-colombo-telegraphபண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் வச­மி­ருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­துவம் கடந்த 9 ஆண்­டு­க­ளாக ராஜபக் ஷ குடும்­பத்தின் வசம் சிக்கி­யுள்­ளது.

    அதனை மீண்டும் மீட்­டெ­டுப்­ப­தற்­கான போராட்­டத்தை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வின் ஊடாகத் தொடங்­கி­யி­ருக்­கிறார் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமாரதுங்க.

    மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக அறி­வித்த கூட்­டத்தில், சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அமர்த்துவேன் என்று உறு­தி­யாகக் கூறி­யி­ருந்தார். இதுவே, சந்­தி­ரி­காவின் திட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யது.

    இப்­போ­தைக்கு நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு எதி­ரான போராட்­ட­மாக இது கரு­தப்­பட்­டாலும், இன்­னொரு வகையில் இது மஹிந்த ராஜபக் ஷ குடும்­பத்தின் கையில் இருந்து சுதந்­திரக் கட்­சியை மீட்கும் போராட்­ட­மா­கவும் மாறி­யி­ருக்­கி­றது.

    சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வினால், தனித்து சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை மீளக் கைப்­பற்ற முடி­யாத நிலை உரு­வா­கி­யி­ருந்­தது.

    பத­விக்கு வந்த ஆறே மாதங்­களில், தனது பிறந்­த­நா­ளன்று கட்சித் தலைவர் பத­வியில் இருந்து தன்னைத் தூக்­கி­யெ­றிந்­தவர் தான் மஹிந்த ராஜபக்ஷ என்று சந்­தி­ரிகா குமா­ர­துங்க பகி­ரங்­க­மா­கவே குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

    அதற்குப் பின்னர், சுதந்­திரக் கட்­சிக்குள், பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் ஆதிக்­கத்தை மட்­டு­மன்றி அடை­யா­ளங்­க­ளையும் அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்­பட்­டது.

    2005 ஆம் ஆண்டு பத­விக்கு வந்­த­வுடன், சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோரின் நினைவு நாள்­க­ளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்று மஹிந்த ராஜபக் ஷ உத்­த­ர­விட்­டி­ருந்­தா­ரென்று மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போ­து­ கூ­று­கி றார்.

    பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் வர­லாறும், சுதந்­திரக் கட்­சியின் வர­லாறும் பின்னிப் பிணைந்த ஒன்­றாக இருந்த நிலையில், அந்த நிலையை மாற்றியமைப்ப­தற்கு பெரு­மு­யற்சி எடுத்­தி­ருந்­தனர் ஆட்­சி­யா­ளர்கள்.

    rajapakasha-familyடி. ஆர்.ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக்ஷ, சசீந்­திர ராஜபக்ஷ என்று ராஜபக் ஷக்­களால் சுதந்திரக்கட்சி நிரப்பப்­பட்­டது.

    சுதந்­திரக் கட்­சியும், அர­சாங்­கமும்  ராஜபக்ஷக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சூழ­லில்தான் அதற்­குள்­ளி­ருந்து எதிர்க்­குரல் எழுந்­தி­ருக்­கி­றது.

    குடும்ப ஆதிக்­கத்­துக்கு முடி­வு­கட்டி, கட்­சியைக் காப்­பாற்ற வேண்­டு­மென்ற சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் துடிப்­புக்கு கைகொ­டுத்­தி­ருக்­கி­றது ஜனா­தி­பதி தேர்தல் என்று தான் கூற­வேண்டும்.

    நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மீது கொண்­டுள்ள வெறுப்­பினால் அதனை எதிர்க்கத் துணிந்த எதிர்க்­கட்­சிகள், சரி­யான தலை­மை­யின்றி பொது­வேட்­பா­ளரை நிறுத்த முடி­யாமல் திணறிக் கொண்­டி­ருந்த போது தான், சந்­தி­ரிகா அதற்குள் நுழைந்­தி­ருந்தார்.

    மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக கொண்டு வரு­வதன் மூலம் இவர் இரண்டு காய்­களை வீழ்த்த நினைக்­கிறார்.

    முத­லா­வது- நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பது. அது சந்­தி­ரி­கா­வி­னது மட்­டு­மன்றி, எதி­ர­ணி­யி­னதும் விருப்பம்.

    இரண்­டா­வது- ராஜபக் ஷ குடும்­பத்தின் பிடியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விடு­விப்­பது.

     

    ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி விட்டால், இல­கு­வா­கவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கட்­டுப்­பாட்டைத் தன்­வசம் கொண்­டு­வந்து விடலாம் என்று கணக்குப் போட்­டி­ருக்­கிறார் சந்­தி­ரிகா.

    மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக நிய­மிக்கும் அவ­ரது திட்­டத்தின் மூலம், மீண்டும் பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்­துக்கு விசுவாசமான ஒரு தலை­மைத்­து­வத்தை கட்­சிக்குள் உரு­வாக்க நினைக்­கிறார்.

    இந்த திட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மானால் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெற வேண்டும்.

    ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­கு­ளி­ருந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக வெளியே வந்த விவ­காரம், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவையும் அவ­ரது குடும்­பத்­தையும் ஆட்டம் காணச் செய்து விட்­டது.

    ஏனென்றால், கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக ராஜபக்ஷ குடும்­பத்தின்  தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக யாரும் போர்க்­கொடி உயர்த்த முடி­யாத ஒரு நிலைதான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இருந்து வந்­தது.

    ஒரு கட்­டத்தில், ராஜபக் ஷவின் தலை­மைக்கு எதி­ராக போர்க்­கொடி உயர்த்திக் கொண்டு, வெளியே வந்த மங்­கள சம­ர­வீர, விஜே­தாச ராஜபக்ஷ போன்றவர்கள் ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்­டனர்.

    அவர்­களால் அந்தக் கட்­சிக்குள் பத­வி­களைப் பெற முடிந்­ததே தவிர, ராஜபக் ஷ குடும்­பத்தின் பிடியில் இருந்து கட்­சியை மீட்­கவோ, அதன் செல்­வாக்கை உடைக்­கவோ முடி­ய­வில்லை.

    ஆனால் இப்­போது நிலைமை அப்­ப­டி­யில்லை.

    மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக, மைத்­தி­ரி­பால சிறி­சேன போர்க்­கொடி உயர்ந்­தி­யுள்­ள­துடன், அவரை நேருக்கு நேர் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் சந்­திக்கப் போகிறார்.

    இன்­னொரு பக்­கத்தில், எதி­ர­ணி­யுடன் சேர்ந்த பொது­வேட்­பா­ள­ராக நின்­றாலும் தாம் ஐ.தே.க.வில் இணையப் போவ­தில்லை என்றும், தாமே சுதந்­திரக் கட்சியின் பொதுச்­செ­யலர் என்றும் கூறி வரு­கிறார்.

    இது ராஜபக் ஷ குடும்­பத்தின் நாடி நரம்­பு­க­ளுக்கு அச்­சத்தைக் கொடுக்­கின்ற விடயம்.

    அதா­வது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் எல்­லாமே முடிந்து போகப் போவ­தில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

    மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பெரி­ய­ள­வி­லான ஆளும்­கட்­சி­யினர் எதி­ர­ணிக்குத் தாவப் போவ­தாகச் செய்­திகள் வெளி­யா­கின. ஆனாலும், அங்­கொன்றும் இங்­கொன்­று­மா­கவே அத்­த­கைய சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யுள்­ளன.

    இதனால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிளவை ஏற்­ப­டுத்தும் முயற்சி வெற்றி பெற­வில்லை என்ற கருத்தும் நில­வு­கி­றது.

    ஆனால், பண­ப­லமே, கட்சித் தாவல்­களைத் தடுக்­கின்ற மிகப்­பெ­ரிய ஆயு­த­மாக மாறி­யி­ருக்­கி­றது என்­பதே உண்மை.

    இது நிரந்­த­ர­மாக, கட்­சியின் உறுப்­பி­னர்­களைத் தக்க வைத்துக் கொள்ளப் போது­மா­ன­தாக இருக்­காது.  ஏனென்றால், அர­சாங்­கத்­துக்குள் அதி­ருப்தி அலை தீவி­ர­மாகப் பரவிக் கொண்­டி­ருக்­கி­றது.

    முன்னர், அர­சாங்­கத்­துக்கு வெளியில் இருப்பவர்களே அரச உயர்மட்டத்தினரைப் பார்த்து விமர்சிக்கப் பயப்படும் நிலை ஒன்று இருந்தது.

    ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்குப் பின்னர், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே அதன் குறைகளை எடுத்துக் கூறத் தொடங்கியுள்ளனர் அமைச்சர்கள்.

    அமைச்சர் றெஜினோல்ட் குரே போன்றவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், சுதந்திரக் கட்சியின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ராஜபக்ஷ குடும்பத்தினர் வரும் நாட்களில் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன.

    வரப்போகும் தேர்தல் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போராக மட்டும் அமையாது.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கைப்பற்றும் சந்திரிகாவின் போராகவும் அமைந்துள்ளது.

    இதில் சந்திரிகா வெற்றி பெறுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

    – என்.கண்ணன்

    Post Views: 465

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இலங்கை பொருளாதார நெருக்கடி: கையளவு தூரத்தில் உணவு தட்டுப்பாடு – திவாலாகியதா தீவு நாடு?

    May 21, 2022

    மஹிந்தவுக்கு எதிரான பௌத்த மகாசங்கத்தின் அறிவிப்பு எதை உணர்த்துகிறது?

    May 6, 2022

    20 ஆவது அரசியலமைப்பு யாருக்காக? அது சாதித்தது என்ன?

    April 29, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு

    May 27, 2022

    மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

    May 27, 2022

    இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

    May 27, 2022

    பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்

    May 27, 2022

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    May 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு
    • மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு
    • இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”
    • பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version