ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எத்தனோல் மற்றும் போதைப்பொருள் காரர்களில் கைகளுக்குள் சிக்கி சின்னாப்பின்னமாக்கி அடிபணிந்துவிட்டது என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
கலேவெலயில் டி.பி தென்னகோன், மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான், சுத்தமான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன், எனக்கு நேர்ந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்து கூறினேன், அவரது மகன் நாமல் ராஜபக்ஷவிடமும் எடுத்துரைத்தேன்.
என்னுடைய கதையையே யாரும் கேட்கவில்லை. கட்சிக்கு ஏற்படும் அனர்த்தம் தொடர்பில் நான் கூறியதை எனது தந்தைகூட ஏற்றுக்கொள்ளவில்லை.
நான் பழைய பொலிஸ் காரன், அது எனக்கு மறுபக்கம் அந்தப்பக்கமும் எனக்கிருக்கின்றது. இந்த பக்கமும் இருக்கிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை யாருக்கும் அடிமையான கட்சியாக நாளைக்கு விடுவதற்கு நான் தயாரில்லை. கட்சியை சரியான நிலைப்படுத்தி அடுத்த தேர்தலுக்கு செல்லவேண்டும் அந்த பக்கத்திலேயே நானிருக்கின்றேன் என்றார்.
உரையாற்றிக்கொண்டிருந்த அவர், சுமார் ஐந்து நிமிடங்கள் கண்ணீர்விட்டழுதார் இதனால் அக்கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டது.