தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்சி எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப ­தாக அறிக்கை விடு­கி­றதோ அது அந்த வேட்­பா­ளரை தோற்­க­டிப்­ப­தற்­கான ஆத­ர­வா­கவே மாறி­விடும் என்­பதை உணர்ந்து  இந்தத் தேர்­தலில் தமிழ் தலை­வர்கள் மிகவும் அவ­தா­ன­மா­கவே செயற்­பட வேண்டும்.

இவற்றைக் கடைப்­பி­டிக்­காமல் நடந்தால் தமிழ் மக்­களின் எதிர்­கால அர­சி­யலின் நிலைமை கேள்­விக்­கு­றி­யா­கலாம்.

மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்த கையோடு இலங்­கையின் அர­சியல் சூதாட் டம் பல கோணங்­களில் விரி­வ­டைந்து செல்ல ஆரம்­பித்து­விட்­டது.

திடீர் திடீ­ரென நிலை­மைகள் மாற்­ற­ம­டைந்து வரும் போக்கை அவ­தா­னித்துக் கொண்­டி­ருப்­ப தைத் தவிர முக்­கிய தமிழ் அர­சி­யல்­வா­திகள் வேறு எதையும் செய்­யாமல் இரு ப்­பதே சிறந்த உபா­ய­மாகும். இதையே மன்னார் ஆயரும் வலி­யு­றுத்தி அறிக்கை விட்­டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் மிகவும் அவ­தா­ன­மாக பிடி­கொ­டாமல் சொற்­களை உதிர்க்­கின்றார். தமி­ழ­ரசுத் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவும் தென்­னி­லங்கை முற்­போக்குச் சக்­தி­க­ளோடு இணைந்து செயற்­பட விருப்பம் தெரி­வித்­தாரே தவிர தேசி­யக்­கட்­சிகள் பற்றி தனது உரையில் எதையும் கூறாமல் தவிர்த்­துக்­கொண்டார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்­மை­யின வட-கிழக்குத் தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேர்தல் பற்றி ஏதா­வது தெரி­விப்­ப­தற்கு ஒரு தகுந்த தகு­தி­வாய்ந்த தலை­வ­ராக இருப்­பவர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டு­மே­யொ­ழிய கட்சிப் பிர­மு­கர்கள் அறிக்கைகளை குறிப்­பாக ஜனா­தி­பதித் தேர்தல் சம்­பந்­த­மாக தமி­ழர்­களின் நிலைப்­பாடு பற்­றிய அறிக்­கை­களை விடு­வதைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் விரும்­பு­கின்­றார்கள்.

2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் முக்­கிய இரண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளு­டனும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி னர் பேசி­யதும் முடி­வாக சரத் பொன்­சே­காவை ஆத­ரிப்­ப­தாக அறிக்கை விட்­டதும் அவரை  இன்னும்  கூடிய வாக்கு வித்­தி­யா­சத்தில் தோற்­க­டிப்­ப­தற்கு உத­வி­யது.

தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய் யும் கட்சி எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப ­தாக அறிக்கை விடு­கி­றதோ அது அந்த வேட்­பா­ளரை தோற்­க­டிப்­ப­தற்­கான ஆத­ர­வா­கவே மாறி­விடும் என்­பதை உணர்ந்து   இந்தத் தேர்­தலில் தமிழ் தலை­வர்கள் மிக வும் அவ­தா­ன­மா­கவே செயற்­பட வேண்டும்.   இவற்றைக் கடைப்­பி­டிக்­காமல் நடந்தால் தமிழ் மக்­களின் எதிர்­கால அர­சி­யலின் நிலைமை கேள்­விக்­கு­றி­யா­கலாம்.

ஏற்­கெ­னவே, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் எது­வித பேச்­சு­வார்த்­தை­யையும் வைத்துக் கொள்­ளாது எனப் பகிரங்கமா­கவே அறி­வித்­து­விட்­டது.

எதி­ரணி வேட்­பா ளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அண்­மை யில் ஒரு கூட்­டத்தில் எவ­ரு­டனும் எந்த இர­க­சிய பேச்­சு­வார்த்­தை­களும் வைத்துக் கொள்ள மாட்டேன் என உறு­தி­படத் தெரி­ வித்­துள்ளார்.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு டன் பேசி ஒரு தீர்வை எடுக்க முன்­வர அச்சம் கொள்ளும் நிலை­மையே காணப்படுகின்றது. அவர்கள் தமிழ்த் தலை­வர்­க­ளு டன் நடத்தும் பேச்­சு­வார்த்தை தங்­க­ளது சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் வாக்­கு­களை குறைத்­து­விடும் என்­பதில் தெளி­வா­க­வுள்­ளனர். .

ஹெல உறு­மயக் கட்சி : ஹெல உறு­மயக் கட்­சிக்குக் கொடுக்கும் முக்­கி­யத்­துவம் தமிழர் கட்­சிக்கு கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை. இவ்­வ­ளவு காலமும் ராஜ­ப­க் ஷ­வுடன் ஒன்­றரைக் கலந்து   அர­சியல் செய்த ஹெல உறு­மய எல்­லோ­ரையும் முந்­திக்­கொண்டு முதன்­மு­த­லாக அரசை விட்டு வெளி­யே­றி­யதும் தற்போது எதி­ரணி வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப­தாக அறிக்கை விட்­டதும் சோழியன் குடுமி சும்மா ஆடாது.

என்­ப­தற்­கி­ணங்க பெரிய தாற்­ப­ரி­ய­மான விடயம் இதன் பின்னால் இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட வேண்­டி­யது.

ராஜ­பக் ஷ ஆட்சி வீழ்ச்சி காணலாம் என்ற நோக்கில் தான் ஹெல உறு­மயக் கட்­சி யின் இந்த காய் நகர்த்தல் நாடகம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. எதி­ர­ணியின் கூட்­ட­ணியில் ஊடு­ருவ வேண்­டிய தேவைப்­பாடு அக்­கட்­சிக்கு ஏற்­பட்­டது.

ஸ்ரீலங்கா சுதந்­தி ரக் கட்சி ராஜ­பக் ஷ அணி ஆட்­சி­யி­லி­ருந்து விலகி பண்­டா­ர­நா­யக்க பரம்­பரைச் செல்­வாக்­குடன் ஆட்­சியை அமைக்க முன் ­வந்­ துள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன பண்­டா­ர­நா­யக்­க­வி­னதும் சந்­தி­ரி­கா­வி­னதும் கொள்­கை­களைப் பின்­பற்­று­வதைத் தடுக்­க­வேண்­டு­மென்­ப­தற்­காக இந்தக் காய் நகர்தலை ஆரம்­பித்­துள்­ளார்கள்.

அதி­காரப் பகிர்வு

1958இல் எஸ். டபிள்யூ. ஆர்.டீ.பண்­டா­ர­நா­யக்க பிராந்­திய சபை­களை அமைக்க முயன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் பௌத்த அமைப்­புக்­க­ளி­னதும் எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்.

சந்­தி­ரிக்கா 1995இல் பிராந்­தி­யங்­களின் இணைப்பு என்ற யோச­னையை முன்­வைத்­ததும் அது அப்­போ­தைய எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த யோச­னையின் மகத்­ துவம் குறைக்­கப்­பட்டு பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் வைத்து ரணி­லினால் கிழித்­தெ­றி­யப்­பட்­டதும் வரலாற்று உண்மைகள்.

பின்னர் 2002இல் சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யா­கவும் ரணில் பிர­தமராகவும் இருந்த சம­ய த்தில் விடு­தலைப் புலி­க­ளுடன் அமைதி உடன்­ப­டிக்கை செய்­ததும் சொல் ஹெய் மின் உத­வி­யுடன் விடு­தலைப் புலி­க­ளுடன்   பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதும் (ஒஸ்லோ) நோர்வே ஜப்பான் நாடு­களில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது  “ உள்­ளக சுய­நிர்­ணய உரிமை கொண்ட அதி­காரப் பகிர்­வு க்கு” பச்சைக் கொடி காட்­டி­யதும் ஹெல உறு­மய மறந்­தி­ருக்­க­வில்லை.

1958இல் பண்­டா­ர­நா­யக்­கவின் இனப்­பி­ரச்­சினை தீர்வு முன்­னெ­டுப்பும் 1995 ஆம் ஆண்டு சந்­தி­ரி­காவின் இனப்­பி­ரச்­ சினை தீர்வு முன­்னெ­டுப்பும் 2002ஆம் ஆண்டு ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு முன்னெடுப்பும் இந்த எதிரணி ஆட்சி (சந்திரிகா – ரணில்) அமையும்போது முக்கியத்துவம் பெற்று அந்தச் சாயலான   தீர்வுக்கு வித்திட்டுவிடுமோ என்ற ஒரு பெளத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு ஏற் படக்கூடிய பயம் ஹெல உறுமயக் கட்சி க்கு ஏற்பட்டுவிட்டது என்பதாலேயே எதிர ணிக்குள் ஊடுருவி அவ்வாறு எதுவும் நடக் கவிடக் கூடாதென காய் நகர்த்தல்களை கச்சிதமாக செய்துவருகின்றார்கள் என்ற கருத்தை எவரும் தட்டிக்கழிக்கமுடியாது.

– சட்­டத்­த­ரணி கனக நம­நாதன்

Share.
Leave A Reply