நீங்கள் தனியொரு கட்சிக்குச் சொந்தமாகக் கூடாது. அதன் மூலமாக எங்களின் அன்பை இழந்து விடுவீர்கள் என எச்சரிக்கும் மிரட்டல் கடிதங்கள் ஒரு பக்கம் ஆனால் ரசிகர்களோ ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்களாம்!
அரசியல் குறித்து ரஜினிக்கு நாளுக்கு நாள் அலர்ஜி அதிகமாகி வருவதாக நெருக்கமான வட்டாரத்தில் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ரஜினிக்கு வரும் மிரட்டல் கடிதங்கள் தானாம்!
மோடியுடன் சந்திப்பு, அமித்ஷாவுடன் தொலைபேசிப் பேச்சு என ரஜினியைச் சுற்றி அண்மைக்காலமாக ஏகமாய் அரசியல் நெடி வீசியது.
இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீங்கள் தனியொரு கட்சிக்கு சொந்தமாகக் கூடாது.
அதன் மூலமாக எங்களின் அன்பை இழந்து விடுவீர்கள் என எச்சரிக்கும் தொனியில் மிரட்டல் கடிதம் எழுதியிருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களாக ரஜினியின் கோடம்பாக்கம் மண்டபத்திற்கும் போயஸ் கார்டன் இல்லத்திற்கும் இப்படி வந்து குவியும் கடிதங்கள் தான் அவரை மௌனமாக்கியிருக்கின்றனவாம்.
இந்தக் கடிதங்களில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாமோ என்றுதான் ரஜினியும் ஆரம்பத்தில் நினைத்தாராம். பா.ஜ.க. வைப் பிடிக்காதவர்கள் இப்படித் தன்னை மிரட்டுவதாகவே தனக்கு நெருக்கமான வட்டாரத்திலும் கூறி வந்திருக்கிறார்.
ஆனால் பல்வேறு அநாதை இல்லங்களில் இருந்தும் கல்வி நிறுவனங்களில் இருந்தும் வந்து சேர்ந்த கடிதங்கள் தான் அவரை நெகிழ வைத்து விட்டனவாம்.
தமிழகம் முழுவதும் அநாதை இல்லங்களை நடத்துகிற பலரும் அவ்வப்போது உதவி கேட்டு ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கடிதம் எழுதுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு ரஜினி உதவி செய்வது அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே தெரியாதாம். அதேபோல் சுயநிதியில் செயல்படும் சிறு கல்வி நிறுவனங்கள் பலவும் ரஜினியிடம் உதவி பெற்றிருக்கின்றன.
இப்படி உதவி பெற்ற ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் கையெழுத்திட்டு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை.
சமூக மாற்றத்தை உருவாக்கும் விதமாக ஒரு சேவை அமைப்பைத் தொடங்குங்கள். உங்கள் பின்னால் நாங்கள் வருகிறோம் என உருக்கமாக அமைந்திருக்கிறதாம் அந்தக் கடிதங்கள். எனவே ரஜினியை அரசியல் திசை நோக்கி அசைப்பது சிரமம் தானாம்.
அதனால்தான் ரஜினியின் அண்ணன் திருச்சியில் பேட்டி அளிக்கும் போது ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்னார் போலும் ரஜினி வாயைத் திறந்தாலும் பிரச்சினை திறக்கா விட்டாலும் பிரச்சினை.
ரஜினியுடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது தெளிவான முடிவை மட்டுமே. அரசியலா? சமூக சேவையா? அரசியல் இல்லை என்றால் கல்வி மற்றும் நதி நீர் இணைப்புக்கு அவர் களத்தில் இறங்கினாலே போதும் என்றும் சில கடி தங்கள் வந்திருக்கிறதாம்.
ஆனால் ரஜினி ரசிகர்களோ அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கி றார்களாம். இனி முடிவு அவர் கையில்?