அம்பாறைக்கு எரிவாயு கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு சென்ற லொறியொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு எல்லை அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
கடும் மழை காரணமாக வீதியில் இருந்து விலகி, வழுக்கி லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும் லொறியில் ஏற்றப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன்கள் மற்றும் சாரதிக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் காரணமாக லொறி கடுமையாக சேதமுற்ற நிலையில் மீட்புப் பணியில் பொலிசாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.