­ஜ­னா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது பற்றி ஏற்­க­னவே கொள்கை ரீதி­யாக, முடிவு செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அதனை இப்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருக்­கின்­றது.

இந்த முடி­வின்­படி பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, ஆத­ரிக்கப் போவ­தாக கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் அறி­வித்­தி­ருக்­கின்றார். இது ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்ட முடிவு என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

நாட்டில் நல்­லாட்­சி­யொன்றை அமைக்க வேண்டும். அதற்­காகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க வேண்டும். ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்று எதி­ர­ணி­களின் பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறிசேன கோரி­யி­ருந்தார்.

அதே­நேரம் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷவினால் மட்­டுமே வழங்க முடியும். அந்த இய­லுமை அவ­ருக்க மட்­டுமே உள்­ளது.

ஆகவே, அவ­ருக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்க முன்­வர வேண்டும். ஆனால் நிபந்­தனை எத­னையும் விதிக்கக் கூடாது என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உப­த­லை­வரும், அமைச்­ச­ரு­மா­கிய நிமல் சிறி­பால டி சில்வா தெரிவித்­தி­ருந்தார்.

கூட்­ட­மைப்­பினர் அமெ­ரிக்­கா­வுக்கோ, பிரான்ஸிக்கோ, இந்­தி­யா­வுக்கோ செல்­வதில் பய­னில்லை. ஏனெனில் இந்தப் பிரச்சினை ஓர் உள்ளூர் பிரச்­சினை. ஆகவே அதற்கு உள்­ளு­ரி­லேயே தீர்வு காணப்­பட வேண்டும்.

அதனைச் செய்யக் கூடி­யவர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ என்­பதால், அவ­ருக்கே கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்க முன்­வர வேண்டும் என்றும் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா கூறி­யுள்ளார்.

தேர்தல் நடை­பெ­றுவதற்கு ஒரு வார காலம் இருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தி­லேயே இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் முக்­கிய போட்டியாளர்­க­ளாக விளங்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச சார்பில் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்­வாவும் கூட்­ட­மைப்­பிற்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தனர்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பொது வேட்­பா­ள­ருக்கு அத­ரவு வழங்­கு­வ­தற்­கான தனது முடிவை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பே, கூட்­ட­மைப்பின் பல்­வேறு நிலை­களில் உள்ள அதன் தலை­வர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, ஆத­ரிக்கும் வகையில், உரை­களை ஆற்­றி­யி­ருந்­தனர். அத்­துடன் அதற்­கான கருத்­துக்­களை வெளி­யிட்டும் வந்­தனர்.

எதிர்க்­கட்­சிகள் பலவும் ஒன்­றி­ணைந்து, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை. குடும்ப அர­சி­ய­லா­கி­யுள்ள இந்த அரசாங்கத்தை வீட்­டுக்கு அனுப்ப வேண்டும்.

புதி­ய­வர்­களை ஆட்சி பீட­மேற்ற வேண்டும் என்­ப­தற்­காகச் செயற்­பட்டு வரு­கின்­றன. ஊருடன் ஒத்­துவாழ் என்­பார்கள். அதுபோல, எதிர்க்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து எடுத்­துள்ள முடிவை ஏற்று, ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு துணை போவதற்குத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு முடிவு செய்­தி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

இருந்த போதிலும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வும்­சரி, எதி­ர­ணியின் சார்பில் போட்­டி­யி­டு­கின்ற பொது வேட்­பாளர் மைத்தி­ரி­பால சிறி­சேன­வும்­சரி, தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­யா­கிய தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண வேண்­டிய விடயம் குறித்து ஆக்­க­பூர்­வ­மான கருத்­துக்கள் எத­னையும் முன்­வைக்­க­வில்லை.

தமிழ் மக்­களின் நலன்கள், அவர்­களின் அர­சியல் தேவைகள் குறித்து இரு­த­ரப்­பி­னரும் என்ன வகை­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை அவர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­லும்­கூட அவர்கள் சரி­யான முறையில் குறிப்­பி­டவே இல்லை.

இரு தரப்­பி­ன­ருமே தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணத் தயா­ரில்­லை

­இ­ரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் இந்தச் செயற்­பா­டா­னது, தமிழ் மக்­க­ளுக்கு ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பகக்்ஷவைப் பொறுத்­த­மட்டில், அவர் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண முன்­வ­ர­மாட்டார், அதற்­கான அணு­கு­முறை எதுவும் அவ­ரிடம் இல்லை என்­பதை தமிழ் மக்கள் நன்­றா­கவே உணர்ந்­தி­ருக்­கின்­றார்கள்.

இதன் கார­ண­மா­கத்தான் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ச­வையோ அல்­லது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யையோ, மகிந்த ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யா­கிய காலம் தொடக்கம் ஆத­ரிக்­காமல் தேர்­தல்­களில் எதிர்த்து வாக்­க­ளித்து வந்­துள்­ளனர்.

யுத்­த­ கா­லத்தில் இடம்­பெற்ற அர­சாங்­கத்தின் அணு­கு­மு­றைகள், செயற்­பா­டுகள் என்­பன தமிழ் மக்­க­ளுக்கு பெரும் வேதனையைத் தரு­வ­தா­கவே அமைந்­தி­ருந்­தன.

இருந்த போதிலும் யுத்தம் முடி­வ­டைந்­த­பின்னர், அர­சாங்கம் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகளைப் புரிந்து கொண்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முன்­வரும். ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என நம்­பிக்­கை­யோடு எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

ஆயினும். அந்த எதிர்­பார்ப்பில் குறைந்­தது, ஒரு சத வீதத்­தை­யேனும், நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­க­மும்­சரி, ஜனா­தி­ப­தி­யும்­சரி தயா­ராக இருக்­க­வில்லை.

மாறாக யுத்த காலத்­திலும் பார்க்க அதிக நெருக்­க­டி­க­ளையும், கஷ்­டங்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டிய நிலை­மைக்கு தமிழ் மக்கள் ஆளாக்­கப்­பட்­டி­ருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை இந்தத் தேர்­தலில் ஆத­ரிப்­ப­ரற்குத் தயா­ராக இல்லை என்­பது தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யா­கிய நாள் முதலே வெளிப்­பட்­டி­ருந்­தது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெறு­கின்ற அர­சியல் பேச்சில், மேடைப் பேச்­சக்­காகக் கூட ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து கருத்­துக்­களை முன்­வைக்­க­வில்லை. இது தமிழ் மக்கள் பொது வேட்­பா­ள­ரா­கிய எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு மேலும் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

இதை­யும்­விட, தேர்தல் கால, அர­சியல் புறச் செயற்­பா­டுக­ளாக, அரச தரப்பில் இருந்து எதி­ர­ணி­யினர் பக்கம், பலர் கட்சி தாவிய நட­வ­டிக்­கையும் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்க்ஷ தொடர்பில் மேற்­கொண்­டி­ருந்த கருத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கே உத­வி­யி­ருக்­கின்­றது,

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில்தான் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆதரிக்கப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது.

பொது வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப­தற்­கான கார­ணங்­களைக் குறிப்­பிட்டு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள இரண்டு பக்க அறிக்­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை ஏன் ஆத­ரிக்­க­வில்லை என்­ப­தற்கு தெளி­வான விளக்­க­ம­ளிக்­கப்­பட்டிருக்­கின்­றது.

ஆனால், அவ்­வாறு ஆத­ரிப்­ப­தனால் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக என்ன வகை­யான நலன்கள் கிடைக்கும் என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

எதி­ர­ணி­யி­னரின் பொது வேட்­பாளர் பத­விக்கு வந்தால் என்ன நடக்கும், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதன் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு எந்த வகையில் தீர்வு கிட்டும் என்­பது பற்றி எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

பொது எதி­ர­ணியில் முக்­கிய தலை­வர்­க­ளாக இணைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வ­ருமே ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள்.

தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்பில் தீர்வு காண்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்­களைப் பெற்­றி­ருந்­தனர். இரு தலை­வர்கள் மீதும் தமிழ் மக்கள் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பார்கள் என்று அதிக அளவில் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்கள். ஆயினும் அவர்­களின் நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்றத் தவ­றி­விட்­டி­ருந்­தன.

இந்த நிலையில் அவர்கள் மீண்டும் அதி­கா­ரத்தைப் பெறு­கின்ற பட்­சத்தில் என்ன செய்­வார்கள் எந்த வகையில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பார்கள் என்­பது தெளி­வில்­லாமல் இருக்­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­க­வுக்கும் இடையில் இர­க­சிய ஒப்­பந்தம் ஒன்று செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்று வெளி­யா­கி­யி­ருந்த தக­வல்­களை கூட்­ட­மைப்பு தலை­வர்கள் உறு­தி­யாக மறுத்துரைத்தி­ருக்­கின்­றார்கள்.

அதே­நேரம், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு எதி­ர­ணி­யி­ன­ரிடம் என்ன வகை­யான திட்டம் அல்லது ஆலோ­சனை இருக்­கின்­றது என்­பது குறித்து கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­களுக்கு வெளிப்­ப­டுத்­த­வு­மில்லை.

Sampanthanதமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கிய ஆர்.சம்­பந்தன், குறைந்த பட்சம், கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலைவர்­க­ளுக்குக் கூட, ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்கு அப்பால், எந்த அடிப்­ப­டையில் எதிரணியின­ருக்கு ஆத­ரவு வழங்க முடிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது பற்றி இன்னும் தெளி­வு­ப­டுத்­த­வில்லை.

இந்த நிலைப்­பா­டா­னதுஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கின்ற தமிழ் மக்­களின் எதிர்­கால அர­சியல் நிலை­மைகள் போக்­கு­க­ளுக்கு என்ன நடக்கும் என்­பதை திரை­போட்டு மறைக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

இலங்­கையில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­பட வேண்டும் என்­பதைத் தமது அர­சியல், இரா­ணுவ பொரு­ளா­தார நோக்கங்க­ளுக்­காக விருப்­பி­யுள்ள இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் மீது நம்­பிக்கை வைத்து கூட்­ட­மைப்பு, இந்தத் தேர்­தலில் ஒரு நிலைப்­பாட்டை எடுப்­ப­தற்கு முன்­வந்­தி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்ட பின்னர் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­கின்ற ஆட்­சி­யா­ளர்­களை இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு இந்த வெளிச் சக்­திகள் அழுத்தம் கொடுக்கும் என்­பது கூட்­ட­மைப்பு தலை­மையின் நம்­பிக்­கை­யாகத் தெரிகின்­றது.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­கனை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஆயுதப் போராட்­டத்தை முறி­ய­டித்து தோற்­க­டிப்­ப­தற்கு இந்த வெளி­நா­டுகள் பேரு­த­வி­யாகப் பின்­ன­ணியில் இருந்து செறய்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது உல­க­றிந்த இர­க­சியம்.

யுத்தம் முடிந்­த­வு­ட­னும்­சரி, யுத்தம் முடி­வ­டைந்த ஐந்­தரை வருட காலப்­ப­கு­தி­யி­லும்­சரி, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு உத­விய நாடுகள் தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு இலங்கை அரசு மீது அழுத்தங்­களைப் பிர­யோ­கித்­த­தாகத் தெரி­ய­வில்லை.

அவ்­வா­றான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்தால், ஓர் அர­சியல் தீர்­வுக்­கான அடித்­த­ள­மா­வது இடப்­பட்­டி­ருக்கும். அல்லது தீர்வை நோக்­கிய அர­சியல் நகர்­வுக்­கான ஆயத்­தங்­க­ளா­வது இடம்­பெற்­றி­ருக்கும். இது நடை­பெ­ற­வில்லை.

மாறாக, இலங்­கையில் தமிழ் மக்­களை பேரி­ன­வா­தி­களின் தொடர்ச்­சி­யான அர­சியல் வன்­மு­றை­களில் பாது­காப்­ப­தற்­காக இலங்­கை­யுடன்  இந்­தியா செய்து கொண்ட ஒப்­பந்தம் கூட சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அந்த ஒப்­பந்­தத்­திற்கு நேர்­மா­றாக, இணைந்திருந்த வடக்கும் கிழக்கும் இரண்­டாகப் பிரிக்­கப்­பட்டு, அங்கு பல­வந்­த­மாக சிங்­களக் குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு, தமிழ் மக்­களின் தாயகப் பிர­தே­சங்கள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

அந்த நட­வ­டிக்­கைகள் இப்­போது முழு வீச்சில் யாரு­டைய எதி;ர்ப்புமின்றி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்­களும், சட்­ட­ரீ­தி­யான காணி­களும், அரச தரப்­பி­னரால் வஞ்­சகம் நிறைந்த அர­சியல் நோக்­கத்­துடன் பகி­ரங்­க­மாக அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இத்­த­கைய ஒரு நிலை­மையில் தமிழ் மக்­களின் அர­சியல் அமைப்பா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, ஆட்சி மாற்­றத்­திற்கு ஒத்­து­ழைக்க முன்­வந்­துள்ள போதிலும், தமிழ் மக்­களின் இன்­னல்­க­ளுக்கு, அவர்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்ற நெருக்கடிகளுக்கு எந்த வகையில் முடிவு எட்­டப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் தான் நம்­பி­யுள்ள வெளிச்­சக்­தி­க­ளா­கிய வெளி­நா­டு­க­ளுக்கு அழுத்­தங்­களைக் கொடுத்­தி­ருக்­கின்­றது என்­பதும் தெரி­ய­வில்லை.

உள்­ளூரில், ஆட்சி மாற்­றத்­திற்­காகத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற பொது வேட்­பாளர் மீது அல்­லது அவ­ருக்குப் பின்னாலிருந்து செயற்­ப­டு­கின்ற அர­சியல் தலை­மைகள் மீது தமிழ் மக்­களின் நெருக்­க­டி­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காக, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு எத்­த­கைய அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தி­ருக்­கின்­றது என்­பதும் தெரி­ய­வில்லை.

இதனால், அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­னவா அல்­லது வெறு­மனே ஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கின்ற வெளிச்­சக்­தி­க­ளுக்கு நாம் தமிழ் மக்­களின் நிலை­மை­களை தெளி­வாக எடுத்துக் கூறி­யி­ருக்­கின்­றோம்­தானே, அதன் அடிப்­ப­டையில் ஓர் அர­சியல் தீர்வைப் பெற்றுத் தரு­வார்கள் என்ற நம்­பிக்­கையில் ஆட்சி மாற்­றத்­திற்­கான ஆத­ரவை வழங்க கூட்­ட­மைப்பு முன்­வந்திருக்கின்­றதோ என்று சந்­தே­கிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பது குறித்து எதி­ர­ணி­யினர் மத்­தியில் தெளி­வான கொள்கைகள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இந்­தப்­பி­ரச்­சி­னையைத் தொட­ர­வி­டக்­கூ­டாது என்­பதில் அவர்கள் ஆர்வம் கொண்­டி­ருக்­கின்­றார்­களா என்­பதும் தெரி­ய­வில்லை. அதே­நேரம் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் பிரச்­சினை என்ற ஒன்று இருக்­கின்­றதா என்று கேள்வி எழுப்பும் வகையிலான கொள்­கையைக் கொண்­டுள்ள .

ஹெல உறு­ம­ய­வுடன் பொது எதி­ர­ணி­யினர், தமிழ் மக்­களின் அர­சியல் நலன்­களைப் புறந்­தள்­ளத்­தக்க வகை­யி­லான ஒப்பந்தம் செய்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்த நிலை­மையில் பொது எதி­ர­ணி­யினர் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை தமிழ் மக்கள் தொடர்பில் எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­வார்கள் என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது.

பல்­வேறு சந்­தே­கங்கள், பல்­வேறு வினாக்கள் எழுந்­தி­ருக்­கின்ற ஒரு நிலை­மை­யில்தான் – தெளி­வற்ற ஒரு நிலையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பொது வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப­தற்­கான தனது முடிவை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற தமிழ் மக்­களின் அர­சியல் தேவை தொடர்பில், அரசியல் நிலைப்பாட்டில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த அளவிற்குத் தெளிவாக இருக்கின்றது, உறுதியாக இருக்கின்றது என்ற வினாக்களை இந்த முடிவு எழுப்பியிருக்கின்றது.

நடைபெறப் போகின்ற தேர்தல் இந்த வினாக்களுக்கு விடைகளைத் தேடித் தருமா அல்லது தேர்தலின் பின்னர், இடம்பெறப் போகின்ற மாற்றங்கள் இதற்கான விடைகளைத் தருமா என்பது தெரியவில்லை.

indexஇந்த ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிய சந்தர்ப்பத்தில்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு டிசம்பருக்குள் முடிவு காணப்பட வேண்டும் இல்லையேல் ஜனவரி முதல் பரவலாக சாத்வீகப் போராட்டங்கள் வெடிக்கும் என சூளுரைத்திருந்தார்.

அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடைபெற்றாலும்கூட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற வகையில் கருத்துக்கள் அப்போது வெளியிடப்பட்டிருந்தன.

டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்துவிட்டது, தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியினர் முனைந்துள்ள இந்தத் தேர்தலில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கங்களிலும்கூட தமிழ் மக்களின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கான உறுதி மொழிகளைக் காண முடியவில்லை.

இது விடயத்தில் அறிவிக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பதும் தெரியவில்லை.

செல்­வ­ரட்னம்சிறி­த­ரன்

Share.
Leave A Reply