ஏமாந்த கூட்டங்களாக தமிழர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் (சிங்களவர்கள்) 60 வருடங்கள் மட்டுமல்ல.. இன்னும் … 600 வருடங்கள் தொடர்ச்சியாக தமிழர்களை ஏமாற்றுவார்கள்.
பொன்னாடை போர்த்துவோம்! எங்கள் பொன்னான வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு காணிக்கையாக்கு வோம்!! என.. பொதுஅணி வேட்பாளர்களை ஆதரித்து.. யாழ்.சங்கிலியன் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வடக்கிற்கான முதலாவது பிரச்சாரக் கூட்த்தில் பெரும்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்டவர்களாம்.
சிங்கள அரசியல் வாதிகளின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்து… அவர்களை ஆட்சிப்பீடத்தில் அமரவைப்பது தமிழ் மக்கள்தான். பின்பு…. தாங்கள் அவர்களிடம் நம்பிக்கெட்டதாக ஆட்சிக்கு வருபவர்களை தூற்றுவதும் தமிழர்கள்தான்.
தமிழன் தமிழர்களை மட்டும்தான் ஏமாற்ற முடியும். சிங்களவனை ஒரு காலத்திலும் ஏமாற்ற முடியாது.
தமிழர்கள் சிங்களவர்களிடம் தாங்களே ஏமாந்து, தாங்களே சிங்களவர்களுக்கு வாக்களித்து, தாங்களே தேடிக்கொண்டு (தாங்களே பொல்லைக் கொடுத்து அடிவாங்கிக்கொண்டு)…,
ஆட்சிக்கு வந்தவுடன்.. தாங்களே அவர்களை எதிர்த்து… திட்டித் தீாத்து கத்திக், குளறி கடைசிவரை எதுவும் கிடைக்காமல் சாகவேண்டியதுதான்.
இப்போ…,பொன்னாடை போர்த்துவோம்! பொதுஅணி வேட்பாளருக்கு எங்கள் பொன்னா வாக்குகளையும் காணிக்கையாக்குவோம். பின்னாளில் புறம் சொல்லி தூற்றுவோம்…
புத்தபகவானே! யாழ் மாவட்ட தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத்தா! தமிழர்களின் முழுமையான வாக்குகள் எனக்கே கிடைத்து நான் வெற்றிவாகை சூடினால.. உனக்காக யாழ் மாவட்டத்தில் ஆயிரம் விகாரைகளை வருங்காலத்தில் அமைத்திடுவேன்.
யாழ் குடாநாட்டு மக்களே! மகிந்த தான்தான் யுத்த வெற்றிக்கு (பிரபாகரனுக்கு கோவணம் கட்டியது) காரணம் என்கிறார். ஆனால்.. கடுமையான செல்வீச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த வெற்றிக்கு (பிரபாகரனுக்கு கோவணம் கட்டியது) காரணமானவன் நான் தான்.
அதனால்..2010 ஆம் ஆண்டு என்னை ஜெனாதிபதியாக்குவதற்காக பெரும்பான்மையாக எனக்கு நீங்கள் வாக்களித்தது போன்று இம்முறையும் எமது அணிக்கு வாக்களித்து…, என்னை பாதுகாப்பு செயளாளர் “கோட்டா பய” வின் பதவியில் அமர்த்துவீாகளானால்..,
வடக்கில் தங்கியிருக்கும் 2 இலச்சம் இராணுவத்தினரின் குடும்பங்களை வடமாகாணத்தில் குடியமர்த்தி இராணு ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்பேன். வாக்களிப்பீாகளா???
நான் இப்போ மறைவாக இருந்து செயல்படுகிறன். எதிரணியினர் நாங்கள் வென்றவுடன் பாருங்கள் நான் எப்படி வெளியே வருவேன் என்று…