“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,  மேற்குலக நாடுகள் சொல்வதும் பொய்.. காணொளியில் காண்பதே  மெய்.

ஐ.எஸ். போரா­ளி­களால் பணயக்கைதி­யாக பிடித்து வைக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னி­ய­ரான ஜோன் கான்டில் ஈராக்­கிய மொசூல் நகருக்குள் சுற்றுப் பயணம் மேற்­கொள்­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று யூரியூப் இணை­யத்­த­ளத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஈராக்கின் இரண்­டா­வது மிகப் பெரிய நக­ரான மொசூல் கடந்த வருடம் ஜூன் மாதம் இடம்­பெற்ற மோதல்­களின் போது ஐ.எஸ். போரா­ளி­களால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தது.

மேற்­படி மோதல்­களின் போது ஐ.எஸ். போரா­ளி­களால் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்ட 2000க்கும் மேற்­பட்ட ஷியா இனத்­த­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக மனித உரி­மைகள் கண்கா­ணிப்­பகம் தெரி­விக்­கி­றது.

இந்­நி­லையில் புதி­தாக வெளி­யி­டப்­பட்ட 8 நிமிட வீடியோ காட்சி ஜோன் கான்டில் கார் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்­கிளில் சந்தைப் பகு­தி­யொன்­றுக்கும் மருத்­து­வ­ம­னை­யொன்­றுக்கும் பொலிஸ் நிலை­ய­மொன்­றுக்கும் விஜ­யத்தை மேற்­கொண்டு குண்டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­கான அந்­நகர் ஸ்திரத்தன்­மை­யுடன் இருப்­ப­தாக காண்­பிப்­பதை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

இந்த வீடியோ காட்­சி­யா­னது ஐ.எஸ். போராளி குழுவின் வெளி­நாட்டு மொழிப் பிரி­வான அல்­ஹாயத் ஊடக நிலை­யத்தால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மேற்­படி வீடியோ காட்­சியில் தோன்­றிய புகைப்­பட ஊட­க­வி­ய­லா­ள­ரான ஜோன் கான்டில், மொசூல் நகர் வழ­மைபோல் அமை­தி­யாக இருப்­ப­தாக குறிப்­பிட்டார்.

அந்த வீடியோ காட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்­கப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேற்­கு­லக நாடு­களின் ஊட­கங்கள் மொசூல் நக­ரி­லுள்ள மக்கள் பயத்­துடன் வாழ்­வ­தாக தவ­றான தக­வல்­களை வழங்கி வரு­வ­தாக ஜோன் கான்டில் தெரி­வித்தார்.

“ஐ.எஸ். போரா­ளி­களின் வாழ்க்கை அழுத்­தத்­திற்­குள்­ளா­ன­தா­க­வுள்­ள­தா­கவும் மக்கள் சங்­கி­லி­களால் கட்­டப்­பட்டு அடித்து ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள தாகவும் மேற்குலக நாடுகள் சித்திரிக்க விரும்புகின்றன. ஆனால், உண்மையில் மொசூல் நகரில் வாழ்க்கை வழமை போல் உள்ளது” என அவர் கூறினார்.

Share.
Leave A Reply