ஒரு கிராமம். கிரா­மத்தில் வீடு. அந்த வீட்டில் இரு குடும்­பங்கள். ஒரு குடும்பம் வலி­யது. மற்­றை­யது எளி­யது. வலிய குடும்­பத்­திற்கு ஜமீன்­தார்­களின் ஆத­ரவு உண்டு.

அதற்கு எளிய குடும்­பத்தைக் கண்டால் ஆகாது. தீராப் பகை. இந்தக் குடும்­பங்கள் எந்­நே­ரமும் சண்டை பிடிக்கும். சண்டை ஊராரை பிள­வு­ப­டுத்தும். சில சம­யங்­களில் கிரா­மிய பஞ்­சா­யத்து வரை செல்லும்.

எளிய குடும்­பத்தில் இரு பிள்­ளைகள். ஒருவன் போராளி. மற்­றவன் அடங்கிப் போகின்­றவன். போரா­ளியோ, வலிய குடும்­பத்தைப் பூண்­டோடு அழிக்க வேண்­டு­மென கங்­கணம் கட்டிக் கொண்டு அலை­பவன்.

அமை­தி­யா­ன­வனோ, ஊரா­ருடன் கலந்து பேச விரும்­புவான். வலிய குடும்­பத்­துடன் சமா­தா­ன­மாக வாழும் வழி வகை­களைத் தேடுவான். ஜமீன்­தார்கள் தந்­தி­ர­மா­ன­வர்கள். போரா­ளியை சண்­டைக்­கா­ர­னாக முத்­திரை குத்தி, அமை­தி­யா­ன­வனை சூச­க­மாக தமது கைக்குள் போட நினைப்­ப­வர்கள்.

இங்கு சீண்­டல்கள் உண்டு. வலிய குடும்பம் போராளிப் பிள்­ளையை சீண்டும். போராளி வலிய குடும்­பத்தை வம்புக்கிழுப்பான்.

வலிய குடும்பம் அறைக் கத­வு­களை அடைத்து, எளிய குடும்­பத்தை முடக்கி வைக்கும். பின்னர், எளிய குடும்­பத்தின் அப்­பா­வி­களைத் தாக்கும். தொடர்ந்து ஜமீன்­தார்கள் சமா­தானம் பேச வரு­வார்கள். வலிய குடும்பம் இழைத்த கொடு­மைகள் மறைக்­கப்­பட்டு விடும்.

வலிய குடும்­பத்­திற்கு கிரா­மத்து பஞ்­சா­யத்தைப் பற்றிக் கவ­லை­யில்லை. பஞ்­சா­யத்து ஜமீன்­தார்­களின் வார்த்­தைக்கு கட்­டுப்­பட்­டது என்­பதை வலிய குடும்பம் அறியும்.

வலிய குடும்பம் எளிய குடும்­பத்தின் காணியை அப­க­ரிக்­கலாம். இது எந்தன் நிலம் என வாதி­டலாம். இது எளிய குடும்­பத்தின் பூர்­வீக இல்லம் என்­பதை மறந்து, இங்கு எளிய குடும்­பத்­திற்கு இட­மில்லை எனலாம். எதுவும் பிரச்­ச­ினை­யாக இருக்­காது.

ஜமீன்­தார்கள் வலிய குடும்­பத்­திற்­காக பரிந்து பேசு­வார்கள். எளிய குடும்­பத்தை அழிப்­ப­தற்­காக மறை­மு­க­மாக அரி­வாளைக் கொடுப்­பார்கள்.

வெளியில் இரு­வ­ரையும் அழைத்து சமா­தானம் பேசு­வார்கள். சமா­தானம் பேசு­வ­தாக பாசாங்கு செய்­வார்கள். பிறகு காணாமல் போய் விடு­வார்கள். இன்று நேற்று மாத்­தி­ர­மல்ல, இது காலா­கா­ல­மாக நடக்கும் நாடகம். சுழலும் சக்­க­ரத்தைப் போன்­றது.

இந்தக் கதை உண்­மை­யா­னது. கிராமம் என்­பதை சர்­வ­தேச சமூகம் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். சர்ச்­சைக்­கு­ரிய வீடு மத்­திய கிழக்கில் உள்­ளது. இதில் எளிய குடும்பம் பலஸ்­தீ­னர்கள். வலிய குடும்பம் இஸ்ரேல்.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகை ஜமீன்­தார்கள் எனலாம். போரா­ளி­யாக ஹமாஸ் இயக்­கத்­தையும், சமா­தான விரும்­பி­யாக பத்தா இயக்­கத்­தையும் குறிப்பிடலாம். பஞ்­சாயத்து எது­வென்று அனு­மா­னிப்­பது எளிது. அது ஐக்­கிய நாடுகள் சபை.

இந்த தொடர்­க­தையை படித்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள் மனதில் பல கேள்­விகள் எழக்­கூடும். இது இனி­மேலும் இப்­ப­டியே சென்றுக் கொண்­டி­ருக்­குமா? எளிய குடும்­பத்­திற்கு விடிவே கிடையாதா? இவர்கள் எத்­தனை நாட்கள் தான் அடக்குமு­றைக்குள் சிக்­கி­யி­ருப்­பது? எல்­லை­யிட்டு பிரிக்­கப்­பட்ட வீட்­டுக்குள் சுதந்­தி­ர­மாக நட­மாட முடங்கிக் கிடப்­பது? எளிய குடும்பம் என்­ப­தற்­காக எத்தனை நாட்கள் முக­வரி இல்­லா­த­வர்­க­ளாக வாழ்­வது? எத்­த­னையோ கேள்­விகள்.

இந்தக் கேள்­வி­க­ளுக்கு பதில் கிடை­யாது என்­பது ஜமீன்­தார்­களின் நம்­பிக்கை. பதில் கிடைக்­காமல் இருந்தால் தான் ஜமீன்­தார்­க­ளுக்கு சந்­தோஷம்.

அவர்­களைப் பொறுத்­த­வ­ரையில், எளிய குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் எப்­போ­துமே அடக்கி ஆளப்­பட வேண்­டி­ய­வர்கள் என்பது ஜமீன்­தார்­களின் எண்ணம். எத்­த­கைய அநி­யா­யங்கள் நடந்­தாலும் ஊரார் பார்த்துக் கொண்­டி­ருப்­பார்­க­ளென ஜமீன்­தார்கள் கருதியிருக்­கக்­கூடும்.

எளிய குடும்­பத்­திற்கு சண்­டை­யிட்டுப் போரிடக் கூடிய வலு இல்­லாமல் இருக்­கலாம். அதற்­காக, அடங்­கியே இருக்க வேண்டும் என்ற கட்­டாயம் இல்லை.

ஏதோ­வொரு வகையில் வட்­டத்­திற்குள் இருந்து விடு­பட்டே ஆக வேண்டும் என்ற திட­சங்­கற்பம் உரு­வாகும் பட்­சத்தில் எத்­த­னையோ வழிகள் உண்டு. அவை சூட்­சு­ம­மான வழி­க­ளா­கவும் இருக்­கலாம்.

abbas-mahmud-president-palestinian.n

இன்று பலஸ்­தீன அதி­கா­ர­ச­பையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இப்­ப­டி­யா­ன­தொரு வழியைத் தான் கையாண்­டி­ருக்­கிறார். இஸ்­ரே­லிய தரப்பு பலஸ்­தீ­னர்­க­ளுக்கு இழைக்கும் கொடு­மைக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் மூலம் தீர்வு காண முடி­யாது என்­பதை அறிந்தார்.

இந்தக் கொடு­மை­களை சர்­வ­தேச சமூகம் உண­ரு­மானால், ஐக்­கிய நாடுகள் சபை என்ற கட்­ட­மைப்­பிற்கு அப்பால் உலக நாடுகளின் ஆத­ரவைப் பெற முடியும் என்­பதை அவர் உணர்ந்தார்.

அநி­யா­யத்­திற்­காக நீதி கேட்டு செல்லும் குடும்­பத்­திற்கு பஞ்­சா­யத்தில் நீதி கிடைக்­க­வில்லை என்று வைத்துக் கொள்வோம். பஞ்­சா­யத்தின் விசா­ர­ணைகள் அநீ­தி­யா­னவை என்­பதை குடும்பம் முறை­யாக நிரூ­பிக்­கு­மானால், சில சம­யங்­களில் ஊரார் பஞ்­சா­யத்­திற்கு எதி­ராகத் திரும்­பலாம்.

அவர்கள் குடும்­பத்­திற்­காக அணி திரண்டு பஞ்­சா­யத்தின் மீது அழுத்தம் கொடுக்­கலாம். பஞ்­சா­யத்தைத் தள்ளி வைத்து ஊரார் தீர்ப்புச் சொல்­லக்­கூ­டிய சாத்­தி­யமும் உண்டு.

இதே சூட்­சு­மத்தைத் தான் மஹ்முத் அப்பாஸ் கையாண்டார். ஹமாஸ் இயக்­கமும், பத்தா இயக்­கமும் அங்கம் வகிக்கும் ஐக்­கிய அர­சாங்­கத்தின் மூலம் பலஸ்­தீன மக்கள் சார்­பாக ஐ.நா. பாது­காப்புச் சபையில் தீர்­மா­ன­மொன்றை அவர் சமர்ப்­பித்தார்.

தீர்­மா­னத்தில் பெரி­தாக ஒன்றும் இல்லை. இஸ்­ரே­லுடன் சமா­தானம் பேசி, 2017ஆம் ஆண்­டிற்குள் இஸ்­ரேலின் முற்­று­கைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தான் இருந்­தது.

**தீர்­மானம் தோல்வி அடைய வேண்டும் என்­பது அப்­பாஸின் எதிர்ப்­பார்ப்­பாக இருந்­தி­ருக்க வேண்டும். இஸ்­ரே­லுடன் சமா­தா­ன­மாக வாழ்­வது என்ற நியா­ய­மான கோரிக்­கையைக் கூட அங்­கீ­க­ரிக்­காத பஞ்சா­யத்துக் கட்­ட­மைப்பில், பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எந்த விதத்தில் நீதி கிடைக்கும் என்­பதை வலி­யு­றுத்­து­வது அவ­ரது நோக்கம். அப்­பாஸின் எதிர்ப்­பார்ப்பை முற்­று­மு­ழு­தாக நிறை­வேற்றும் வகையில், தீர்­மானம் தோற்­க­டிக்­கப்­பட்­டது. அமெ­ரிக்கா எதிர்த்து வாக்­க­ளித்­தது. பிரான்ஸ் ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததும், பிரிட்டன் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ள­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்க விட­யங்கள்.

ஐக்­கிய நாடுகள் சபை என்ற கட்­ட­மைப்­பிற்கு அப்பால், பலஸ்­தீ­னத்­திற்கு அங்­கீ­காரம்   தேடு­வது அப்­பாஸின் முயற்சி என்றால், அதற்கு நல்ல பலன் கிடைத்­தி­ருக்­கி­றது. இன்று பல நாடுகள் பலஸ்­தீ­னத்தை ஒரு தேச­மாக அங்­கீ­க­ரித்­துள்­ளன.

சுவீ­டனைத் தொடர்ந்து, சில ஐரோப்­பிய நாடு­களும் பலஸ்­தீன தேசத்தை அங்­கீ­க­ரிப்­பது பற்றி சிந்­தித்து வரு­வ­தாகத் தெரி­கி­றது. பலஸ்­தீ­னத்தின் தீர்­மா­னத்­திற்கு பிரான்ஸ் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது என்றால் அதற்குக் காரணம், ஐரோப்­பிய நாடுகள் தொடுத்த அழுத்­தமே தவிர வேறொன்றும் அல்ல.

ஐ.நா. பாது­காப்புச் சபைக்கு அப்பால் உலக நாடு­களின் அங்­கீ­காரம் தேடும் முயற்­சியை அப்பாஸ் அடுத்த கட்­டத்­திற்கு நகர்த்­தி­யி­ருக்­கிறார். ஐ.நா. கட்­ட­மைப்­பிற்குள் இருந்­தாலும் சுதந்­தி­ர­மாக இயங்கக்கூடிய சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பலஸ்­தீ­னத்தை இணைத்துக் கொள்ளும் முயற்­சியை அவர் ஆரம்­பித்­துள்ளார். இந்த நீதி­மன்­றத்தின் செயற்­பா­டு­க­ளுக்கும், கட்­ட­மைப்­பிற்கும் ஆதார­மாக அமைந்த ரோமன் சட்­டத்தில் அப்பாஸ் புதன்­கி­ழமை கைச்­சாத்­திட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

நியூஸிலாந்தின் ஹேக் நகரில் இயங்கும்  “International Criminal Court (ICC)” சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐசீசீ) சற்று விவ­கா­ர­மான அமைப்­பாகும். இதில் போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் பற்­றிய வழக்குகள் விசா­ரிக்­கப்­படும். தமது மக்களுக்கு எதி­ராக இஸ்­ரே­லியப் படைகள் கட்­ட­விழ்த்து விட்ட அட்­டூ­ழி­யங்கள் பற்றி பலஸ்­தீ­னர்கள் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் முறை­யி­டலாம்.

அது அப்­பாஸின் நோக்­க­மல்ல. இஸ்­ரே­லிய படை­க­ளுக்கு எதி­ராக பலஸ்­தீனம் முறை­யிடும் பட்­சத்தில், குற்­ற­வியல் நீதி­மன்றம் மேற்குக் கரை­யிலும் காஸா­விலும் நிகழ்ந்­தி­ருக்­கக்­கூ­டிய போர்க்­குற்றங்களை விசா­ரிக்­கலாம். இந்த விசா­ர­ணையில் இருந்து ஹமாஸ் இயக்­கமும் தப்­பிக்க முடி­யாது.

அப்­பாஸின் நோக்கம், பலஸ்­தீனம் என்ற தேசத்­திற்கு அங்­கீ­காரம் கோரு­வ­தற்­காக ஐசீ­சீயை பயன்­ப­டுத்திக் கொள்­வது தான். 2009ஆம் ஆண்டு இஸ்­ரே­லிய இரா­ணுவம் காஸா பள்­ளத்­தாக்கை முற்றுகையிட்­ட­போது, பலஸ்­தீன அதி­கா­ர­சபை ஐசீசீ யின் முன்­னி­லையில் சென்­றது.

ஆனால், ஐக்­கிய நாடுகள் சபையோ, ஐசீசீ யின் அங்­கத்­துவ நாடு­களோ, பலஸ்­தீ­னத்தை ஒரு தேச­மாக கரு­த­வில்­லை­யென ஐசீ­சீயின் பிர­தம வழக்­கு­ரைஞர் அன்று கூறினார். இன்று, ஐநா பொதுச்சபை பலஸ்தீனத்திற்கு ‘அங்கத்தவர் அல்லாத கண்காணிப்பு தேசம்’ என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. ஐசீசீ யில் அங்கத்துவம் பெற்றால், பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது அப்பாஸின் கணிப்பு.

இன்று பலஸ்தீன சமூகத்தைப் போன்ற எத்தனையோ சமூகங்கள், தம்மை விடவும் வலுவான சமூகங்களின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். இந்த சமூகங்கள் ஐக்கிய நாடுகள் என்ற கட்டமைப்பின் ஊடாக நியாயம் பெற முடியாத நிலை சமகாலத்தின் துரதிருஷ்டமாகும்.

ஐநாவைத் தாண்டிய தீர்வு முயற்சியின் ஊடாகவும் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதற்கான வழியை அப்பாஸ் காட்டியிருக்கிறார். அவரது ராஜதந்திரத்திற்குக் கிடைக்கும் வெற்றி அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் பல சமூகங்களுக்கு விமோசமான அமையக்கூடும்.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை –

பிந்திய செய்தி

பலஸ்தீன தேசத்தைக் கோரும் தீர்மானத்தை ஐ.நாவில் மீண்டும் கொண்டுவர அப்பாஸ் முடிவு: பலஸ்தீனத்தின் வரி வருவாய் இஸ்ரேலால் முடக்கம்
January 5th, 2015

w-2பலஸ்தீன தேசத்தை நிறுவுவதற்கு அழைப்புவிடுக்கும் தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வருவது குறித்து ஜோர்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட இதே போன்ற ஒரு தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளை பெறாமல் தோல்வி அடைந்தது. எனினும் முன்வைக்கவிருக்கும் புதிய தீர்மானத்திற்கு ஐ.நாவில் அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலஸ்தீன அதிகா ரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னர் முன்வைக்கப்பட்ட தீர்மான த்தில் 2017 க்கு முன்னர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பலஸ்தீன சுதந்திரத்திற்கு கோரப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்புக்கு எதிராக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வாய்ப்பு இருந்தபோதும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவு இன்றியே தோல்வி அடைந்தது.

‘நாங்கள் தோல்வியடையவில்லை. பாதுகாப்புச் சபையே எம்மை தோல்வியடையச் செய்தது. நாம் மீண்டும் பாதுகாப்புச் சபைக்கு செல்வோம். ஏன் முடியாது? அநேகமாக இன்னும் ஒருவாரம் கழித்து நாம் அதனைச் செய்வோம்” என்று மேற்குக் கரை நகரான ரமல்லாஹ்வில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலாசார மாநாடொன்றில் பங்கேற்று உரையாற்றும்போது அப்பாஸ் குறிப்பிட்டார்.

ஐ.நாவில் பலஸ்தீனம் சுயாட்சி கொண்ட அரசுக்கான இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘நாம் இதனை பரிசீலனை செய்வோம். ஜோர்தான் உட்பட எமது நட்பு நாடுகளுடன் இணைந்து பரிசீலனை செய்வோம். இந்த தீர்மானத்தை மீண்டும் ஒருமுறை முன்வைப்போம். மூன் றாவது அல்லது நான்காவது முறை கூட இதனை முன்வைப் போம்” என்று அப்பாஸ் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பலஸ் தீன தீர்மானத்திற்கு ஆதரவாக 15 அங்கத்துவ நாடுகள் கொண்ட பாதுகாப்புச் சபையில் 8 நாடுகள் ஆதரவாக வாக் களித்தன. அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்ததோடு ஏஞ்சிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த தீர்மானம் மீண்டும் பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடைவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒன்றான வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, இந்த தீர்மானம் ஒரு பக்கச் சார்பானது மற்றும் ஆக்க பூர்வமற்றது என்று குற்றம்சாட்டியது.

பாதுகாப்புச் சபையில் குறித்த தீர்மானம் தோல்வி அடைந்த அடுத்த தினத்திலேயே அப்பாஸ் 20 சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தார்.

இதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் உடன்படிக் கையிலும் அவர் கைச்சாத்திட்டிருந்தார். இதன் மூலம் இஸ்ரேல் மீது யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் இந்த நடவடிக்கைகளை அடுத்து பலஸ்தீனர்களிடம் இருந்து பெறப்ப டும் 125 மில்லியன் டொலர் வரி வருவாயை இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை முடக்கியது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் அப்பாஸ் அரசு இந்த நடவடிக்கையால் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

‘தற்போது பொருளாதார தடையை எதிர்கொண்டிருக்கிறோம் – பிரச்சினை இல்லை. முடக்குதல்களும் விரிவுபடுத்தப்பட் டிருக்கிறது – அதுவும்; பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்” என்று அப்பாஸ் உறுதி அளித்தார்.

பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையும் நடவடிக்கைக்கு எதிராக அதன் மீது மேலும் தடைகளை விதிக்க இஸ்ரேல் ஆலோசனை நடத்திவரும் நிலையிலேயே மீண்டும் ஒருமுறை பாதுகாப்புச் சபைக்குச் செல்ல அப்பாஸ் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரி வருவாயை முடக்கிய இஸ்ரேலுக்கு பதிலளித்த அப் பாஸ், இஸ்ரேல் தமது மக்களை பட்டினியில் தள்ள முயற்சிப் பதாகவும் ஒரு பாரிய தண்டனையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2014 காசா தாக்குதலை இஸ்ரேல் மீதான முதல் யுத்த குற்றச்சாட்டாக தொடுக்க பலஸ்தீனம் முடிவு
05-01-2014

w-3சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனத்தின் முதலாவது குற்றச்சாட்டாக, காசா தாக்குதல் உட்பட 2014 கோடை காலத்தில் அது மேற்கொண்ட குற்றச்செயல்கள் இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹேகை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.சி.சியில் இணைவதற்கான பூர்வாங்க விண்ணப்பத்தை பலஸ்தீனம் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி சமர்ப்பித்தது. இதன்மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் குறித்து முறையிட பலஸ்தீனத்திற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 2002 ஜ{லை முதலாம் திகதி ஐ.சி.சியின் ரோம் உடன்படிக்கை அமுலுக்கு வந்தது தொடக்கம் அதில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகளில் தனி நபர்கள் மீது குற்றம் சுமத்த முடியும்.

இந்த விண்ணப்ப செயல்முறைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பலஸ்தீனத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் ஆரம்பத்தில் வழக்கு தொடுக்க முடியும். இதற்கான சட்ட தாயார்படுத்தல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் 2014 ஜ{ன் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலின் காசா, மேற்குக் கரை மீதான நடவடிக்கைகள் குறித்து பலஸ்தீனம் வழக்குத் தொடுக்க திட்டமிட்டிருப்பதாக ரமல்லாஹ்வை மையமாகக் கொண்டு இயங்கும் அல் ஹக் உரிமைக் குழுவின் இயக்குனர் ‘வான் ஜபரின் குறிப்பிட்டார்.

மேற்படி தினத்திலேயே மூன்று இஸ்ரேல் இளைஞர்கள் கடத்தப்பட்டதற்காக மேற்குக் கரை மீது இஸ்ரேல் சுற்றிவளைப்புகளை நடத்தி அதன் தொடர்ச்சியாக காசாவில் 7 வாரங்கள் மோதல் நீடித்தது. இந்த மோதலில் 2,300க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் 73 பேர் பலியாகினர்.

Share.
Leave A Reply