‘மிஸ்டர் பிர­பா­கரன்’ என்று கூறு­வதில் தவ­றே­து­மில்லை. சிங்­கள மக்கள் எதி­ரி­யையும் நண்­ப­னாக கவ­னிக்கும் மனப்­பான்மை கொண்­ட­வர்கள்.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ முதலில் பிர­பா­க­ர­னுக்கு ‘மிஸ்டர்’ என்று அழைத்­தவர். அதே­போன்று 600 பிக்­கு­களை கொன்ற கருணா அம்­மா­னுக்கு ‘மாண்­பு­மிகு அமைச்சர்’ என்ற நாமம் சூட்­டி­ய­வரும் மஹிந்­தவே ஆவார் என்று மாத்­தறை மாவட்ட ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

இதே­வேளை ஜன­வரி 9ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக்ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்­ப­டாது. அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் வர­லாற்றில் எழு­தப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். நாட்டின் பெரும் கட்­சி­க­ளான ஐ.தே.க. வும் சு.க. வும் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிடும் தேர்­த­லாகும்.

அத்­தோடு இந்த கூட்­ட­ணி­யுடன் தமிழ் முஸ்லிம் சிங்­கள மக்கள் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. நாட்டின் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தவே நாம் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

தற்­போது ஐ.தே.க. வினர் மாத்­தி­ர­மன்றி சு.க வினரும் தனக்கு வேலை­வாய்ப்­பின்றி கிராம புறங்­களில் அவ­திப்­ப­டு­கின்­றனர். இந்த யுகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இம்­முறை தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்ய அவ­ரது குடும்ப உற­வி­னர்­களே முன்வந்துள்ளனர். எனினும் அர­சி­யல்­வா­தி­யாக கள­மி­றங்­கு­வ­தாக தெரி­ய­வில்லை. குடும்­பத்­தி­ன­ருக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பிரசா­ர­மா­கவே ராஜபக் ஷவின் தேர்தல் நட­வ­டிக்கை காணப்­ப­டு­கின்­றது.

இதற்கு அப்பால் பொது­ப­ல­சேனா அமைப்பே ராஜபக்ஷவின் கைப்­பைக்குள் உள்­ளது. இதனால் மஹிந்த ராஜபக் ஷவிற்கு இன்னும் வாக்கு சரிவு ஏற்­படும்.

புலிச்­சாயம்

அத்­தோடு தற்­போது எதி­ர­ணியின் மீது புலிச்­சாயம் பூசு­கின்­றனர். எனினும் கருணா அம்மான் கே.பி. ஆகியோர் ராஜபக்ஷவசமே உள்­ளனர்.

இதற்கு அப்பால் அடிப்­ப­டை­வாத தமிழ் அமைப்­புக்கள் ராப­ஜபக்ஷ வசம். கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் சர்­வ­தேச தமி­ழீழ அமைப்பு  அனைத்தும் இத்­தேர்­தலை  புறக்­க­ணிப்­ப­தாக கூறிக்­கொண்டு  ராஜபக் ஷவை  ஆத­ரிக்­கின்­றனர்.

மிஸ்டர் பிர­பா­கரன்

இதே­வேளை, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க விடு­தலை புலிகள் தலை­வரை மிஸ்டர் என்று கூறி­ய­தாக அரசு அமைச்­சர்கள் அலட்டிக் கொள்­கின்­றனர்.

மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­யதில் தவ­றில்லை. சிங்­க­ள­வர்கள் எதி­ரியை கூட தனது நண்­ப­னாக கவ­னிக்கும் மனப்பான்மை கொண்­ட­வர்கள். இதற்கு துட்­ட­கை­முனு மன்­னனின் செயல் சிறந்த எடுத்­துக்­காட்­டாகும்.

எனினும் தான் ஜனா­தி­பதி ஆன­வுடன் வெளி­நாட்டு தூது­வர்­களின் உரை­யின்­போது மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­யவர் மஹிந்த ராஜபக் ஷவே­யாகும்.

mahinda-karuna-001அதே­போன்று அநு­ரா­த­பு­ரத்தில் 600 பிக்­கு­களை கொன்று குவித்த கருணா அம்­மானை மாண்­பு­மிகு அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் என்ற நாமம் ??? வைத்­தவர் ராஜபக் ஷவாகும்.

எனவே, இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை அலட்­டிக்­கொள்ள தேவை­யில்லை.

ராஜபக் ஷவி­னரின் பாது­காப்பு

தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெறு­வது உறு­தி­யாகி விட்­டது. தற்­போது ஐ.தே.க. தலை­மை­ய­க­மான சிறிகொத்தாவில் குடும்ப மரம் என்ற நூலை தேடி பொலிஸ் சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. குடும்ப மரம் சிறிகொத்தாவில் இல்லை. மாறாக அலரி மாளிகையில் உள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி 9ஆம் திகதி தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்பு எதிரணியினர் அமைதி காக்க வேண்டும். குழப்பம் தேவையில்லை.

அதேபோன்று ராஜபக் ஷ குடும்பத்தினரும் அஞ்ச தேவையில்லை. அவர்களது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம் என்றார்.

ஜெனிவா சவால்களை எதிர்கொள்ளவே கே.பி பாதுகாப்பாக வைத்துள்ளோம்!-சுசில் பிரே­ம­ஜ­யந்த
05-01-2015

patmanathanஜெனிவா சவால்­களை எதிர்­கொள்­ளவே குமரன் பத்­ம­நா­தனை பாது­காக்­கின்றோம். இறுதிக்கட்ட மனி­தா­பி­மான யுத்­தத்தின் உண்­மை­யான சாட்­சி­யங்­க­ளில் இவர் முக்­கி­ய­மா­னவரென தெரி­விக்கும் அர­சாங்கம் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­களை பேண வேண்­டிய அவ­சியம் தமக்கு இல்­லை­யெ­னவும்  குறிப்­பிட்­டது.

அர­சாங்­கத்­தினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரே­ம­ஜ­யந்த மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்..

suil-prema-yeyantaசுசில் பிரே­ம­ஜ­யந்த

நாட்டில் சரி­யா­ன­தொரு தலை­மைத்­து­வத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டிய முக்­கி­ய­மான தரு­ணத்தில் நாம் உள்ளோம். ஜனாதிபதித் தேர்­தலின் இறுதிக் கட்ட பிர­சார செயற்­பா­டு­களில் நாம் தற்­போது செயற்­பட்டு வரு­கின்றோம்.

தற்­போது வரையில் நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் உள்ள மக்­களை சந்­தித்து எமது ஆத­ர­வினை பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். அதேபோல் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் நாட்டில் சகல மக்­க­ளையும் சந்­தித்து மக்­களின் மனதில் நிலைத்து விட்டார்.

இறு­தி­யாக கடந்த சில தினங்­க­ளாக தமிழ் மக்­க­ளுடன் வடக்கில் எமது பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். வடக்கில் வர­லாறு காணாத தொகையில் தமிழ் மக்கள் எமது பொதுக் கூட்­டங்­களில் கலந்து கொண்­டனர்.

எமக்கு வடக்கில் மிகச் சாத­க­மா­ன­தொரு பொதுக் கூட்­டத்­தினை நடத்த நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­தது.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் மக்கள் மனங்கள் எந்­த­ளவு அடக்­கப்­பட்­டி­ருந்­தது என்­ப­தற்கு அன்­றைய பொதுக் கூட்டம் வெளிப்­ப­டுத்­தி­யது. அதேபோல் மன்­னா­ரிலும் ரிசாத் பதி­யுதீன் இல்­லாமல் மிகப் பெரிய மக்கள் கூட்டம் குவிந்­தி­ருந்­தது.

இதுவே எமது தேர்தல் வெற்­றிக்கு நல்­ல­தொரு எடுத்துக் காட்­டாகும். எனவே, தற்­போ­துள்ள நிலை­மையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் வெற்­றியில் மூவின மக்­களின் பங்­க­ளிப்பும் கிடைக்கும் என்­பதை உறு­தி­யாக எம்மால் தெரி­விக்க முடியும்.

அதேபோல் விடு­தலைப் புலி­களின் உறுப்­பி­னர்­க­ளுடன் ஜனா­தி­பதி இர­க­சிய தொடர்­பினை வைத்­தி­ருப்­ப­தா­கவும் குமரன் பத்­ம­நாதன் போன்­றோரை அர­சாங்கம் பாது­காத்து வரு­வ­தா­கவும் பொய் பிர­சாரம் செய்­கின்­றனர்.

குமரன் பத்­ம­நா­த­னுடன் ஜனா­தி­பதி கட்டித் தழு­வு­வதைப் போல் புகைப்­ப­டங்­களை பிர­சு­ரித்து அர­சாங்­கத்தின் மீது தவ­றான விமர்­ச­னங்­களை பரப்­பு­கின்­றனர்.

இவை முற்­றிலும் தவ­றா­னதும் பொய்ப் பிரச்­சா­ர­மு­மாகும். உண்­மை­யி­லேயே குமரன் பத்­ம­நா­தனை நாம் பாது­காக்க சில முக்­கிய கார­ணிகள் உள்­ளது.

அடுத்த மார்ச் மாதம் ஜெனி­வாவின் அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. தற்­போதே பல பொய்­யான சாட்­சி­யங்கள் சர்­வ­தேச தரப்­பினால் தயா­ரிக்­கப்­பட்டு விட்­டது. அதற்கு நிக­ராக உண்­மை­யான சாட்­சி­யங்­களை நாமும் வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்­தத்தில் நடந்த உண்மைச் சம்­ப­வங்­களை வெளிப்­ப­டுத்த எமக்கு இருக்கும் முக்­கிய சாட்­சியம் தற்போது குமரன் பத்மநாதன் மட்டுமே.

அதேபோல் இலங்கைக்கு வெளியில் சர்வதேச புலி அரசியல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்குள் பரவி விடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எனவே, ஜெனிவா சவாலை எதிர்கொள்ளவே குமரன் பத்மநாதனை அரசு பாதுகாக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply