பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார்.

நையாண்டி இதழான , ” சார்லி எப்தோ” மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர்.

சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார்.

ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார்.

150108022522_kouachi_brothers_624x351_frenchpolice_nocreditபிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் (Kouachi Sharif, 32, left, and Kouachi Said, 34, .)

இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

மூன்றாவது சந்தேக நபர் தான் சம்பவம் நடந்த போது வேறு இடத்தில் இருந்ததாகக் கூறி சரணடைந்திருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

மற்றொரு தாக்குதல்

பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் தாக்குதல் நடந்த மறுநாளே தெற்கு பாரீஸில்  Montrouge (Hauts-de-Seine)  மர்ம நபர் ஒருவர் திடீர் என்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

அதில் பெண் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பலியானார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புதன்கிழமை புகுந்த 2 பேர் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இந்த வழக்கில் ஒருவர் போலீசில் இன்று சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சகோதரர்கள் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை தெற்கு பாரீஸில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மலகாப் பகுதியில் இரண்டு பைக்குகள் மோதிக் கொண்டுள்ளன. இதையடுத்து இரண்டு பைக்குகளில் வந்த நபர்கள் நடுத்தெருவில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்த பெண் உள்ளிட்ட 2 போலீசார் அவர்களின் பிரச்சனையை தீர்க்க வந்துள்ளனர்.

அப்போது இரண்டில் ஒரு பைக்கில் வந்தவர் திடீர் என்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு மெட்ரோ ரயிலில் ஏறி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் 2 போலீசாரும் காயம் அடைந்தனர்.

அதில் பெண் போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். நேற்றைய சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே பாரிஸில் உள்ள மசூதி அருகே இருக்கும் லியன் ஹோட்டலில் இன்று காலை குண்டுவெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. ஆனால் கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

பாரீஸ் நகரில் அடுத்தடுத்த நாள் துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ளது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 

மசூதிகள் மீது தாக்குதல்

பிரான்ஸில் ‘சார்லி எப்தோ’ இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, பிரான்சின் பல பகுதிகளில் பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளதாக பிரான்சில் நீதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாரிசுக்கு மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டது.

பிரான்சில் இந்த சம்பவத்துக்கு பிறகு தங்கள் சமுதாயத்துக்கு எதிரான எதிர்தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்று அஞ்சுவதாக சில முஸ்லீம் பிரமுகர்கள் கூறியிருக்கின்றனர்.
அஞ்சலி நிகழ்வுகள்

இதனிடையே, பிரான்சில் , நேற்று பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் முகமாக, தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. நண்பகலில் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்படும். நோத்ர டேம் தேவாயலயத்தின் மணிகள் முழங்கும்.

நேற்றிரவு, பல்லாயிரக்கணக்கானோர் பிரான்ஸ் நெடுகிலும் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றனர். பிரான்ஸில் முஸ்லீம் தலைவர்கள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். உலகெங்கும், பல தலைவர்கள் பாரிஸ் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இது ஒரு வர்ணிக்க முடியாத கொடூரம் என்று கூறினார்.

சிட்னியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலை ஒப்புமை காட்டிப் பேசிய அவர், இஸ்லாமிய அரசு அமைப்பு உலகின் மீது போர் தொடுத்திருக்கிறது என்றார்.

மலேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசேன் இந்தக் கொலையாளிகள் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்றார்.

ஆனால் இரானின் பிரஸ் டிவி ஊடகம் வேறு மாதிரியான கருத்தை வெளியிட்டது.

பிரான்ஸில் அதிகரித்துவரும் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துணர்வு குறித்து பிரெஞ்சு அரசு கடைப்பிடித்துவரும் மௌனம்தான் நாட்டின் முஸ்லீம்கள் தாங்கள் அந்நியப்படுவதாக உணர்வதற்குக் காரணம் என்று அது கூறியது.

Share.
Leave A Reply