ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, November 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»சகல மாகாணங்களுக்கும் இராணுவ வளம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
    உள்நாட்டு செய்திகள்

    சகல மாகாணங்களுக்கும் இராணுவ வளம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

    AdminBy AdminFebruary 12, 2015No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வடக்கில் இருந்து இராணுவத்தையும் முகாம்களையும் அகற்ற மாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியிருப்பதை தமிழ் மக்களை இன்னுமொரு அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கான  வேலைத்திட்டமாகவே பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

    யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

    அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மக்களை மீளக்குடியமர்த்துமாறு  நாம்  கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் கூறப்பட்ட கருத்துக்கள் மக்களினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    சுமார் 10 இலட்சம் மக்கள் வாழும்  வடமாகாணத்தில் ஒன்றரை  இலட்சம்  இராணுவத்தினர் அவசியம் இல்லை. இலங்கையில் 9 மாகாணங்கள் இருக்கின்றன. 2 இலட்சம் இராணுவத்தினை 9 மாகாணங்களுக்கும் சரிசமமாக பிரித்துக்கொள்ள முடியும்.

    அவ்வாறு பிரித்துக்கொள்வதன் மூலம் வடக்கில் உள்ள பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படும். அந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியும்.

    இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவிற்கும் கூறியிருக்கின்றோம். மீள்குடியேற்றம் விரைவில் செய்யப்பட வேண்டும்.

    புதிய அரசினால் நிர்ணயிக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் மீள்குடியேற்றம் வேண்டும்.வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    58 சதுர கிலோ மீற்றர் விடுவிக்கப்பட வேண்டிய பிரதேசத்தில் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய பிரதேசங்களில் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பன 5.3 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் உள்ளன.

    இராணுவ குடியிருப்பு மற்றும் விவசாய விடுதிகள் இல்லாத 10 சதுர கிலோ மீற்றர் பரப்பு பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியும்.

    இந்த பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு மாதங்கள், வருடங்கள் தேவையில்லை. வலி. வடக்கு பிரதேசத்தில் 18 அதி சொகுசு விடுதிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒவ்வொரு பிரிகேடியர்களுக்கும் சொந்தமானதாகும்.

    15 அல்லது 16 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கிளிசறியா மரத்தில் இருந்து மின்சாரம் பெறக்கூடிய வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

    இவை அனைத்தும், இராணுவ பாதுகாப்பிற்காக அல்ல. இராணுவத்தினரின் சுகபோக வாழ்க்கைக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விடுதிகள், நீச்சல் தாடகங்கள், விளையாட்டு மைதா னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவை அனைத்தும் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்திலா, கடலிலா படையினர் முகாம் அமைப்பது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேட்பது முறையானதன்று.

    Post Views: 37

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புலிகளின் சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்தவர் கைது

    November 28, 2023

    வட, கிழக்கில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் : கொடிகள் பொலிஸாரால் அறுப்பு !

    November 27, 2023

    மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை துப்பாக்கியால் தன்னுயிரை மாய்தார்

    November 27, 2023

    Leave A Reply Cancel Reply

    February 2015
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    « Jan   Mar »
    Advertisement
    Latest News

    Bigg Boss 7 Day 58: `இந்துஜா என்னைக் கண்டுக்கல’- வருத்தப்பட்ட பூர்ணிமா; பஞ்சாயத்தைத் தொடங்கிய விஷ்ணு-  (வீடியோ)

    November 30, 2023

    மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் கப்பம் கோரியவர் கைது

    November 30, 2023

    உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

    November 30, 2023

    சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை; டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பு!

    November 30, 2023

    ஒல்லாந்தர் எடுத்துச் சென்ற தொல்பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு…

    November 29, 2023
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
    • தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?
    • ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • Bigg Boss 7 Day 58: `இந்துஜா என்னைக் கண்டுக்கல’- வருத்தப்பட்ட பூர்ணிமா; பஞ்சாயத்தைத் தொடங்கிய விஷ்ணு-  (வீடியோ)
    • மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் கப்பம் கோரியவர் கைது
    • உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!
    • சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை; டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பு!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      • தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?
      • ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version