வெளிநாடுகளில் உள்ள “புலி வால்” களினாலோ அல்லது அவர்கள் காட்டும் வழியில் இங்கே (இலங்கையில்) இருந்து வாலாட்டுபவர்களினாலோ எங்களுடைய மக்களுக்கு எந்தக்காலத்திலும் விடிவு வராது என சுமந்திரன் கடுமையாக புலம்பெயர் புலிவால்களை சாடியுள்ளர்.
“புலி வால்”களுக்கு சுமந்திரன் கூறிய இந்தக் கருத்து புரியுமே தெரியாது??
புலிகளையும், புலம்பெயர் புலி வால்களையும் சர்வதேச சமுதாயம் இன்றுவரை ஒதுக்கி தான் வைத்துள்ளது.
30வருடத்துக்கு மேலாக புலம்பெயர் தேசத்திலிருந்து “புலி வால்கள்” வாலாட்டிதான் பார்த்தது. ஆனால்.. இந்த வால்களை எந்த நாடுமே மதிக்கவுமில்லை, இவர்களின் போராட்டத்தையும் அங்கீகரிக்கவுமில்லை.
அப்படியிருக்க…. இதுகள் வெளிநாடுகளிலிருந்து ஏன் வாலாட்டுதுகள் தெரியுமோ? எல்லாம் வயிற்றுக்கான பிழைப்பு போராட்டம் தான்.
சுமந்திரன் சொன்னது போன்று… இந்த “புலி வால்” களால் எமது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவுமில்லை, கிடைக்கப்போவதுமில்லை.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு “புலி வால்” களினால் சம்பந்தன், சுமந்தரன் ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.