ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»செய்திகள்»ரவிராஜ் படுகொலை: 8 வருடங்களின் பின் சூத்திரதாரிகள் கைது
    செய்திகள்

    ரவிராஜ் படுகொலை: 8 வருடங்களின் பின் சூத்திரதாரிகள் கைது

    AdminBy AdminMarch 31, 2015No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

    இதில் ஒருவர் மாத்திரமே கடற்படையில் பணியாற்றுவதோடு ஏனைய கடற்படை வீரர்கள் இருவரும் முன்பு கடற்படையில் பணியாற்றியவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சந்தேக நபர்கள் கைதானதோடு இவர்கள் குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப் படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

    2006 நவம்பர் 10 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் நாரஹேன்பிட்டிய பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கருகில் வைத்து இனந்தெரியாத குழுவினால் சுட்டுக் கொலை செய்யப் பட்டார்.

    இதன்போது அவரது மெய்ப் பாதுகாவலரும் கொல் லப்பட்டார். தனது ஜிப்பினுள் வைத்து அவர்கள் இருவரும் சுடப்பட்டதோடு வாகனத்தில் பல துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன.

    அன்றைய தினம் காலை தனியார் தொலைக்காட்சி யொன்றில் இடம்பெற்ற நேர்காணலின் பின்னர் வீடு திரும்பிய அவர் உடைகளை மாற்றிக் கொண்டு வாகனத்தில் அலுவலகம் நோக்கி செல்கையிலே சுட்டுக்கொல்லப்பட்டார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவச மணிந்த இருவர் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர் தப்பிச் சென்றனர்.

    துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மெய்ப்பாதுகாவலர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதோடு நடராஜா ரவிராஜ் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனும திக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

    இந்த கொலை நடைபெற்று 8 வருடங்களுக்கு மேலாகியும் எவரும் கைதுசெய்யப்படவோ உரிய விசாரணை மேற்கொள்ளப்படவோ இல்லை என பரவலாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, நடராஜா ரவிராஜ் எம்.பி. அடங்கலான கடந்த காலத்தில் இடம் பெற்ற அநேக கொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பித்தது.

    சீ. ஐ. டி. மேற்கொண்ட விசாரணைகளையடுத்து நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள 3 கடற்படை வீரர்களும் கைதானதோடு இவர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த கொலையுடன் தொடர்புள்ள பல தகவல்கள் விசாரணையின் மூலம் அம்பலமாகும் என எதிர்பார்க்கப் படுவதோடு இந்த கொலைகளுடன் தொடர்புள்ள மேலும் நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேற்படி 3 சந்தேக நபர்களும் நடராஜா ரவிராஜின் கொலை மட்டுமன்றி கடத்தல் சம்பவமொன்று தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

    3 கடற்படை வீரர்களும் கைதான இடம், பணியாற்றிய முகாம் போன்ற தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

    Post Views: 44

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    செப்டெம்பர் மாதத்தில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

    September 23, 2023

    உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு இதுதான்… ஏன் தெரியுமா?

    September 22, 2023

    சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம்!

    September 20, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2015
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version