ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»சிறப்பு செய்திகள்»நிலவும் வானும் போல சேர்ந்­தி­ருந்த ஜெய­். வள­ர்ந்தார் எம். ஜி. ஆர். தேய்ந்தார் – (பகுதி-4)
    சிறப்பு செய்திகள்

    நிலவும் வானும் போல சேர்ந்­தி­ருந்த ஜெய­். வள­ர்ந்தார் எம். ஜி. ஆர். தேய்ந்தார் – (பகுதி-4)

    AdminBy AdminApril 4, 2015No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமி­ழ­கத்தில் முதல் முதலில் ஆளு­மை­யுடன் ஒரு பெண் அர­சி­யல்­வா­தி­யாக முழு நேர­மாக அரசியலைத் தேர்ந்­தெ­டுத்த ஜெ’யின் யின் வருகை யாருமே எதிர் பார்த்­தி­ரா­தது.

    இந்­திய நடிகை ஷபானா ஆஸ்மி இந்­தி­யாவில் அவ­ச­ர­கால சட்டம் அமு­லுக்கு வந்த காலத்தில் அதற்கு எதி­ராக நின்ற கார­ணத்தால் இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தேர்­வுக்கு பரிந்து­ரைக்­கப்­பட்­டவர்.

    ஆனால் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் இவ­ரிடம் இல்­லா­தது, ஜெய­ல­லி­தா­விடம் இருப்­பது உணர்ச்சி சார்ந்த அர­சியல். திரா­விட இயக்­கத்­தி­னரும், இந்­திய அர­சி­யல்­வா­தி­களும் உணர்ச்சி சார்ந்த அர­சி­யலில் ஊறி­ய­வர்கள்.

    mrrஅதை சினிமா மூலம் தங்­க­ளுக்கு சாத­க­மாகப் பயன்படுத்திக் கொண்­டார்கள் அறிஞர் அண்ணா முதல் ஜெய­ல­லிதா வரை அனை­வ­ருக்கும் அர­சியல் படி­யாக சினிமா அமைந்­தது.

    உணர்ச்சி பூர்­வ­மாக பேசப்­பட்ட வச­னங்கள் அமைந்­தன., அந்த சினிமா மாயையை கையில் ஏந்தி வளர்ந்­த­வர்தான் ஜெய­’ல­லிதா.
    jeya
    ஜெய­ல­லிதா முரண்­பட்­ட­போது எம்.ஜி.ஆரும், ஆர்.எம்.வீரப்­பனும் லதா­வையும், சரோ­ஜா­தே­வி­யையும், வெண்­ணிற ஆடை நிர்­ம­லா­வையும், அ.தி.­மு.­க­வுக்குள் ஜெய­ல­லி­தா­வுக்குப் போட்­டி­யாகக் கொண்­டு­வர முயன்­றார்கள்.

    சம்­பந்­தப்­பட்ட எந்த நடி­கைக்கும் ஜெய­ல­லிதா போல ஆளு­மையோ , அர­சியல் படிப்போ, சிந்­த­னையோ இருக்­க­வில்லை.
    jeyaaa
    அதனால் அத்­தனை எதிர்ப்­பையும் மீறி ஜெயின் அர­சியல் வாழ்க்கை ஜொலித்­தது.எப்­படி இந்­தி­யா­வுக்கு ஒரு இந்­திரா காந்­தியோ ஒரு காம­ரா­ஜரோ , ஒரு எம்.­ஜி.யாரோ ஒரு கலைஞர் கரு­ணா­நி­தியோ அது போல ஒரு ஜெய­ல­லி­தாதான்.

    இதை மறுக்க யாராலும் முடி­யாது, கலைஞர் உட்­பட. தமி­ழக அர­சி­யலே உணர்ச்சி அர­சி­யல்தான்.

    1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்­படை உறுப்­பி­ன­ராக தன்னை இணைத்து கொண்டார் ஜெய­ல­லிதா. அதே ஆண்டு ஜூலையில் எம்.ஜி.ஆரின் சத்­து­ணவு திட்­டத்தை மக்­க­ளிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்­சி­யான முகம் தேவைப்­பட்­டது.

    jeyaaaaaaaaaaஆரம்­பித்­தது ஜெய­ல­லி­தாவின் அர­சியல் வாழ்க்கை. ஜெ’யின் சினிமாக் கவர்ச்­சியும் பேச்சுக் கவர்ச்சியும் அத்­திட்­டத்­திற்கு புகழ் சேர்த்­தது. மக்­க­ளிடம் மட்­டு­மன்றி எம்.ஜி.ஆ­ருக்கும் மனங் கவர் மங்கை­யானார்.

    கட்­சியில் ஜெ’யின் செல்­வாக்கு உயர உயர உட்­பூ­சலும் அதி­க­ரித்­தது.

    1983ஆம் ஆண்டு அ.தி.­மு.­க.வின் கொள்கை பரப்புச் செயலர் பத­வியில் ஜெ’ய­ல­லி­தாவை எம்.ஜி.ஆர். நிய­மித்தார். ஆரம்­பித்­தது உட் கட்­சிப்­பூசல்.

    ஆர்.எம். வீரப்பன் தலை­மை­யி­லான குழு நடிகர் பாக்யராஜ், , மக்கள் குரல் பத்­தி­ரிகை போன்ற ஏவல்களைத் தூண்டி விட்டு ஜெ’யிற்கு எதி­ரான போட்­டி­க­ளைத்­தொ­டக்­கி­யது.

    எம்.ஜி.ஆர். கண்டு கொள்­ள­வில்லை. பிர­சார வேன் ஒன்றை பிரத்­தி­யே­க­மாகத் தந்து ஜெ’யை ஊர் ஊராக அனுப்­பினார்.

    எம்.ஜி.ஆரின் உத்­த­ர­விற்­கி­ணங்க ஜெய­ல­லி­தா­விற்கு அந்த பேச்­சுக்­களை எழு­தித்­தந்­தவர் வலம்­புரி ஜான் .எம்.ஜி.ஆருக்கு அடுத்­த­ப­டி­யான மரி­யா­தையை தொண்­டர்கள் தர தமி­ழ­கத்தை சுற்­றி­வந்தார். ஜெயின் அர­சியல் கொடி ஜே ஜே என்று பறந்­தது.உட் பூசல் உயர்ந்­தது.

    எம்.ஜி.ஆர். யார் பொறாமை பற்­றியும் கவ­லைப்­ப­ட­வில்லை. அவர் காலால் இட்ட பணியை தலையால் செய்த ஜெ’யின் முனைப்பு அவ­ருக்கு பிடித்­தி­ருந்­தது.

    jeyaaaaaaaaaaa
    டெல்லி அர­சி­ய­லுக்குத் தேவை­யான தகு­தி­க­ளான ஜெயின் ஞாபக சக்தி, ஆங்­கிலப் புலமை ஆகி­யவை பேச்­சாற்­ற­லுக்குத் துணை போயின.இவையே அவ­ருக்கு ராஜ்­ய­சபா எம்.பி. பத­வி­யையும் வாங்கித் தந்தது.

    ராஜ்­ய­சபா குழுவில் அ.தி.மு.க., துணைத் தலை­வ­ரா­கவும் உயர்ந்த இவ­ரது பேச்­சுக்கள் அப்­போ­தைய பிர­தமர் இந்­தி­ரா­வி­டமும் பாராட்டை பெற்­றது.

    ஜெ.,க்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­வ­தாக நேர­டி­யா­கவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்­டி­யவர் அப்­போது வரு­வாய்­துறை அமைச்­ச­ராக இருந்த எஸ்.டி.சோம­சுந்­தரம்.

    அவர் வச­மி­ருந்த முக்­கி­யத்­து­றை­களை பறிக்கப்பட்­டன. பின்­னாளில் அதே எஸ்.டி.எஸ் ஜெயலலிதாவின் அமைச்­ச­ர­வையில் இடம் பிடித்­தது வர­லாறு. பதவி பற்­றிய பயத்தில் அமைச்­சர்கள் தனக்கு கீழ் இருப்­ப­தையே விரும்­பினார்.

    இந்த கால கட்­டத்தில் எம்.ஜி. ஆருக்கு மிக நெருக்­க­மாக இருந்­த­வர்­க­ளுக்கு இடையில் யார் எம்.ஜி ஆரின் அடுத்த அர­சியல் வாரிசு என்­பதில் பனிப்போர் நடந்து கொண்­டி­ருந்­தது. .

    எஸ்.டி.எஸ் சந்­தித்த சோதனை மற்­ற­வர்கள் ஜெ’ பற்றி பேசவே அச்­சத்தை தந்­தது. எம்.ஜி. ஆருக்­குக்கும் இந்த அர­சியல் விளை­யாட்டு பிடித்­தி­ருந்­தது.

    ஜெயின் ஆளு­மையின் முன் அனை­வரும் மிகச் சிறி­ய­தா­கவே காட்சி அளித்­தார்கள். அர­சியல் அவ­ருக்கு முழு நேரத் தொழில் என்­பதன் அறி­விப்பு 1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதா­னத்தில் நடை­பெற்ற அனைத்­து­லக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் அரங்­கேற்­றப்­பட்­டது.

    வெள்ளி செங்கோல் ஒன்றை எம்.ஜி.ஆருக்கு பரி­ச­ளித்து தானே “அர­சியல் வாரிசு” என்­பதை அடையா­ளப்­ப­டுத்திக் கொண்டார் ஜெ. இது அவர் அர­சியல் வாதி­யாக மாறி வந்­த­த­ற்­கான ஆரம்ப அறி­கு­றி­யாகும்.

    ஒரு மூத்த பத்­தி­ரி­கைக்­காரர் சட்ட சபையில் வேட்டி கட்­டாத ’ஒரே மான­முள்ள ஆண் மகன் ஜெய­ல­லிதா’ தான் என்று கூறி­யது தமி­ழக அர­சி­யலில் அதிக பட்ச நகைச்­சுவை.

    தமி­ழக அர­சி­யலில் பெண்­ணுக்கு செல்­வாக்கு, திரா­விடர் அல்­லா­தவர், கன்­னட பூர்­வீகம்.தொழில் நடிகை. இவை போதாதா, வெறும் வாயை மெல்­வோர்க்கு?

    ஜெ’யின் சாதி, மொழி , வர்க்கம் , தொழில் இவை யாவுமே கேவ­ல­மாக விமர்­சிக்­கப்­பட்­டது. பொம்­பளை, பாப்­பாத்தி, இன்னும் பல கேவ­ல­மான அறி­மு­கங்­க­ளுடன் விளிக்­கப்­பட்டார்.

    அவ­ரது கடந்த காலம் கடு­மை­யாக ஒழுக்கம் சார்ந்து விமர்­சிக்­கப்­பட்­டது. அர­சியல் என்ற பாதா­ளத்தில் மலர்­களை விட முட்­களே அதிகம் என்­பதை அப்­போ­தி­ருந்த அர­சி­யல்­வா­திகள் உணர்த்­தினர். ஆனால் எதற்கும் அச­ராத ஜெ’யும் வெட்ட வெட்டத் தளைத்தார்.

    அப்­போது தான் யாரும் எதிர்பார்க்­காத அந்த சோகம் நடந்­தது. எம்.ஜி.ஆருக்கு திடீ­ரென்று உடல் நலக்­கு­றைவு ஏற்­பட்­டது.

    இதனைத் தொடர்ந்து அவர் 5_10_1984 இரவு சென்­னையில் உள்ள அப்­பலோ வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

    எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்­துமா தொந்­த­ர­வினால் பாதிக்­கப்­பட்டு இருப்­பதால், அதற்கு சிகிச்சை பெறு­வ­தற்­கா­கவும், ஓய்வு எடுப்­ப­தற்­கா­கவும் அவர் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது.

    பின்னர் தலைப்­ப­கு­தியை `எக்ஸ்ரே’ படம் பிடித்து பார்த்­ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்­பது தெரி­ய­வந்­தது.

    ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்­புகள் இயங்­கு­வது சீராக உள்ளது என்றும் சிகிச்­சைக்­காக எம்.ஜி.ஆர். அமெ­ரிக்­கா­வுக்கு கொண்டு செல்­லப்­ப­டுவார் என்று கூறப்பட்டு வந்­தது.

    இதற்­காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்­தப்­பட்­டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரி­சோ­திக்க பம்­பாயில் இருந்து மருத்­து­வர்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டார்கள். ஜப்­பானில் இருந்தும் அமெ­ரிக்­காவில் இருந்தும் மருத்­து­வர்கள் வந்­தார்கள்.

    எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட பல மேல்மட்ட தொண்­டர்கள் அதிர்ச்­சியால் தீக்­கு­ளித்தும், தற்­கொலை செய்தும், உண்­ணா­வி­ரதம் இருந்தும் மாண்­டனர்.

    எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்­பதி சென்று, பிரார்த்­தனை செய்தார். அவரை பார்க்க பிர­தமர் இந்­திரா காந்­தியும் வந்தார்.

    இதற்­கி­டையே, பிர­தமர் இந்­திரா காந்தி அக்­டோபர் 31 , 1984 அன்று டெல்­லியில் அவ­ரு­டைய மெய்க்­கா­வ­லர்­க­ளா­லேயே சுட்டுக் கொல்­லப்­பட்டார்.ராஜீவ் பிரதமர் ஆனார்.

    எம்.ஜி.ஆரை சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புரூக்ளின் மருத்துவமனைக்கு, அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடந்தன.

    எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    மறந்தும் கூட ஜெ’யலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ.

    எம்.ஜி.யார் அமெரிக்காவில் இருந்தபோது தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஜெ’ அரசியலில் தன்னை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு இது.

    வழக்­க­றிஞர் கலா­நிதி சந்­தி­ரிகா சுப்­ர­மண்யன்

    Post Views: 128

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள்

    September 22, 2023

    ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி

    September 11, 2023

    உலகிலேயே மிகவும் வயதானவர்: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 120 வயது கேரள மூதாட்டி

    September 2, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2015
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version