தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையில் உள்ள தனது வீட்டில் ரகசியமாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்து சன் டி.வி. யின் ஒளிபரப்புக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 300 கோடி ரூபா அளவிலான இந்த ஊழல் புகாரில் தயாநிதியை எந்த நேரமும் சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜாமீன் வழங்கப்பட்டால் இவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடக்கூடும் என்ற சந்தேகமும் சி.பி.ஐ.க்கு இருக்கிறதாம்!
சுமார் ஆயிரம் கோடி ரூபா ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் தயாநிதி மாறன் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல்கள்தான் லேட்டஸ்ட் பரபரப்பு.
இது தொடர்பாக டெல்லி தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் மனுவில் பகீர் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன!
சமீப நாட்களாக வாட்ஸ் அப்களில் அதிகம் அடிபடும் விவகாரம் மாறன் சகோதரர்கள் சம்பந்தப்பட்டதுதான்!
தங்களது மீடியா நிறுவனங்களை கைமாற்றி விட்டு இவர்கள் எஸ்கேப் ஆக இருப்பதாகத் தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவர்களில் கலாநிதி மாறன் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு உள்ளது. தயாநிதி மீது ஏர்செல் மேக்சிஸ் மட்டுமல்லாமல் சென்னையில் முறைகேடாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்த வழக்கும் பாய்ந்திருக்கிறது.
தயாநிதி மத்திய அமைச்சராக இருந்த போது சென்னையில் உள்ள தனது வீட்டில் ரகசியமாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்து சன் டிவியின் ஒளிபரப்புக்கு உதவியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 300 கோடி ரூபா அளவிலான இந்த ஊழல் புகாரில் தயாநிதியை எந்த நேரமும் சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கிடையே 700 கோடி ரூபா அளவிலான ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கிலும் தயாநிதிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இந்த வழக்கில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டில் டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதை தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசிய மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் உட்பட சம்பந்தப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தச் சூழலில் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் தனி நீதிமன்றம் ஏர்செல் –மேக்சிஸ் வழக்கை விசாரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மாறன்கள் மனு போட்டனர்.
ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனி நீதிமன்றத்திலேயே விண்ணப்பிக்கும்படி கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் மார்ச் 2 ஆம் திகதி தனி நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆஜரான மாறன் சகோதரர்கள் தனித்தனியாக ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த மார்ச் 16 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாறன்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அன்று இந்த வழக்கு டூ ஜி வழக்கில் இருந்து வேறுபட்டது. எனவே இந்த தனி நீதிமன்றம் இதனை விசாரிக்கக்கூடாது என மாறன் சகோதரர்கள் இருவரும் தனித்தனியாக மனு போட்டனர்.
இது ஒரு புறமிருக்க இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்ப குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவை என சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே. கோயல் கோரிக்கை வைத்தார்.
அதன்படி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏர்செல் –மேக்சிஸ் வழக்கில் மாறன்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் அன்று நடைபெற இருக்கிறது.
இதில் ஹாட், தயாநிதிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக் குறிப்பிட்டு மார்ச் 16 ஆம் திகதி தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் ஒரு மனுதான்.
அதன் நகல் நமக்கு கிடைத்தது. அதில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான டெல்லி சி.பி.ஐ. துணை பொலிஸ் சூப்பிரெண்டு எஸ்.கே.சின்ஹா விரிவாகவே பல தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
தயாநிதி உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 ஆவது பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 7, 12, 13 (2), 13 (1) (டி) ஆகியவற்றின் கீழ் இந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தயாநிதி 2004 மே முதல் 2007 மே வரை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக பதவி வகித்தவர். அப்போது தனது சகோதரர் கலாநிதி மற்றும் இதர குற்றவாளிகளுடன் இணைந்து குற்றச்சதியில் ஈடுபட்டிருக்கிறார்.
தனது அமைச்சர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்திற்கு ஏழு தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான உரிமம் வழங்குவதை திட்டமிட்டு காலதாமதம் செய்திருக்கிறார்.
ஏர்செல் நிறுவனத்தை தொலைத்தொடர்பு வணிகத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னர் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்த பிறகு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதன் பிறகு மேக்சிஸ் தன்னைச் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.
அதாவது மொரிஷியஸைச் சேர்ந்த சவுத் ஆசியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலமாக 549 கோடி ரூபாயும் இங்கிலாந்தின் அஸ்ட்ரோ அல் அசியாவின் துணை நிறுவனங்கள் மூலமாக 193 கோடி ரூபாவும் சன்டைரக்ட் முதலீடாகப் பெற்றிருக்கிறது.
இந்தத் தொகைகளை சன் டைரக்டின் இயல்பான பங்கு மதிப்பைத் தாண்டி தயாநிதி சட்டவிரோதமாக தனது சகோதரர் கலாநிதி மூலமாக பெற்றிருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி அதிகமான பின்புலங்கள் உடையவர். குறிப்பாக சென்னையில் இவரது செல்வாக்கு அதிகம்.
எனவே இந்த வழக்கின் சாட்சிகளை இவர் தனக்கு சாதகமாக திருப்ப வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த வழக்கில் குறிப்பிட்ட சில கோணங்களில் இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணை நடைமுறையை இவர் கெடுக்கக்கூடும்.
கடந்த காலத்தில் உயர் பதவியை தவறாகப் பயன்படுத்திய இவர் இப்போதும் விசாரணை நடைமுறைகளில் தலையிடும் வாய்ப்பு இருக்கிறது. இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை.
நாட்டை விட்டு இவர் வெளியேறி வழக்கு விசாரணையில் பங்கு பெறாமல் இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே இந்த வழக்கின் நலன் கருதி இவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார் சி.பி.ஐ. அதிகாரி எஸ்.கே. சின்ஹா.
இந்த வழக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு தாமதமாவதை சி.பி.ஐ. யால் தவிர்க்க முடியவில்லை.
ஆகஸ்ட் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது மாறன் சகோதரர்களின் ஜாமீன் மனுக்களை நிராகரிக்க வலியுறுத்தி சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதங்களை வைப்பார் எனத் தெரிகிறது.
இந்த வழக்கில் ஆவணங்களை மறைத்து வைக்கவும் சாட்சிகளைக் கலைக்கவும் தயாநிதி மாறன் தயங்க மாட்டார். மேலும் ஜாமீன் வழங் கப்பட்டால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக்கூடும் என்கிற சந்தேகமும் சி.பி. ஐ.க்கு இருக்கிறது.
தவிர இதே வழக்கு தொடர் பாக மத்திய அமுலாக்கப் பிரிவும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக் கிறது.
அவர்கள் சம்பந்தப்பட்ட நிறு வனங்களின் சொத்துக்களை முடக்கி வைக்க வாய்ப்பு உள்ளது. அதிலிருந்து தப்பும் விதமாக மாறன்கள் தங்களின் சொத்துக்களை விற்கும் முயற்சியில் இருக்கிறார்களா? என்பதையும் விசா ரணை ஏஜென்ஸிகள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்க ளின் ஆடு புலி ஆட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்கள்!