யாழ்.கோண்டாவில் பகுதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் பொலிசாருடன் மல்லுக்ட்டி நிற்கும் இளைஞர்கள்.
யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் துடிதுடித்துப் பலியாகியிருந்தார்.
தனியார் பிஸ்கட் நிறுவனத்துக்குச் சொந்தமான கன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து பலாலி வீதியின் ஓரமாகக் கதைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தைச் செலுத்தியவர் சிங்கள பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவராகவுள்ள நிலையில்.. குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வாகனத்தை எடுக்கவிடாமல் மறித்து நீதி கேட்டு போராடும் பொதுமக்கள்.
இந்த களோபரத்தில்... தூசண வார்த்தைகளை உதிர்க்கும் ஒலிகளும் கேட்கின்றன.
ஆனால்…. என்னதான் முன்னேற்றம் வந்தாலும் யாழ்பாணத்தார் “செந்தமிழ்” பேசுவதை நிறுத்தமாட்டார்கள.
யாழ்பாணத்து ஆண்களுக்கு வாயை திறந்தாலே முதலில் செந்தமிழ்தான் வரும்.
வெளிநாடுகளில், புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும் இன்னும் செந்தமிழ் (தூசணம்) பேசுவதை மறக்கவில்லை.
வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கும் அதை சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.