ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    மூன்று சகோதரர்களாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே வித்யா கொல்லப்பட்டார்

    AdminBy AdminMay 15, 2015No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் ( 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (34) மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் (32) ஆகிய சகோதரர்கள் நேற்று இரவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் இவர்கள் வைகப்பட்டுள்ளார்கள்.

    பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற வித்யாவை கடத்திச் சென்ற இவர்கள் அவரது பாடசாலை கழுத்துப்பட்டி மற்றும் இடுப்புப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தி அவரது கைகள் இரண்டையும் மரத்தின் பின்பாகவும் கால்களை மரத்திலும் கட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவரது பிறப்பு உறுப்பையும் மோசமாக சிதைத்ததாகவும் , இதனால் வித்யாவின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் சம்பவ இடத்துக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வித்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாருக்கு சந்தேக அடிப்படையில் வழங்கப்பட்ட தகவலின் பேரில் சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்களின் வீட்டில் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

    இதேவேளை, வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று தீவுப்பகுதியின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொட்டும் மழையிலும் வீதிகளில் நின்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொலையாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

    இந்த கொலை தொடர்பில் பல சமூக அமைப்புக்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன், கொலையாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை: மூவர் கைது; இறுதி கிரியைகள் இன்று!!

    manaviaaaa
    யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புங்­குடுதீவில் பாட­சாலை மாணவி ஒருவர் பாலி யல் துஷ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

    புங்­குடுதீவு 8ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த சிவ­லோக நாதன் வித்­தியா என்ற 18 வய­து­டைய மாண­வியே இவ்­வாறு கொடூ­ர­மாக படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

    நேற்று முன்தினம் பாட­ச­லைக்கு சென்ற மாணவி வீடு திரும்­பா­த­தை­ய­டுத்து பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பொலிஸாருக்கு கிடைத்த   தக­வலின் அடிப்­ப­டையில் சடலம் மீட்­கப்­பட்­ட­தா­கவும் இக்­கொ­டூர செயலை புரிந்­தமை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த மூவரை தேடி வருவதா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர  தெரிவித்தார்.

    பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு பின்னர் சுவா­சிக்க முடி­யா­த­வாறு செய்து அம்­மா­ணவி படு­கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது பிரேத பரி­சோ­தனை அறிக்­கையின் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

    11216049_781834065266153_102129206_nசம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

    நேற்று முன் தினம் புதன் கிழமை வழமை போன்று வித்­தியா பாட­சா­லைக்கு சென்­றுள்ளார். புங்­குடு தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர் தரத்தில் கற்கும் அவர் நேற்று முன் தினம் பாட­சாலை விட்டு வெகு நேரமா­கியும் வீடு­தி­ரும்­பா­ததால் பெற்றோர் பாட­சா­லைக்கு சென்று தேடி­யுள்­ளனர்.

    எனினும் மாணவி தொடர்பில் தகவல் கிடைக்­கா­ததால் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்தில் அவர்கள் முறை­யிட்­டுள்­ளனர்.

    குறித்த மாணவி வழ­மை­யாக பாட­சாலை செல்லும் பாதை­யா­னது சற்று பாழ­டைந்­தது என குறிப்­பிடும் பொலிஸார் நேற்று கலை அந்த பாதையில் சந்­தே­கத்­துக்கு இட­மான பாதணி ஒன்றை அவ­தா­னித்து அது தொடர்பில் தகவல் வழங்­கி­யுள்ளார்.

    இத­னை­ய­டுத்து விட­ய­மா­னது உட­ன­டி­யாக ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­ப­டவே அங்கு சென்ற பொலிஸார் சட­லத்தை மீட்­டுள்­ளனர்.

    குறித்த பாழ­டைந்த பாதையில் இருந்து 15 மீற்­றர்கள் உள்ளே புதர் காட்­டினுள் அலரி மரத்தில் இருகால்களும் கட்­டப்­பட்ட நிலையில் நிர்­வா­ண­மாக இருக்க பனை ஓலை ஒன்று அதன் மேலால் போடப்­பட்­டி­ருந்த நிலையில் பொலிஸார் சட­லத்தை மீட்­டனர்.

    சட­லத்தை மீட்கும் போது மரம உறுப்பு பகு­தியில் இரத்தம் தோய்ந்­தி­ருந்த நிலையில் சம்­பவ இடத்­துக்கு விரைந்த யாழ். நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சடலம் மீது உடன் பிரேத பரி­சோ­தனை நடத்­தவும் குற்றவாளி­களைக் கைது செய்­யவும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார்.

    இத­னை­ய­டுத்து விஷேட பொலிஸ் குழு­வொன்று விசா­ர­ணை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட, சட­ல­மா­னது யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு பிரேத பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது.

    பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யா­னது நேற்று மாலை ஆகும் போது பொலி­ஸா­ருக்கு கிடைத்த நிலையில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தின் பின்னர் சுவாசம் தடை செய்­யப்­பட்டு மாணவி படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

    இந் நிலையில் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள ஊர்காவற்றுறை பொலிஸார் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை சந்தேகத்தின் பேரில் தேடி வருவதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்திஅயட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

    பிந்திய செய்தி

    விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.
    அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரின் இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். -9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

    புங்குடுதீவில் இன்று வெள்ளிக்கிழமை (15) கடையடைப்பு நடைபெறுகின்றது.

    மாணவியின் இறுதிக் கிரியைகள்  வெள்ளிக்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில்  தீவகத்துக்கான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    Post Views: 6

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் -மகிந்த

    March 27, 2023

    தங்கலை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டி விவசாய உத்தியோகத்தர் கொலை.

    March 27, 2023

    மாணவனை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 வயதான மாணவன்: கம்பஹாவில் சம்பவம்!

    March 27, 2023

    Leave A Reply Cancel Reply

    May 2015
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version